There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

வார்த்தைகள் தேவையா?

Jul 19, 2013


(Pls don’t go to the depth of analysing whether this is true or imaginary. Just read and comment ur views.. It’d be better if u read this in the voice of NEP Samantha ;) )


Dear Karthik,

உனக்குத் தெரியுமா? நான் உனக்காக நிறைய லவ் லெட்டர்ஸ் எழுதியிருக்கேன். ஆனா அதையெல்லாம் உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்குத் துணிச்சல் வந்ததில்ல. எப்போ நீ என் பக்கத்துல உட்கார்ந்து, என்கிட்ட கோபப்படாம, என்னைப் பார்த்துச் சிரிச்சிட்டே பேசுறியோ அப்போ அந்த லெட்டர்ஸை எல்லாம் உனக்குக் காட்டலாம்னு இருக்கேன். சோகம், ஏக்கம், தாபம், காதல்னு பலமூட்ல நான் எழுதுன அந்த லெட்டர்ஸை எல்லாம் படிச்சிட்டு நீ காட்டுற ரியாக்ஷன்ஸை நான் நேரில் பார்க்கனும். ஆனா நீ தான் வில்லன் ஆச்சே! எல்லாத்தையும் வாசிச்சிட்டு ரொம்ப சாதாரணமா ஒரு சிரிப்பு சிரிப்ப :( அதுலயே நான் அவுட். ஏன்னா, உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே கள்ளம் கபடம் இல்லாத அந்த smile தானே கார்த்திக்?

அய்யய்யயோ ஆனந்தமே.. நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..”னுகும்கிபடத்துல இருக்குற அந்த song-ஐ இதுவரை 1000 தடவை கேட்டிருப்பேன். ஏன் தெரியுமா? “அந்தப் பாட்டை இதுவரைக்கும் 100 தடவை கேட்டுட்டேன்...இன்னும் கேட்டுட்டே இருக்கேன்னு நீ சொன்னதிலிருந்து தான்! அந்தப் பாட்டுல வர்ற எந்த அம்சம் உனக்குப் பிடிச்சிருக்கும்? இசையா, வரிகளா, வார்த்தைகளா, அந்த ‘feel’-லா? எதுன்னு தேடித் தேடி இருக்கா இல்லையானு தெரியாத ஒரு அர்த்தத்தை நானே கற்பனை பண்ணிக்கிட்டேன். “நெற்றியில் குங்குமம் சூட.. இள நெஞ்சினில் இன்பமும் கூட.. மெதுவா.. வரவா.. தரவா…”னு வர்ற வார்த்தைகளை கேட்டப்போ நீ யாரை நினைச்ச கார்த்திக்? (லக்ஷ்மி மேனன்னு சொல்லி எனக்குத் தொப்பி கொடுத்துறாத) :))

உலகத்துல எத்தனையோ ஆண்கள் இருந்தும் உன் ஒருத்தனை மட்டும் ஏன் இப்படிப் பிடிச்சிட்டுத் தொங்கனும்னு நான் என்மேலேயே நிறைய தடவை கோபப்பட்டு யோசிச்சிருக்கேன் கார்த்திக். அப்பெல்லாம் உன் காதல் முகம் மட்டும் என் கண்ணுக்குள்ள வந்து மத்த எல்லாத்தையும் மறைச்சிரும்.

வார்த்தைகளின்றித்
தவிக்கும்
சிறுகுழந்தையாகிப்
போகிறேன்
உன்மீதான என் காதலை
விளக்க முயலும்
போதெல்லாம்!

காதலுக்குக் காரணங்கள் தேவையில்லை கார்த்திக். அது ஒரு நிகழ்வு. அது ஏற்படும் அந்தக் கணம் தெய்வீகம். காரணத்தோடு வந்தா அதுக்குப் பெயர் காதலானு எனக்குத் தெரியல. நான் உன்னை முதன்முதலா photo-ல பார்த்தப்போ எனக்கு special-ஆ எதுவும் தோணல. சீக்கிரமே நாம நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். அதுவும் அப்போ நான் போட்ட கண்டிஷன்ஸ் உனக்கு நினைவிருக்கா? எனக்கு இருக்கு. “என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது; என்னை propose பண்ணக் கூடாது”. விதியைப் போட்ட நானே அந்தச் சதிக்குள் விழப்போறேன்னு அப்போ எனக்குத் தெரியாதே :)

