முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புத்தக விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

6174 - நாவல்

            க . சுதாகர் என்பவரால் எழுதப்பட்டு வம்சி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் ‘6174’ நாவலைப் படிக்க நேர்ந்தது . தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் லெமூரியா என்ற வார்த்தையைத் தவிர அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வேறு மூலங்களே இல்லாத நிலையிலும் குவாண்டம் பிசிக்ஸின் தத்துவங்களுக்கு வாயைப்பிளக்கும் ஒரு கணிதப் பட்டதாரியான எனக்கு லெமூரியா + கணிதம் + இயற்பியல் + பண்பாட்டய்வு எனக் கலந்துகட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை . போதாததற்கு தம்பியின் கல்லூரி இறுதியாண்டு project வேறு Fibre Optic Crystals பற்றியது . கேட்கவா வேண்டும் ?

கமலாவும் நானும்

வணக்கம் ! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு . உங்க எல்லாருக்கும் “ திரு . பி . எஸ் . ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன் ” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும் . அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும் . அவர்கள் எழுதுன “ கமலாவும் நானும் ” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன் .

என்பிலதனை வெயில் காயும்

முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடை யில் வெளிவந்துள்ளது. நன்றி: இட்லிவடை படித்துவிட்டு நிச்சயம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.. கட்டுரை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டே வாங்கினேன். படிக்கத் தொடங்கியதும் பாதியில் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஸ்ட்ரெட்சில் படித்து முடித்து புத்தகத்தை மூடிக் கீழே வைக்கையில் தான் மீண்டும் அந்தத் ‘தலைப்பு’ கண்ணில் பட்டது. புத்தக அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை வேகமாகப் புரட்டி அப்போதே எதையோ தேட ஆரம்பித்திருந்தேன்... ’விமர்சனம்’ என்று சொன்னால் அது மிகை. புத்தகம் படிக்கையில் எனக்குத் தோன்றிய உணர்வுகளைக் கருத்துகளாகப் பதிய விரும்பியே இந்தச் சிறு முயற்சி. நான் படித்த நாஞ்சில் நாடனின் முதல் புத்தகம் இது. புத்தகம் முழுக்க ‘நாகர்கோவில்-தமிழ்’. நான் மணிமுத்தாறில் தங...