முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மௌனக் கவி!!

என் ப்ரிய தோழி ’சித்ரா’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-)

இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-)


யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்!
மாங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்!
மிதந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்!
மீட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்!
முக்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்!
மூதாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்!
மென்மை என்பதை மலர்களிற் கண்டேன்!
மேகநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்!
மைநிற விழிகளில் மானினம் கண்டேன்!
மொட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்!
மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்!
மௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்!

நன்றி சுஜா ஆன்டி!
*

கருத்துகள்

மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை அருமை,

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
"ம"கரத்தில கவிதை மரகதமா ஒளி வீசுது.. என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க
//பத்தாம் வகுப்பு படிக்கையில் //
பத்தாம் வகுப்புலயே இவ்ளோ ஆழமான மொழி ஆளுமை!
அவங்களோட இப்போதைய கவிதைகளையும் வெளியிடுங்க, ரொம்ப ஆர்வமா இருக்கேன் :)
sathishsangkavi.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
//மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்!
மௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்!//

அழகான வரிகள்....
ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
nallaayirukku..
தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் முயலும் விதம் தெரிகிறது. நல்ல "ம" கரங்களில் மயங்கும் கவிதை. வாழ்த்துக்கள். தூயத் தமிழ் ரசித்தேன். வலிமையான சிந்தனையில் மென்மையான கவிதைகள்.
Subramanian arasalwar இவ்வாறு கூறியுள்ளார்…
Fantastic...Many more such talents never got a platform to express themselves in previous generation...

Tell ur aunt that Late a vanthalum, it still sounds like latest...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
nallaa irukku. vazhthukkal
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ethu engio ketathu pola erukku

aanl nalla erukku
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாணவன்
நன்றி!

@ Balaji saravana
சொல்லியாச்சு. உங்களது கமெண்ட்டை அவர்களிடம் படித்துக் காட்டினேன். மகிழ்ச்சியடைந்தார்கள். நன்றி!!
நானும் அடுத்தடுத்து அவர்கள் கவிதையை எதிர்பார்த்து.

@ சங்கவி
நன்றி! :-)

@ வெறும்பெய
நன்றி! :-)

@ தமிழ்க்காதலன்
நன்றி! :-)

@ Subramanian arasalwar
Thank You! I have conveyed ur msg to her. And also have suggested her to open a blogspot for herself :-)

@ ரமேஷ்
நன்றி! :-)

@ siva
நன்றி! :-) தெரிந்த வார்த்தைகள் தெரியாத கவிதை.
selva ganapathy இவ்வாறு கூறியுள்ளார்…
kandadhayum kettadhayum kavidhaithuvamaai kooriyullargal....

kalaasal :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@selva ganapathy

மிக்க நன்றிங்க !!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திகழ்

ஆமா திகழ். நன்றி..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...