நீ விழவெச்சிட்ட. உன் புன்னகை, கம்பீரம், குழந்தைத்தனம், humour, என்னைபாப்பானு கூப்பிடுறது, உன் அட்டகாசமான voice, நேரில் வந்தப்போ கட்டிப்பிடிச்சது, முத்தம் கொடுத்தது, என் கைபிடிச்சிட்டே ரொம்ப தூரம் walk போனது, எதுல விழுந்தேன்னு யோசிச்சதுல இப்படி ஒரு லிஸ்ட்டே வருது. நான் எதைனு சொல்றது?

பேசிக்கொண்டே இருக்க
விஷயங்களும்
கொடுத்துக் கொண்டேயிருக்க
முத்தங்களும்
எங்கிருந்து குறையாமல்
எடுக்கிறாய் நீ?

கார்த்திக், உன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது உன்னோட கண்ணியம். பொண்ணுங்ககிட்ட வழியாம பேசுறது. நானே விளையாட்டுக்கு யாரையாவது உன்னோடு சேர்த்து வெச்சு பேசினா கூடஅப்படியெல்லாம் பேசாத பாப்பானு கொஞ்சுற குரல்ல நீ சொல்றது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். இப்படியே பேசிப் பேசி, அம்மா அப்பா மேல கூட possessive-வா feel பண்ணாத என்னை நீ எப்படி மாத்திட்ட தெரியுமா? “எனக்கு லக்ஷ்மி மேனன் பிடிக்கும்னு ஒருதடவை casual-லா நீ சொல்லிட்டுப் போயிட்ட. யாரும் பார்க்காம உட்கார்ந்து புழிஞ்சிப் புழிஞ்சி நான் அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும். Shame shame :)

ஒரு நிலவும்
சில நட்சத்திரங்களும்
இந்த இரவும்
உன் கவிதைகளுக்காக...
உன் காதலுக்காக?
நான் மட்டும்.

நீ எனக்குக் கொடுக்குற சுதந்தரத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. என்னோட ஜிமெயில், ஃபேஸ்புக், Net banking-னு எந்த அக்கவுண்ட் பாஸ்வேர்டும் உனக்குத் தெரியாது. கொடுத்தாலும் அலட்டிக்காம வேண்டாம்னு சொல்லிடற. என்னை அந்த அளவுக்கு நம்புறியா கார்த்திக்? ஆமா, உன்கிட்ட தான் என்னால எதையும் மறைக்க முடியறது இல்லையே! மனசுல ஏதோ கவலை இருந்தாலும் வெளியே காட்டிக்காம உன்கிட்ட phone-ல மறைச்சுப் பேசுற ஒவ்வொரு தடவையும் என்னோட அந்தச் சின்ன voice modulation வெச்சே கண்டுபிடிச்சிடுறியே, அது என்ன magic கார்த்திக்?

ஒரு சின்ன விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதுல நீ எனக்குத் தர்ற கருத்துச் சுதந்தரம், சுயமா முடிவுகள் எடுக்க என்னை அனுமதிக்கிறது, எனக்குனு ஒரு free space தர்றது, அதேசமயம்எப்படியும் போனு விடாம நான் செய்றதை criticise பண்றது, அதை straight forward ஆ என்கிட்ட சொல்றது, என்னைத் திட்டுவது, அழவைப்பது, கொஞ்சுவது, பாராட்டுவது, motivate செய்வது.. மொத்தத்துல ஒரு ரமணிசந்திரன் நாவல் hero மாதிரி U match all the qualities of my dream-boy. இதற்குமேல் உன்னை விட்டுட்டு என்னால் போக முடியுமா கார்த்திக்? சொல்லேன்..

ஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மேல முழு நம்பிக்கை, ஒரு விதமான secure feel வந்ததுக்கு அப்புறம், நிறைய விஷயங்கள்ல அவன்மேல impress ஆன அப்புறம் காதல் வர்றதுல ஆச்சர்யமே இல்ல. ஆனா நீ எப்போ என்னை விரும்ப ஆரம்பிச்ச கார்த்திக்? பொண்ணுங்ககிட்ட வழியாத நீ கூட ஏதோ ஓர் இடத்துல என்கிட்ட விழுந்துட்டனு நினைக்கும் போது என் வாழ்க்கையிலேயே எப்பவும் இல்லாத பெருமை இப்போ எட்டிப்பார்க்குதுனு சொல்றதுல நான் ஏன் வெட்கப்படனும்?

