முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.ஏ.எஸ். தமிழ்ப் பாடம்


..எஸ். தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன. தமிழில் தேடுபவர்களுக்காக இது :-)

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.. ப்ளீஸ்.  

தமிழ் முதல் தாள்
UPSC Tamil optional syllabus
Tamil I paper

பிரிவு-A
பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு
முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.

சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ்பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கிலான ஆய்வு.

பிறமொழிகளிலிருந்து தமிழ் கடன் பெற்ற சொற்கள், தமிழில் வழங்கும் சமூக மற்றும் வட்டாரக் கிளை மொழிகள் - பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்குமான வேறுபாடு.

பகுதி : 2 தமிழிலக்கிய வரலாறு
தொல்காபியம் - சங்க இலக்கியம் - அகம், புறம் எனும் பாகுபாடு - சங்க இலக்கியத்தின் சமயப் பொதுமைப் போக்கு - அற இலக்கியங்களின் வளர்ச்சி - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.

பகுதி : 3
பக்தி இலக்கியம் (ஆழ்வார்களும் நாயன்மார்களும்) - ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவம் - சிற்றிலக்கிய வடிவங்கள் : தூது, உலா, பரணி, குறவஞ்சி.

இக்கால் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள் : நாவல், சிறுகதை, புதுக்கவிதை - புதுமைப் படைப்புகளின் ஆக்கத்தில் வேறுபட்ட அரசியல் கருத்தாக்கங்களின் தாக்கம்.

பிரிவு - B
பகுதி : 1 தமிழியலின் அண்மைக்கால போக்குகள் :
திறனாய்வு அணுகுமுறைகள் : சமூகவியல், உளவியல், வரலாற்றியல் மற்றும் அறிவியல் - திறனாய்வின் பயன்பாடு - பல்வகை இலக்கிய உத்திகள் : உள்ளுறை, இறைச்சி, தொன்மம், ஒட்டுருவகம், அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை - ஒப்பிலக்கிய கருத்தாக்கம் - ஒப்பிலக்கிய கொள்கை.

பகுதி : 2
தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் : கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் - சமூகவியல் பார்வையில் நாட்டார் வழக்காற்றியல் - மொழிபெயர்ப்பின் பயன்கள்மொழி பெயர்க்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் - தமிழ் இதழியல் வளர்ச்சி.

பகுதி : 3 தமிழர்களின் பண்பாட்டு வரலாறு
காதல், போர் பற்றிய கருத்தாக்கம் -அறக்கோட்பாடுகள்தொல்தமிழர் தம் போரியல் அறநெறி முறைகள் - பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள், சடங்குகள், ஐந்திணைகள் காட்டும் வழிபாட்டு முறைகள் - சங்க மருவிய கால இலக்கியங்களில் புலப்படும் பண்பாட்டு மாற்றங்கள் - இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் (சமணம் மற்றும் பௌத்தம்). காலந்தோறும் கலை மற்றும் கட்டட நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி (பல்லவர், பிற்கால சோழர்கள், நாயக்கர் காலம்). பல்வேறு அரசியல், சமூக, சமய பண்பாட்டு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் - இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெறும் பங்கு.

தமிழ் இரண்டாம் தாள்
UPSC Tamil optional syllabus
Paper-II
பிரிவு - A

பகுதி 1 : முற்கால இலக்கியம்
1) குறுந்தொகை (பாடல்கள் :1-25)
2) புறநானூறு (பாடல்கள் :182-200)
3) திருக்குறள் பொருட்பால் : அரசியலும், அமைச்சியலும் (இறைமாச்சியிலிருந்து அவையஞ்சாமை வரை)

பகுதி:2 காப்பிய காலம்
1) சிலப்பதிகாரம் : மதுரை காண்டம்
2) கம்பராமயணம் : கும்பகர்ண வதைப் படலம்

பகுதி 3: பக்தி இலக்கியம்
1) திருவாசகம் : நீத்தல் விண்ணப்பம்
2) திருப்பாவை முழுவதும்

பிரிவு : B
நவீன இலக்கியம்
பகுதி :1 கவிதை
1) பாரதியார் : கண்ணன்பாட்டு
2) பாரதிதாசன் : குடும்பவிளக்கு
3) நா. காமராசன் : கறுப்பு மலர்கள்

உரைநடை
1) மு. வரதராசன் : அறமும் அரசியலும்
2) சி. என். அண்ணாதுரை : ! தாழ்ந்த தமிழகமே.

பகுதி :2 புதினம், சிறுகதை மற்றும் நாடகம்
1) அகிலன் : சித்திரப்பாவை
2) ஜெயகாந்தன் : குருபீடம்
3) சோ : யாருக்கும் வெட்கமில்லை

பகுதி 3: நாட்டுபுற இலக்கியங்கள்
1) முத்துப்பட்டன் கதை - பதிப்பித்தவர் . வானமாமலை (மதுரை காமராஜர் பல்கலை வெளியீடு)
2) மலையருவி - பதிப்பித்தவர் கி. வா. ஜெகநாதன் (தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு)



கருத்துகள்

Roaming Raman இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கே போனீர்கள் சுபத்ரா? உங்களை ஃபேஸ்புக்கில் காணவில்லை!! பெயர் மாற்றி விட்டீர்களா என்ன?

roamingraman@gmail.com
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நேரத்தை தின்று விடுகிறது என்று விலகிவிட்டீர்களா..? அல்லது புதிய கணக்கை துவங்கிவிட்டீர்களா..?(facebook)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Roaming Raman

படிக்க ஆரம்பித்துவிட்டதால் Facebook Account-ஐ deactivate செய்துவிட்டேன்.. ஆம் என் நேரத்தை எல்லாம் தின்று விடுகிறது :) :)
கோவை நேரம் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்...ias ஆக..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சுபா...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சுபா...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Thank U friends..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பெரிய படிப்பு படிச்சி பெரிய பதவிக்கு வர வாழ்த்துகள். நல்ல பதிவு. உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Rajesh
வாழ்த்துகளுக்கு நன்றி!
ஆனா, இந்தப் பதிவுக்கும் படம் பாக்குறதுக்கும் என்ன தொடர்பு? :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆனா, இந்தப் பதிவுக்கும் படம் பாக்குறதுக்கும் என்ன தொடர்பு? :)//

டெம்ப்ளேட் கமென்ட்ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது, பிர்பாலா பாதிவர்கள் எல்லாமே இப்புடி சும்மா ஒரு போஸ்ட் தலைப்பை பார்த்துட்டே மையமா ஒரு கமென்ட் போடுறது. அதுக்கு ஒரு உதாரணம் இது :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Rajesh
நல்ல பாடம் :)
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
very interesting subjects...
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... பாராட்டுக்கள்... சேமித்துக் கொண்டேன்...
jayakumar இவ்வாறு கூறியுள்ளார்…
varungaala IAS ku en vaalthukkal....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...