முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டேபிள் ரோஸ்

டிஸ்கி: பிசியா இருக்குறவங்க, மொக்கைப் பதிவு படிக்காதவங்க....சாரி பிடிக்காதவங்க யாரும் இதப் படிக்கவும் வேண்டாம். படிச்சதுக்கு அப்புறம் என்னைத் திட்டவும் வேண்டாம். அப்படியே போயிருங்க :-) Others may go ahead :-)

இதுவும் டார்ட்டாய்ஸ் தான். பொதுவாவே ‘பூ’ன்னாலே பெண்களுக்குப் ரொம்பப் பிடிக்கும். அதுவும் சின்ன பெண்களுக்கு? கேட்கவே வேண்டாம். பாய்கட் பண்ணியிருந்தாலோ பாப்கட் பண்ணியிருந்தாலோ கூட வச்சுவிட சொல்லி அடம்பிடிக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன் :-)
இப்பவும் அப்படித்தான் இருக்கேன் :-) 

மல்லிகை, பிச்சி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ, செவ்வந்தி(மஞ்சள், வெள்ளை) தலையில் வைத்துக்கொள்ளப்படும் பொதுவான பூக்கள் இவை. மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் மூன்றும் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை(அந்த வயதில்). சனிக்கிழமை கலர்டிரஸ்-னாலே அம்மா வச்சு விடுவாங்க. என் தோழிகள் எல்லாருமே அப்படித்தான். சில பேர் கலர் கலரா டிரஸ்-கு மேட்சிங்கா டிசம்பர் பூ வச்சிட்டு வருவாங்க.

அப்போ எங்க வீட்டுல ரோஜாச்செடி கிடையாது. ஆனா என் தோழிகள் வச்சிட்டு வர்ற ரோஜாப் பூக்களைப் பார்த்து ரொம்ப ஆசையா இருக்கும். அம்மா கிட்ட கேட்கவும் மாட்டேன். ரோஜாச் செடியை மாதிரியே குட்டியாச் சின்னதா அழகா இன்னொரு பூ இருக்கும். அது ‘டேபிள் ரோஸ்’. ‘பட்டன் ரோஸ்’னும் சொல்வாங்களோ?? அம்மா...எனக்குக் கொள்ளை ஆசை. அதுலயே நிறைய வெரைட்டி உண்டு. ஒரே இதழ் வரிசையில் இருக்குற மாதிரி ஒரு வெரைட்டி உண்டு. ஆனா எனக்குப் பிடிச்சது உண்மையான ரோஜா மாதிரியே அடுக்காக அழகாக இருக்கும் அந்த வெரைட்டி தான் :-) வெள்ளை, பிங்க், மஞ்சள்-னு விதவிதமா இருக்கும். எது கிடைச்சாலும் ஓ.கே. தான். 

இந்த டேபிள் ரோஸ் கடையில் கிடைக்காது. எப்போ எங்க கிடைக்கும்னும் சொல்ல முடியாது. திடீர்னு என் தம்பி கொத்தாகப் பறிச்சிட்டு வருவான். ஐய்யோ.. அதப் பார்க்குறதுக்கு அவ்வளவு அழகாக இருக்கும். அதுல ஒரே ஒரு வருத்தம் என்னன்னா டேபிள் ரோஸ்-அ தலையில் வச்சிக்க முடியாது. பார்க்கிறவங்க சிரிப்பாங்களாம். அதனால கையிலயே வச்சிப் பார்த்துட்டு இருப்போம். சீக்கிரம் வாடி வேறப் போயிரும். வாடினதுக்கு அப்புறம் அதைக் கையில தேய்ச்சு ரோஸ் கலர் பூவை உதட்டுல கொஞ்சம் லிப்ஸ்டிக் மாதிரி தேய்ச்சு விளையாடுவோம். அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட கிடைக்கிற அடி வேற விஷயம் :-)

எல்.கே.ஜி யில் இருந்து 6-ம் வகுப்பு வரை நான் படிச்சது புனித காணிக்கை அன்னை மெட்ரிகுலேசன் பள்ளி (Presentation Convent Matriculation School, Udaiyarpatti) அப்பெல்லாம் ஸ்கூல்ல மத்தியானம் லன்ச் இடைவேளையில நிறைய நேரம் இருக்குற மாதிரி தோனும். சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நான் மட்டும் தனியா காம்பவுண்ட் சுவர் பக்கத்துல இருக்குற காடு மாதிரி புதர் மண்டி கிடக்குற ஒரு இடத்துக்குப் போவேன். அங்க ஒரு பள்ளத்துல டேபிள் ரோஸ் பூத்திருக்கும். அது எனக்கு மட்டும் தான் தெரியும் :-) அதைப் பறிச்சிட்டு வகுப்புக்கு வந்து யார் என்கிட்ட சண்டை போடாம க்ளோஸ் ஃபிரெண்டா இருக்காங்களோ அவங்களுக்குக் கொடுப்பேன் :-)

