நில்! கவனி! கடந்துசெல்!

Feb 8, 2012


உருட்டி ஊட்டிய பின்பு
வயிறு நிறைத்த
வழித்துப் பிசைந்த
கடைசிக் கையுருண்டை

கோர்த்த சரம் போக
எஞ்சிச் சிதறிப்போன
பிஞ்சு பிச்சி மொட்டுகள்

கடைசிப் பொருளைப்
பொறுக்காமல் விட்டுவந்த
வாடகை வீடு

மருண்டு விழித்த பின்னிரவு
உறக்கத்தினூடே
புதைந்த கனவுவொன்றின் எச்சம்

சாயம் வெளுத்த ரவிக்கையின்
ஆயுளை நீட்டிக்கொண்டே சென்ற
காலண்டர் ஊசி

மைத்தடவல்களை மறந்து
ஸ்டிக்கர்ப் பொட்டுகளுக்கு மாறிவிட்ட
கண்ணாடிச் சட்டம்

மொழுகிய மேடையின் ஈரத்தில்
கரைந்து மணந்த
வெள்ளைக் கோலங்கள்

காக்காமுள் குத்திய காற்றாடியுடன்
ஓலைக்கூரையில்
காய்ந்து போன வேப்பங்குச்சி

அடிவாங்கிய ஒலிச்சுருளின் பாடலைப்போல
அவ்வப்போது நிறுத்தி
நிதானிக்கச் செய்யும் இவைகளால்
நகர்ந்து கொண்டிருக்கும் என் உலகம்.

9 comments:

dheva said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Excellent!!!!

கோவை நேரம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நெஞ்சை தொட்ட வரிகள்

dsfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Good one di. write more

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

MOre Excellent suba!!!!....repeatuu...

Marc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சின்ன சின்ன விஷயஙகளின் அழகான கோர்வை உங்கள் கவிதை.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ dheva
Thank u :)

@ கோவை நேரம்
மிக்க நன்றி!

@ பொன்மலர்
Thank u dear..

@ siva sankar
Thanks Siva :)

@ dhanasekaran .S
கடைசிவரியைக் கவனிக்கவில்லையா? நன்றி!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் கேள்விகள் எல்லாம்
பதில்கள் என்ற பொய்யைப்
பெற எழுப்பப்பட்ட பொய்கள்
என்று நானறிவேன்..!//

நான் ஒரு கேள்வியும் கேக்க மாட்டேன்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்படியே எழுதிக் கிட்டு இருந்தாக்க “மடக்கி” எழுதறதே உங்களுக்கு மறந்திட போது பார்த்துக்கிடுங்க.

ஒஹோன்னு சொல்ல முடியாட்டாலும் அய்யே-ன்னு சொல்ல வைக்கல. சில வரிகள் நறுக்.

கவிதை முயற்ச்சி நல்லாருக்கு

வாழ்த்துக்கள்
தீ.சு.

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கவிதை நல்லா இருக்கு சுபத்ரா... உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html