முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவதை வம்சம் நீயோ!




அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு. புதிதாக வீடு மாறிய சமயம். பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது. “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எந்த பஸ்.. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம். இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க, “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல.. அவளும் கே.டி.சி.நகர் தான். அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன்.


வகுப்பில் நான் எப்பவுமே முதல் பெஞ்ச். அவளோ கடைசி பெஞ்ச். நான் ரொம்ப அமைதி. அவளோ.. பயங்கர வாயாடி. திமிர் பிடித்தவள் போல் இருந்தாள். பதினொன்றாம் வகுப்பில் அவள் வேறு section-இல் படித்திருக்கவே அவளிடம் பேசியதே கிடையாது. “இவகிட்ட போய் எப்படிக் கேக்க? ஒளுங்கா ரெஸ்பாண்ட் பண்ணுவாளா” என யோசித்தவாறே..

“உங்க நேம் தான சித்ரா.. நீ கே.டி.சி. நகரா? என ஆரம்பித்து முழுக் கதையையும் சொல்லி முடித்தேன். சொன்னது தான் தாமதம். அங்கே இங்கே என ஓடி கடைசியில் இன்னொரு பெண்ணுடன் என்னை ஒரு வேனில் ஏற்றிவிட்டாள். பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்ததும் அந்தப் புதுவீட்டைக் கூட கவனிக்கத் தோன்றாமல் சித்ராவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். “சே. அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு அக்கறை? நான் யாருனே தெரியாம எனக்காக அவ்ளோ கஷ்டப்பட்டு ஹெல்ப் பண்ணுச்சே! அவளப் போய்த் தப்பா  நெனைச்சிட்டோமே”னு வருத்தப்பட்டேன்.

அப்புறம் வந்த சில நாட்களில் நானும் அவளுடன் ஒன்றாக ஒரே வேனில் பயணிக்க ஆரம்பித்தேன். இருவர் வீடும் இருவருக்கும் நன்றாகத் தெரிந்துவிடவே, ஒரு நாள் அவள் தன் வீட்டுக்கு அழைத்தாள். தயங்கித் தயங்கிச் சென்ற எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. வாழ்க்கையில் எப்படி ஒரு நட்பு வாய்க்கப் போகிறது என்று. அதுவும் பல அலார மணிகள் அடித்து என்னை warn செய்த போதும் நட்பு என் காதை மறைத்து.. இல்லை அடைத்து விட்டது. (காதல் கண்ணை மறைப்பது மாதிரி)

ஒரு நாள் பள்ளிக்கு அவளது புத்தம் புதிய நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய TVS Excel வண்டியில் வந்திருந்தாள். கிக் ஸ்டார்ட் வண்டி. நூறு உதை உதைத்தால் வண்டி start ஆகும் Probability 0/100. Doubles போகலாம் என்று என்னை அழைத்தபோது தெரிந்திருக்கவில்லை அவள் என்னை வைத்துத் தான் Doubles ஓட்டக் கற்றுக்கொள்ளப் போகிறாள் என்பது. அதிலும் நான் வேறு Prince Jewellery Light weight collection நகைகள் போல மிகவும் light weight ஆக இருந்ததனால் மனதுக்குள் ஏற்பட்ட கிலியை மறந்து () மறைத்து எப்படித் தைரியமாக என்னைக் கூப்பிட்டாள் என்பது எனக்கு இன்று வரை புரியாமலிருக்கும் 13ம் வாய்ப்பாடு போன்ற விஷயங்களுள் ஒன்று.

இதெல்லாம் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுக்கு அப்புறம் தானே தெரிந்திருந்தது. எப்படியோ பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெயின் ஸ்கூலில் இருந்து பயங்கர வேகத்தில் உருட்டிக் கொண்டே வந்து கடைசியில்.. இல்லை இல்லை பாதியில் HighGround GH-க்கு முன் வண்டி நின்றுவிட்டது. “நல்ல வேள.. உள்ள அட்மிட் ஆகுற மாரி ஒன்னும் நடக்கல” என்று மனதைத் திடப்படுத்தியவாறே..

“என்னடி ஆச்சு?

“தெரிலடி.. காலையில ரிசர்வ்ல உளுந்துச்சு. இப்பம் வீடு வரைக்கும் பொயிரலாம்னு நெனைச்சேன். இங்கயே நின்னுட்டு”

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் நின்ற என்னை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டு அவள் அப்பாவின் துணையோடு வீடு போய்ச் சேர்ந்தாள்.