இப்ப ஏன் ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத இந்த மொக்கைக் கதையைச் சொல்லிட்டு இருக்க-னு கேக்குறீங்களா?? எனக்கு ’ரோஜா’னு ஊர்-ல ஒரு தோழி உண்டு. அவளும் என்னை மாதிரியே ஒரு டேபிள்ரோஸ் ரசிகை. அவள் பேரைக் கேட்டாலே எனக்கு டேபிள் ரோஸ் நியாபகம் வந்திரும். சின்ன வயசுல ஒன்னா விளையாடிட்டு வீட்டுப் பாடம் செஞ்சிட்டு டிவி-ல படம் பார்த்துட்டு ஒன்னாவே இருந்தோம். அப்புறம் நாங்க இருந்த கிராமத்த விட்டு வெளியே தனித்தனியாப் பிரிஞ்சு போயிட்டோம் :-( ஒரு தகவலுமே இல்லாம இருந்தது.

திடீர்னு நேத்து அப்பா ஒரு விஷயம் சொன்னாங்க: “உனக்கு ரோஜா-வ நியாபகம் இருக்கா? சின்ன வயசுல ஒன்னாவே இருப்பீங்க. வழியில தற்செயலா அவங்க அப்பாவைப் பார்த்தேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாம்” :-) 

சரி, ரோஜாவோட கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு நீங்க கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ;-) :-)

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு டேபிள் டாப் வெட் கிரைண்டர் பரிசா குடுங்க
எல் கே இவ்வாறு கூறியுள்ளார்…
டேபிள் ரோஸ் பொக்கே
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ நா.மணிவண்ணன்

நான் பையனுக்குக் கேட்கல..பொண்ணுக்குக் கேட்டேன் ;-)
அவளுக்கு என்ன கொடுக்குறதுனு சொல்லுங்க :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ LK

பொக்கே ரெடி ஆகுறதுக்குள்ள பூ வாடிப் போயிருமே :-(
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனுபவங்களை உணர்வுகளுடன் அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை,

//சரி, ரோஜாவோட கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு நீங்க கொஞ்சம் ஐடியா கொடுங்களேன் ;-) :-)//

பொன்னுங்க உங்களுக்கு தெரியாததா எங்களுக்கு தெரியப்போகுது பார்த்து நீங்களே ஏதாவது தேர்வு செய்து கொடுத்திடுங்க, நாங்களே யாருக்காவது பரிசு கொடுக்க எங்க தோழியதான் ஐடியா கேக்குறோம் அதனால உங்கள் choice...

அப்புறம் உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்...

வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாணவன்

வாழ்த்துகளுக்கு நன்றி மாணவன் :-)
சுந்தரா இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் உங்கமாதிரிதான்...

பரிட்சைக்குப்போகும்போது கட்டாயம் பூவச்சுக்கணும்னு ஒரு சென்டிமென்ட் வேற :)

உங்க தோழிக்கு வாழ்த்துக்கள்!
தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் சந்திக்கிறேன். கொஞ்சம் சிந்திக்கிறேன். இந்த டேபில் ரோஜா பூவை நானும் வீட்டில் வளர்த்திருக்கிறேன். "பட்டு ரோஜா" என்று பெயர். கொள்ளை அழகுதான். பூக்களை செடியோடு பார்க்க பரவசம் பூக்கும். பறிப்பதில்லை.

உங்க தோழிக்கு வாழ்த்துக்கள். நல்ல வாழ்க்கை அமைய...., சீறும் சிறப்பும் பெற... இறையருளில்....வாழ்த்துக்கள்.

பரிசுக் கேட்டீங்கதானே.... ( உங்க புன்னகை ஒன்னு போதாதா.... ஹி..ஹி..ஹி சும்மா.. )
உங்க மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு நல்ல புடவை, உங்கள் இருவர் இரசனைக்கும் ஏற்றார் போல் டிசைன் புடவை, அல்லது நினைவில் நிற்கும் படி... சின்னதாய்... ஒரு மோதிரம், மூக்குத்தி,... இப்படி.., அல்லது... பல உள்ளர்த்தம் காட்டும்... ஆழமான பொருள் தரும்... "கண்ணாடி" ( கொஞ்சம் நல்ல தரமானதாய் ) தரலாம். கண்ணாடிப் பார்க்கப் படும் பொழுதெல்லாம் பார்ப்பவரின்... நிசத்தையும், அழகையும் காட்டி, அதை பரிசுக் கொடுத்தவரின் அன்பை காட்டி, அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

என்ன ஐடியா ஒ.கே வாங்க....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
poi saptu..kaiya koduthutu vaaanga boss...

enna athu kodukirathu vangarthu ellam...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சுந்தரா
நன்றி! :) Same Pinch :)

@ தமிழ்க்காதலன்
அழகான ஐடியாக்கள் கொடுத்ததற்கு நன்றி!
கண்ணாடி எனக்கு மிகவும் பிடித்துள்ளது :)

@ siva
போக முடியலயேனு தான் என் சார்பா பரிசுங்க.. :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...