முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குட்டீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறக்கவே என்னை அழைக்கிறாய்!

எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பிடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எங்க ஆச்சியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எங்க பாட்டிக்கு எங்க அம்மா ஒரே பொண்ணு. எங்க அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு :-) அதனால என் மேல பயங்கர பாசம் எங்க பாட்டிக்கு. நான் ஏதாவது சேட்டை பண்ணிட்டு அம்மாகிட்ட அடிவாங்கி அழுதபோதெல்லாம் எங்க பாட்டி என் அம்மா மேல கோபப்பட்டு ‘உண்ணாவிரதம்’ இருப்பாங்கன்னா பார்த்துக்கோங்க! அதனாலயே நான் எப்பவும் அவங்க கூடவே அலைவேன். அவங்க எனக்கு இன்ட்ரோ கொடுத்து வெச்சதுதான் “அக்கக்கோ குருவி”. பெரிய ஆலமரத்துல எங்கேயோ ஒரு கிளையில உக்கார்ந்து “அக்கோ... அக்கோ”னு கூவிக்கிட்டே இருக்கும். என் தம்பி வேற என்னை அக்கானு தான் கூப்பிடுவானா.. ஸோ அது என்னைத் தான் கூப்பிடுதோனு எனக்குப் பயங்கர ஆவல். தினமும் அதுக்காகக் காத்திருந்து காத்திருந்து, எங்க அம்மாகிட்டேயும் ஆச்சிகிட்டேயும் கூட கேட்க ஆரம்பிச்சேன் அக்கக்கோ குருவி எங்கேனு. சமீபத்துல ஒருநாள் அதே குரலை இங்கே வீட்டருகில் கேட்டதும் ஒரு கணம் டைம் மெஷினில் ஏறி இறங்கிவிட்டேன். விடுமுறை விட்டதும் ஒவ்வொரு வருடக் கோவில் கொடைக்கும் அப்பாவின் ...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-3)

     படிக்கும் வயதில் யாரேனும் பாடம் எடுத்திருக்கிறீர்களா ? எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களில் சொல்லியே தீரவேண்டியவை - லேபிளில் இதுவும் ஒன்று! கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் மிகவும் ஆசைபட்டு மாலை வகுப்புகள் எடுக்கப் போவதாகப் பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்திருந்தேன் . முதல் நாளே நான்கு மாணவர்கள் .. ஒரு மாதத்தில் ஏறத்தாழ வீட்டுக்கு அருகிலிருந்த எல்லாக் குட்டீஸ்களும் என் வீட்டில் ஆஜர் எனலாம் . கிட்டதட்ட பதினாறு பேர் .. 1.     கல்யாணி – 1ம் வகுப்பு 2.     ப்ரியா – 2ம் வகுப்பு 3.     ராஜேஷ் – 1ம் வகுப்பு 4.     செல்வா – யு.கே.ஜி. 5.     பிரகாஷ் – 6ம் வகுப்பு 6.     முத்துமாரி – 3ம் வகுப்பு எனப்போய்க் கொண்டேயிருக்கும். “என்னடா இது! ஏதோ ட்யூஷன் எடுக்கலாம். சின்ன க்ளாஸ் பாடங்கள் எல்லாம் திரும்பவும் படிச்சமாரி இருக்கும்னு பார்த்து நாம ஒன்னு யோசிச்சா இப்படி நண்டுகளையும் வண்டுகளையும் வெச்சு என்ன பண்ண..” என்று தோன்றியது. “சர...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் –பகுதி ஒன்று படிக்க கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை. காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-1)

“ எப்படி அக்கா இவளை வெச்சு சமாளிக்கிறீங்க ” என வெறுப்பின் உச்சத்தில் நான் வாய்விட்டுக் கேட்டுவிட்ட அந்தக் கேள்வியில் “ இவளா கேட்டாள் ” எனச் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனார்கள் பாப்பாத்தி அக்கா . “ என்ன பவித்ரா பண்றது ? நீயும் பார்க்கத் தான் செய்ற . இதுக்கு மேல எப்படி கண்டிக்கிறது ? நானும் அடிச்சுப் பார்த்துட்டேன் . எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன் . ஒன்னும் நடக்கமாட்டேங்குதே !” என வருத்தப்பட்டார்கள் அக்கா . “ இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க .. கண்டிக்கிறது தப்பில்லை . ஆனா , எந்த விஷயத்துக்காக , எந்த நேரத்துல , எப்படி கண்டிக்கிறீங்கங்குறது தான் முக்கியம் . அடிக்க வேண்டிய நேரத்துல அடிச்சா தான் அடுத்து அதைச் செய்யும்போது பயம் வரும் . சும்மா சும்மா அடிச்சிட்டே இருந்தா , அதோட சீரியஸ்னஸ் தெரியாம போயிரும் . அடிவாங்கி அடிவாங்கி மழுங்கிரும் . குட்டிப் பையன் கூட பரவாயில்ல . இவ இருக்காளே .. வாயாடி . காயத்ரி தான் பெரிய சேட்டை ! சரி விடுங்க . வளர வளர சேட்டை குறைஞ்சிடும் ” என்று நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்...