இது இப்படி இருக்க, சித்ரா இயற்கையிலேயே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவள் என்பதால் சில நாட்களில் அவளுக்கு மறுபடியும் Doubles கற்றுக் கொள்ளும் அவா ஏற்படவே வண்டியில் பள்ளிக்கு வந்திருந்த மற்றுமொரு நாளில் என்னிடம் வந்தாள்.

“சாயங்காலம் என்கூட வாடி. நம்ம டபுள்ஸ்ல பொயிரலாம்”

“எடி.. பெட்ரோல் இருக்குல்லா? ரிசர்வ்ல கெடைக்குதா?

“அதெல்லாம் நெறைய இருக்கு. இன்னைக்கு நான் உன்ன உங்க வீட்டுலயே ட்ராப் பண்ணிருதேன்”

வண்டி ஒரு வழியாகக் குண்டும் குழியும் சேறுமாக இருக்கும் கே.டி.சி. நகரின் வெண்ணை போன்று வழுக்கும் ஒரு சாலையில் போய்க் கொண்டிருந்தது. ஏழு வளைவுகள் தாண்டி ஏழுபது குழிகளைத் தாண்டி ஒரு பெரிய பள்ளத்தின் முன் வந்து நின்றது.

“இதுக்குள்ள வண்டிய விட்டா பொயிருமாடி?

“தெரியலடி.. வேற வழியில்ல. உட்டுப் பாரு”

“உட்ரவா?

“நான் வேணா எறங்கிக்கிடவா?

“வேண்டாம் வேண்டாம். நீ அப்படியே உக்கார்ந்திரு”

நேராகக் குழியில் இறங்கிய வண்டி சேறில் சிக்கிச் சாய்ந்துவிடவே எனது ஸ்கூல் பேக் தண்ணியில் விழுந்தது. அதற்குத் துணையாக நானும் விழுந்துவிட அவள் ஒரு வழியாக balance செய்து வண்டியை மீட்டு வெளியே கொண்டுவருவதற்குள் அவளது white uniform காக்கியாக மாறியிருந்தது. “உன்னால தான் உன்னால தான்” என இருவரும் மாறி மாறிச் சண்டை போட்டுக்கொண்டும் அசடு வழிந்து கொண்டும் கோபப்பட்டுக் கொண்டும் வலிக்காத மாதிரியே நடித்துக் கொண்டும் எக்ஸலை உருட்டிக் கொண்டு எங்கள் வீடு வந்து சேர்ந்தது தான் இரண்டாவது அபாய மணி.

மூன்றாவது தடவை வேனும் இல்லை. வண்டியும் இல்லை. ஏதோ ஒரு பஸ்ஸில் என்னை மட்டும் ஏற்றிவிட்டாள். பாளை சேவியர்ஸ் கல்லூரியின் எதிர்ப்புறம் இருக்கும் மாவட்ட நூலகத்தில் ஏறி வி.எம்.சத்ரம் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கருங்குளம் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாமல் நானும் எனது புத்தகப் பையும் விண்வெளியில் மிதப்பது போல மிதந்து கொண்டிருந்தோம். நினைவு திரும்பிய வேளையில் நான் ஒரு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தேன். பேருந்து இருபுறமும் பச்சை பசேலென்று இருந்த வயல்வெளிகளைச் சுற்றிக் காட்டியபடியே சென்று கொண்டிருந்தது. அப்போது தான் ஞானோதயம் வந்தவராய்த் தெரிந்த நடத்துனர்,

“எம்மா.. நீ எங்க டிக்கெட் எடுத்த?

“வி.எம்.சத்ரம்”

“அடப் போம்மா.. அந்த ஸ்டாப் போய் எவ்ள நேரமாச்சு? எறங்காம என்ன செஞ்சிகிட்டு இருந்த? பாக்கலையா?

...

“இந்தா.. இன்னொரு டிக்கெட் வாங்கிக்க. கருங்குளம் இப்பம் வந்துரும். திரும்பிப் போவும்போது எறங்கிக்க” என்று எனக்கு இன்னொரு சீட்டு தர நல்ல வேளை என்னிடம் காசு இருந்தது ;) Plan போடாமல் ஒரு Picnic சென்று கருங்குளம் மலைக் கோவிலின் தரிசனம் கிடைத்தது. இது மூன்றாவது அபாய மணி.