என்னிடம் இருக்கும்
உனக்கு மட்டுமே
சொந்தமானவைகள்
ஏராளம்..
அவைகளுள்
முதன்மையானது
எனது வெட்கம்!

Books வாசிக்கிறத பத்தி நாம அதிகமா பேசியிருக்கோம். நீ ஒரு voracious reader-னு தெரிஞ்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த மாதிரி ஒரு partner அமையறது குதிரைக் கொம்புனு எனக்கு நல்லாத் தெரியும். Birthday-க்கு book வாங்கி gift பண்ற காதலன்/காதலியை எத்தனை பேருக்குப் பிடிக்கும் கார்த்திக்? அந்த சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற category நான். Controversial புத்தகங்கள் பத்தியும் எழுத்தாளர்கள் பத்தியும் அதுல படிச்ச விஷயங்கள் பத்தியும் எவ்வளவோ பேசியிருக்கோம். இதுவரை நம்ம வாழ்க்கைல நடந்த ஏகப்பட்ட விஷயங்களைக் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம share பண்ணிக்க நம்மளால முடிஞ்சதுக்கு அதுவும் ஒரு காரணம். ரெண்டு பேருக்குமே இது முதல் crush இல்லைங்கறது உட்பட!

உன்கிட்ட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? நீ உங்க அம்மா மேல வச்சிருக்குற பாசம். பொதுவா எந்தப் பொண்ணும் அதை நினைச்சு பயப்படத்தான் செய்வா. ஆனா அந்த விஷயம் தான் என்னை ரொம்ப impress பண்ணுச்சு தெரியுமா? அம்மாகிட்ட பாசத்தைக் கத்துக்கிட்டவனுக்குத் தான் மனைவி மேல பாசம் காட்ட முடியுங்கறது என்னோட லாஜிக். அப்படி இருக்குறவனால தான் ஒரு பொண்ணு அவளோட அம்மாகிட்ட எவ்ளோ attached-டா இருப்பான்னும் புரிஞ்சிக்க முடியும். உங்க அழகான குடும்பத்துல என்னையும் சேர்த்துக்குவீங்களா கார்த்திக்?

கைபிடித்து நடைபழக்கிய
அன்னைக்கும்
என் கரம்பிடித்து
வாழ்க்கை நடத்தும்
உனக்கும்
எத்தனை வித்தியாசங்கள்?

கொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரியில்ல குட்டி. நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்ல. நம்ம ரெண்டு பேரும் நேரில் பார்த்து நாள்கணக்காச்சு. தினமும் 24 மணிநேரத்துல (24 x 60 = 1440 நிமிடங்கள்) நீ என்கிட்ட பேசுற நேரம் வெறும் 7-10 நிமிஷம் தான். மீதி 1430 நிமிஷமும் உன்னை ‘143’ னு சொல்லிகிட்டே இருக்கச் சொல்லல. எனக்காக, என்கிட்ட பேசுறதுக்காக, நான் பேசுறத கேட்குறதுக்காக இன்னும் கொஞ்சம் (கொஞ்சூண்டு தான்) நேரம் ஒதுக்கேன்? (அய்யய்யோனு கத்தாத! இதையே தாங்கிக்க முடியலைனா, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்கிட்ட பேசிட்டே இருப்பேனே, அப்போ என்ன செய்வ?) :P

ஏதோ ஒரு காரணத்துக்காக நீ என்னை அவாய்ட் பண்றது தெரிஞ்சு, ஒரு வேளை உனக்கு என்னைப் பிடிக்கலையோனு மனம்குலைஞ்சு போய் ஒரு நாள் உன்கிட்ட சண்டை போட்டேன். “தயவு செஞ்சு என்னை விட்டுப் போய்டு.. டார்ச்சர் பண்ணாதனு சொன்னேன். அதோட நீ என்னைவிட்டுப் போய்டுவனு நினைச்சுக் கூட பயங்கரமா அழுதேன் கார்த்திக். ஆனா எப்பவும் போல ஒரு 5 நிமிஷம் கூட பொறுக்காம நீ எனக்கு phone பண்ணி எதுவுமே நடக்காதது மாதிரி பேசி. பேசிட்டு cut பண்றதுக்கு முன்னாடி உன்கிட்ட பேசாம எல்லாம் என்னால இருக்க முடியாதுனு சொன்னியே? என்னால மட்டும் உன்கிட்ட பேசாம எப்படிடா இருக்க முடியும்?

