நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை. வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா? அதைத் தான் நானும் “தீ”விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. துருக்கி தான்
Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று.
“Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். “இதில் என்ன அதிர்ச்சி” என்று கேட்பவர்களுக்கு – “பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘தமிழ்’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும்?”
நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது,
Indo-European மட்டுமல்ல மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic,
Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு படுத்தப்பட்டுள்ளன என்பது. லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் எல்லாமே இந்த
Indo-European மொழிக்குடும்பத்தின் கீழ் வருபவை தான்! எனவே, Tamilnadu
India-வில் இருந்தாலும் Tamil, "Indo" languages-ன் கீழ் வரவில்லை! (நிற்க: வாசிக்க: பதிவின் முதல் வரி)
“சரி அப்படியென்றால் ‘தமிழ்’ எந்தப் பிரிவில் வருகிறது” என்று கேட்கிறீர்களா?
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தில் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் etc.) ஒன்றாக வருகிறது.
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தில் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் etc.) ஒன்றாக வருகிறது.
அந்தத் திராவிட மொழிகள் ‘Proto
Dravidian’ மொழிக்குடும்பத்தின் கீழ் வருகின்றன. ‘திராவிட’க்கு முன் ஏன் இந்த
‘Proto’ என்றால் திராவிட மொழிகளில் காணப்படும் ஒற்றுமைகள் தான். இந்த எல்லா மொழிகளுக்கும் முன்னர் ஏதோ ஒரு மொழி வழங்கி வந்ததாகவும் இவை அதிலிருந்து பி(தி)ரிந்து வந்தவையாகவும் ஒரு
hypothesis(அனுமானம்). இந்த
Proto-Dravidian-க்கும் மேலே
“Nostratic” அதுக்கும் மேலே
“Proto-Nostratic” என மேலும் பல கொத்துப் ‘புரோட்டா’க்கள் இருப்பதை விக்கிப்பீடியா மிக அழகாக, தெளிவாக, விளக்கெண்ணெய் வைத்து விளக்காத குறையாக விளக்கினாலும் ...(உங்களுக்கு விளங்கலாம்). வெறும் ‘தமிழ்’ மொழியை, அதுவும் இதுவரை இருந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வைத்த செய்திகளைக் கொண்டு தொடர்ந்து ஆராயவே நமக்கு எனக்கு வாழ்நாள் போதாது. இதில்
Proto-Nostratic எல்லாம்
abnormal மூளை உள்ளவர்களால் மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடியும் :-)
உலகின் மிகப் பழமையான மொழிகள் எனக் கருதப்படுபவை தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தின் மற்றும் ஹீப்ரூ. “ஒரே நாட்டில் இரு வேறு பழமையான மொழிகள் (தமிழ் & சமஸ்கிருதம்) உருவாகியனவா?” என்ற கேள்விக்கு இன்னும் சரியாக விடை தெரியவில்லை. சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் முற்றிலும் வேறான வேர்களைக் கொண்டவை என்றே உலக அறிஞர்களால் பேசப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்துக்கும் ஈரானிய மொழிகளுக்கும் (பெர்சிய மொழிக்கும்) உள்ள நெருங்கிய தொடர்புகளை வைத்து அதனை
Proto-Indo-European (PIE) குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகின்றனர். Baltic,
Slavic, Uralic போன்ற PIE குடும்ப மொழிகளுடன் சமஸ்கிருதத்துக்கு இருக்கும் சொற்கள் பரிமாற்றமும் தாவரங்கள்/விலங்குகளின் பெயர் ஒற்றுமைகளைக் கொண்ட சொல்லகராதிகள் ஒன்றாக இருப்பதுவும் தான் காரணம்.
ஆனால், உதாரணத்திற்கு சமஸ்கிருதம் அல்லது அதிலிருந்து வந்த ஹிந்தி மொழியை எடுத்துக்கொண்டால் “ क़ + अ = क ” என்று தமிழின் “ க் + அ = க ” போலவே வரிசையாக எழுதப்படுவதைக் காணலாம். இத்தருணத்தில் நமக்கு, ஆங்கிலத்தில் இதைப்போல் உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்து உயிர்மெய் எழுத்துகள் உருவாவதில்லை என்பது நினைவிற்கு வரவேண்டும். மேலும் “क” என்னும் எழுத்துக்கும் “க” என்னும் எழுத்துக்கும் உள்ள உருவ ஒற்றுமை! இவற்றையெல்லாம் பார்க்கையில் சமஸ்கிருதத்தின் சொல்லகராதி PIE மொழிகளைப் போலவும் எழுத்துகள் எழுதும் முறை தமிழைப் போலவும் இருப்பது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
முதலில் தோன்றியது தமிழா? சமஸ்கிருதமா? என்ற வாதம் காலந்தொட்டு நிகழ்ந்துவரும் ஒன்று. அந்த வரிசையில் ஒரு முக்கியமான(?) சர்ச்சைக்குரிய புத்தகம் – சமீபத்தில் வெளிவந்துள்ள
“Mirror of Tamil and Sanskrit”. இதை எழுதியுள்ளவர் Dr. R.