இப்படிப் பல அபாய மணிகளைக் காதில் கேட்காதவாறே கடந்து வந்த நாங்கள் இருவரும் ஒரு வழியாகத் திருநெல்வேலியின் மூலை முடுக்குகளை எல்லாம் சுற்ற ஆரம்பித்திருந்தோம். மாவட்ட நூலகத்தில் சித்ரா தேவி, சுபத்ரா தேவி என இரு Membership Cards வாங்கினோம். அவளது கார்டையும் சேர்த்துப் பயன்படுத்திய நான் கடைசியாக எடுத்த 6 புத்தகங்களையும் இன்று வரை return செய்யாமல் சுற்றிக் கொண்டிருப்பதை இக்காலக்கட்டத்தில் உங்களிடம் confess செய்கிறேன்.

Arasan, Aryaas, MH etc., restaurants, Pothys, RmKV, Ratna theatre, Bombay theatre, Junction, Railway Station, Town, Library, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் Book World, Ramya Beauty Clinic, Head Post Office, நெல்லையப்பர் கோவில், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கரும்புச் சாறு கடை, பழ ஜூஸ் கடை, தெருவில் விற்கும் ஐஸ்க்ரீம், குச்சி ஐஸ், சுண்டல், ஆச்சீஸ் கீழே விற்கும் ஜிகர்தண்டா, நண்பர்கள் வீடு, EB கடை, திருவனந்தபுரம், சென்னை என ஏகப்பட்ட இடங்களுக்கும் இஷ்டத்துக்குச் சுற்றிக் கொண்டிருந்தோம்.

இதற்கு ஒவ்வொரு முறையும் வீட்டில் பெர்மிஷன் வாங்குவது தான் பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. தேர்வுக்கு முந்தைய நாளில் Combined Study என்ற பெயரில் ஜன்னல், கதவுகள் எல்லாவற்றையும் பூட்டிக்கொண்டு Boys படம் பார்த்துக் கொண்டிருக்கையில் மாட்டியது எல்லாம் போக, பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருவரும் எடுத்த Record Breaking மதிப்பெண்களால் சில காலம் இருவரும் தனித்தனியே house arrest-இல் இருக்க நேர்ந்தது. அவள் வீட்டில் இருந்த எனது ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பின்னர் சுமூக நிலை திரும்பி, நாளடைவில் ‘சுபத்ரா’ என்று சொன்னால் அவள் வீட்டிலும் ‘சித்ரா’ என்று சொன்னால் என் வீட்டிலும் ஊர்சுற்றும் லைசென்ஸ் தரப்பட்டது. வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்தாலும் வார இறுதி நாட்களில் ஊர் சுற்றுவதில் ஒரு குறையும் இருக்கவில்லை. இப்படியே நட்பு வானில் பறந்து கொண்டிருந்த இரு இளம் சிட்டுகளும் ஒரு கட்டத்தில் பிரிய நேர்ந்தது. ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்கள் ஒரே ஊரில் வேலை பார்க்கலாம் எனவும் ஒரே வீடு எடுத்துத் தங்கிக் கொள்ளலாம் எனவும் முடிந்தால் ஒரே பையனைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனவும் தீட்டப்பட்ட திட்டங்கள் யாவும் இன்று பட்டங்களாகக் காற்றில் பறக்கின்றன.

இப்போது சித்ராவுக்குத் திருமணம் ஆகி, அவளைப் போலவே ஓர் அழகான குட்டிக் குழந்தையும் பிறந்துவிட்டது. திருமணம் ஆனதிலிருந்தே நான் ஊரில் இருந்தால் கூட அவளால் முன்பு போல் வெளியே சுற்ற முடியவில்லை. குழந்தை உண்டாகியிருந்த போது கேட்கவே வேண்டாம்..

“இனிமே அவ்ளோ தான். நீயே வந்தாலும் எங்கயும் சுத்த முடியாது. இவனை வெச்சுகிட்டு எங்கடீ போக முடியும். செறையா இருக்கு. உள்ள இருந்து உதச்சுகிட்டே இருக்கான். எப்படா வெளீல வருவான்னு இருக்கு”

இந்நாட்களில் சித்ரா வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் காரணத்தால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வீட்டில் ஓர் அம்மா வேலைக்கு இருக்கிறார்கள். நானும் சென்னைக்கே வந்துவிட்டேன்.

“ஹலோ.. நைட் பன்னெண்டு மணிக்குத் தூங்கிட்டேண்டி. சாரி..

“பரவால்லடி. Many More Happy Returns of the Day

Thank u ma.. நீ எப்பம் ஊருக்கு வருவ?