பெங்களூர்ல இருந்தப்போ Friends ஓட partying-னு சொல்லிட்டு ஒரு நாள் ராத்திரி full booze-ல எனக்கு phone பண்ணிஐ லவ் யூ செல்லம்னு ரோட்டுல நின்னு கத்துனது உனக்கு ஞாபகம் இருக்கா? என்னால மறக்க முடியாது. நீ என்னை உயிராக் காதலிக்கிறனு எனக்குத் தெரிவிச்ச நிறைய நொடிகள்ல இதுவும் ஒன்னு.. “நீ பேசலன்னா செத்துப் போயிருவேன்னு உன்னைத் தவிர வேற யாருமே என்கிட்ட சொன்னதில்ல கார்த்திக். அப்பவே என் வாழ்க்கை உன்னோடு தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

கடைசியில் நீ என்னை எதுக்காக avoid பண்ணுனங்கற காரணத்தைக் கேட்டு நான் நொறுங்கிப் போயிட்டேன் கார்த்திக். அப்போ தான் நீ என் பக்கத்துல இல்லாததே எனக்கு நினைவு வந்த மாதிரி உன்னைத் தேடினேன். படிப்பு, வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அந்த நொடியே உன்கிட்ட ஓடி வந்துரலாமானு தவிச்சேன். நீ என்னை ஆசுவாசப்படுத்துனதுக்கு அப்புறம் சமாதானம் பண்ணிகிட்டு உன்னைச் சேர்ற அந்த நாளுக்காக தினமும் காத்துட்டு இருக்கேன். Infact, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தான் நாம செய்றோம்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

உன்னை நான் எந்தக் காரணத்துக்காகவும் விடுறதா இல்லை கார்த்திக். என் வாழ்க்கை உன்னோட தான்னு தீர்மானம் பண்ணிட்டேன். நம்ம ரெண்டு பேர் அம்மா அப்பா கால்ல விழுந்தாவதுகார்த்திக்கை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கனு கெஞ்சப் போறேன். நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் கார்த்திக். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குப் பிடிச்சதையெல்லாம் சமைக்கிறதுக்காக ரெசிபீஸ் பார்த்துட்டு இருக்கேன். உனக்கு ஒரு perfect match-ஆ இருக்குற மாதிரி நிறைய விஷயங்கள்ல என்னை நானே சரிபண்ணிட்டு வர்றேன். உண்மையைச் சொல்லனும்னா உன்னை லவ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் நான் என்னையே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் கார்த்திக்.

2011 Lovers Day க்கு எனக்காக நீ ஒரு கவிதை எழுதினியே? So sweet. I loved it. அந்த மாதிரி இன்னொரு கவிதை எழுதேன்? இப்பவே என்கிட்ட சொல்லனும்னு அவசரம் இல்லை. மெதுவா நம்ம கல்யாணத்தன்னைக்கு சொன்னா கூட போதும் ;)

எனக்கே எனக்கென்று
அழகான
ஓர் உலகத்தை
அறிமுகம்
செய்து வைத்த
பேரழகன் நீ!

            கார்த்திக்.. நான் உனக்கேத்த ஜோடியானு எனக்குத் தெரியல. ஆனா உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. Life is short. அந்தச் சின்ன வாழ்க்கையை உன்னோட ரசிச்சு வாழனும்னு ஆசையா இருக்கு. உன்கூட சண்டை போடாம, உன் சொல் பேச்சு கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்கிறேன் கார்த்திக். என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா? உன்னைப் பத்தி எழுத ஆரம்பிச்சு என்னலாமோ எழுதிகிட்டே இருக்கேன். உனக்குப் புரியுதா கார்த்திக்?

I love U <3 :-*

   Forever Urs..

எச்சரிக்கை: மகனே, இதையும் படிச்சிட்டு “post super.. as usual”னு feedback கொடுக்காம ஒழுங்கா பொறுப்பா பதில் சொல்லு. இல்லன்னா divorce தான் :)

Read More...