There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

அபாயக் குறிப்புகள்

Feb 18, 2021

என் முதல் கவிதைத் தொகுப்பு. 


 

என் வெகு நாளைய கனவை நனவாக்கித் தந்திருக்கும் தேநீர் பதிப்பகத்திற்கு நன்றி

புத்தகம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

அபாயக் குறிப்புகள்

பக்கங்கள் -72

விலை- 80

நூல் பெற -9080909600

 

வங்கியில் செலுத்த

N.kokilan

Indian Bank

Jolarpettai

529158309

IFSC IDIB000J025

GPay (அ) phonepe யில் செலுத்த

9080909600

நன்றி 😊

Read More...

சொல்வனம் – கவிதைகள்

Jul 12, 2018



உறவு

வாலாட்டி மேலேறிக் குழைந்து எச்சில்படுத்திய
நாய்க்குட்டிக்கு நல்லவேளையாக நான் இருந்தேன்.
Read More...

சொல்வனம் – கவிதைகள்

May 29, 2018



பார்வைகள் தவிர்த்து
அனைவரும் என்னையே பார்ப்பதாய்த் தோன்றிய
எண்ணம் தவிர்த்து
பேருந்து இருக்கையில் அமர்கிறேன்
அலைபேசியின் செவிப்பொறியை
அவிழ்க்கத் தொடங்கி
உள்ளே வெளியே
உள்ளே வெளியே என
சிறிய சிக்கலைப் பிரிக்கப் பிரிக்க
பெரிதாய்ப் பின்னிக்கொண்ட சரடு
ஒரு சிறு பந்தைப் போல் ஆகிறது
அப்படியே கேட்கலாம்
எனக் காதில் செருகும்போது கவனிக்கிறேன்
பேருந்தில் இருக்கும் வேறெவரின் செவிப்பொறியும்
சிக்கலாயில்லை
அது தரும் இசையில் லயித்திருக்கும்
அவனும் அவளும் அதோ அவரும்
ஒரே அலைவரிசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா
அவரவருக்குப் பிடித்த இசை என்னவாக இருக்கும்
மீண்டும் பின்னியிருக்கும் சரடைப் பிரிக்க
முயன்றிருக்கும் போதே
நிறுத்தம் வர இறங்குகிறேன்.
நாளை பார்த்துக்கொள்ளலாம்
பேருந்தில் இடம்பிடிப்பதையும்
சரடை நேராக்குவதையும்
பேருந்துப் பயணத்தில் பாட்டு கேட்பதையும்.
***

பி.எம்.எஸ். நாட்கள்
__
உலகம் சரியில்லை.
நாடு சரியில்லை.
வீடு குப்பையாக இருக்கிறது.
பொருட்கள் இரைந்து கிடக்கின்றன.
துணி துவைக்கத் தெம்பு இல்லை.
நான் மட்டுமே சமைக்க வேண்டுமா.
ஒருவருக்கும் பொறுப்பில்லை.
மனசாட்சியில்லை.
மனிதாபிமானமில்லை.
நள்ளிரவில் விழிக்கிறேன்.
தாரை தாரையாய் அழ வேண்டும்.
தலையணை பிடிக்கவில்லை.
எனக்கென்று யாருமில்லை.
எப்போது சாவேன்.
யார் அழுவார்கள்.
ஆவுடை அழுவாளா.
அவள் புடவை அழகாயிருந்ததே.
அவளும் அழகாக இருந்தாள்.
என்னைவிட.
நாளை எந்தப் புடவை அணியலாம்.
அவனுக்கு அந்நிறம் பிடிக்குமா.
பூ வாங்கி வைத்துக் கொள்ளலாமா.
நான் ஏன் சாக வேண்டும்.
இது யாரின் வாசம்.
யாரின் ஸ்பரிசம்.
என்னை அணைப்பது யார்.
அமிழ்த்துவது யார்.
மூச்சு முட்டுகிறது.
கண்கள் கிறங்குவதைப் போல்..


Read More...

சொல்வனம் – கவிதை

Apr 19, 2018


ஆச்சி


நான் பால் ஊற்றிக் கொண்டிருந்தபோது
ஆச்சி இறந்தாள்
என் முக வாஞ்சைகளும்
அவளுக்கென்றே வைத்திருந்த பேரன்பும்
உட்செல்லாமல் வெளியே வழிந்தன.
Read More...

தனிமைக் காதலர்கள்

Feb 16, 2018



தனிமையே..
உன் காதலர்கள் கபடதாரிகள்.

உன் மடியமர்ந்து அவர்கள் பருகும் தேநீர்
எச்சில் கலந்தது.

உன் தோள்சாய்ந்து அவர்கள் வாசித்துக் கொண்டிருப்பது
வேறொருவனின் அந்தரங்கத்தை.

அவர்கள் முகர்வதெல்லாம்
முற்றியுதிர்ந்த காலவெளி கடந்த முடிவிலி பிரியத்தின் மலர்களை.

அவர்கள் சிந்தனையெங்கும்
முன்னாள் காதலர்களிடம் அவர்கள் கேட்கத் தயங்கிய
சில அபத்த ஐயங்களின் பட்டியல்கள்.

உன் நிலவொளியில் அவர்கள் தூண்டிலிடுவதோ
பல்லாயிரம் விண்மீன்களை.
Read More...