“எக்சாம் முடிச்சிட்டு வருவேன். எதுக்கு?

“வா. நம்ம முந்தி மாரி ஊர் சுத்தலாம்”


கருத்துகள்

Kesava Pillai இவ்வாறு கூறியுள்ளார்…
செறையா இருக்கு. :)
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
மலரும் நினைவுச்சிறைகள்...!
kamal இவ்வாறு கூறியுள்ளார்…
valimayana arumayana elutukal

சித்ரா தேவி, சுபத்ரா தேவி nalla name combination
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இன்மையான நினைவுகள்....!
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு தெரிந்து பொதுவா பெண்கள் நகைச்சுவையாக அதிகம் எழுதுவதில்லை, ஆனால் பாசமலர் செம ரகளையா எழுதியிருக்காப்புல ...சூப்பரு ...!

//அதிலும் நான் வேறு Prince Jewellery – Light weight collection நகைகள் போல மிகவும் light weight ஆக இருந்ததனால் //

ஹா ஹா ஹா ஹா ...! ஐ நோ ..! ஐ நோ ...!


//“வா. நம்ம முந்தி மாரி ஊர் சுத்தலாம்”//

பாவம்மா அந்த எக்சல் விட்ருங்க ...!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@KESAVA PILLAI'GOPS'

உங்களுக்குமா :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@இராஜராஜேஸ்வரி

ம்ம் நன்றி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@kamal

Thank U Kamal ;)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

இனிமையான நினைவுகள் தான்..:)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன்சுப்பு

அண்ணா.. பப்ளிக் பப்ளிக் :D
அந்த எக்சலை விட்டு இப்போ ஆக்டிவா வாங்கியாச்சு :)
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
Arasan, Aryaas, MH etc., restaurants, Pothys, RmKV, Ratna theatre, Bombay theatre, Junction, Railway Station, Town, Library, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் Book World, Ramya Beauty Clinic, Head Post Office, நெல்லையப்பர் கோவில், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கரும்புச் சாறு கடை, பழ ஜூஸ் கடை, தெருவில் விற்கும் ஐஸ்க்ரீம், குச்சி ஐஸ், சுண்டல், ஆச்சீஸ்....

திருநவேலியில அஞசு வருசம் வாழ்ந்தப்ப நான் அனுபவிச்ச இந்த விஷயங்களையெல்லாம் திரும்ப நெனக்க வெச்சு குஷியாக்கிப்புட்டியளே! தோழியோட பழகுனதை நீங்க சொன்ன விதம் நல்லா இருந்துச்சு. அழகான ஒரு சிறுகதைன்னுதான் ‌சொல்லணும்!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
hi suba,

I heard all this things from my wife chitu and my question is what happend to your decision that you decided to marry one person. i'm waiting!!!

சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பால கணேஷ்

ஓ! நீங்க திருநெல்வேலில அஞ்சு வருஷம் இருந்தீங்களா? சொல்லவேயில்ல.. கிரேட் :) கருத்துக்கு நன்றி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@titus live

hi darling :) என்ன துப்பாக்கி விஜய் மாதிரி i'm waiting னு சொல்றீங்க.. i'm waiting too ;)
மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மலர்ந்திருக்கும் நினைவுகள்
குவளை வடி தேனாய் இனிக்கிறது சகோதரி...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@மகேந்திரன்

நன்றி அண்ணா!
சித்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
hey d nice to u hve recalled our sweet memories
சித்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
hey dubbukki nice sweet memories...nice gift on my bday
சித்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
nice gift for my bday.ssssssssssssssssooooooo happy
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சித்ரா

இது தான் ஆரம்பம் :) இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுதப் போறேன். நம் நட்பைப் பற்றி :) :)
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
Iam also waiting to read your friendship with a good friend.
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
I am also waiting eagerly to read your friendship stories with a real good friend. Very interesting to read and also make us to go back to our school / college days.
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
I am also waiting eagerly to read your friendship stories with a good friend. Make me to go back to my school / college days.
ezhil இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லோருக்கும் அவரவரின் நட்பின் நினைவிலாட ஒரு வாய்ப்பு.... அருமையான பகிர்வு.....நட்பிற்கு வாழ்த்துக்கள்
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுபதரா - கதை மாதிரியே இருக்கு - மலரும் நினைவுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
பின் தொடரவதற்காக
அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு நடை திநெவேலி போன மாதிரி இருக்கு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...