நாகசாமி, தமிழக அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். உலகத் தமிழறிஞர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் புத்தகம் இது. காரணம் இலக்கணம், இலக்கியம், அறம் போன்ற அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்து தான் தமிழ் பெற்றுள்ளது எனக்கூறும் இவர் ‘எழுத்து முறை’ கூட தமிழுக்குச் சொந்தமாக இருக்கவில்லை; பிற்காலத்தில் சமஸ்கிருதமாகத் திரிந்த பிராகிருதத்தில் இருந்து தான் தமிழ் எழுத்து முறை உருவானது எனவும் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் இவர்.
அதுமட்டுமா? தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து திருடப்பட்ட (அ) சமஸ்கிருதத்தைத் தழுவி இயற்றப்பட்டவையே எனச் சொல்கிறார். இவ்வாறு தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதமே என்கிறார் :-)
கூகிளில் சுமார் நூற்றுக்கும் மேலான ஆங்கில/தமிழ் மூலங்களைத் தேடிப்படித்த போது பல்வேறு விடயங்கள், ஆதாரங்கள், ஆதங்கங்கள் காணப்பட்டன. எல்லாவற்றையும் தொகுத்துக் குறிப்பெடுக்கும்
ஆவலில் தான் இக்கட்டுரையைத் தொடங்கினேன். ஒரே பதிவில் எழுதினால் நன்றாக இருக்காது என்பதால் பிரித்துப் பிரித்து எழுத நினைக்கிறேன். படிப்பவர்கள் தங்களது ஆதாரப் பூர்வமான வாதங்களைக் கருத்துப்பெட்டியில் முன்வைக்கலாம்.
கல்லூரிக் காலங்களில் தமிழ் இருக்கும்போது சமஸ்கிருதத்தைப் பாடமாக எடுக்க மனம் வரவில்லை. ஆனால் பகவத் கீதையை அட்சரம் பிறழாத சமஸ்கிருதத்தில் மற்றவர்கள் படிப்பதைக் கண்டு ஆர்வம் கொண்டு சிறிது தாமதமாகத் தனியாக சமஸ்கிருதத்தைப் படிக்கத் தொடங்கினேன். பல வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டவளிடம் “சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் உருவானது” என்று மெல்லிய குரலில் கூறினார் என் ஆசிரியர். உடனே ஓடிச்சென்று தமிழாசிரியரிடம் கேட்டபோது “யார் சொன்னது? தமிழ் தான் முதலில் தோன்றியது” எனறு கூறிப் புன்னகைத்தார் அவர்! அப்பம் ஆரம்பிச்சி.. இப்பம் தொடருது.
குறிப்பு: இவ்வாராய்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ள கருத்துகளும் முழுக்க முழுக்க எனது ஆர்வத்தால் எழுதப்பட்ட எனது சொந்த கருத்துகளே.
கருத்துகள்
சமஸ்கிருதம் என்றாலே செம்மைபடுத்தப் பட்ட மொழி என்று பொருளாம். ஆகா சமஸ்கிருதம் எனபது இன்னொரு மொழியிலிருந்து செம்மைப்படுத்தப்பட்டது என்ற பொருளை தருகிறது. அது தமிழாக இருக்கலாம் என்று சிலர் சொல்ல நான் கேள்விபட்டேன்.
இந்த உண்மை யாருக்கு தெரியும் என்றால் தமிழை அகத்தியனுக்கும் , சமஸ்கிருதத்தை பாநிநிக்கும் தந்த, ஆபிரகாமிய மதங்களாலும், இந்து மதத்தாலும் ஈசன் என்று கூறப்படும் ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும் :)
நல்ல பதிவு. இப்பதிவில் தொடங்கி இன்னும் நிறைய விவரம் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
http://www.ancientscripts.com/sa_ws.html
எழுத்துமுறை பற்றி சொல்லவேண்டும் எனில் பிராஹி எழுத்துமுறையில் இருந்தே தமிழ்[பொ.ஆ 600],தேவநாகரி[பொ.ஆ 1000] உருவாகின. இரண்டுமே இதற்கு முன் தமிழ் கிரந்தத்திலும் எழுதப்பட்டும் வந்துள்ளன.
நான் கொடுத்த சுட்டி குறித்தும் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
தொடர்கிறேன். நன்றி!!!
மொழியையும் எழுத்துக்களையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். மொழி ஒலி மற்றும் அதை உச்சரிப்பதற்கான விதிமுறைகள் (இலக்கணம்) கொண்டது. தமிழ், சாங்கிருதம் இரண்டையும் ரோமன் எழுத்தை (லிபி) வைத்தும் கூட எழுதிக் கொள்ள முடியும். Do not confuse language with script. Many languages have switched their native scripts in history. Eg. Malay language dropped its native script and adopted English/Roman scrit in 20th century.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அழகாகச் சொன்னீர்கள் அப்பா :))
நானும் அவ்வாறு படித்திருக்கிறேன்.
/இந்த உண்மை யாருக்கு தெரியும் என்றால் தமிழை அகத்தியனுக்கும் , சமஸ்கிருதத்தை பாநிநிக்கும் தந்த, ஆபிரகாமிய மதங்களாலும், இந்து மதத்தாலும் ஈசன் என்று கூறப்படும் ஏக இறைவனுக்கு மட்டுமே தெரியும் :)/
ரசித்தேன் :))
தங்களது ஊக்கத்திற்கும் கருத்துக்கும் நன்றி!
நல்ல தகவல். எழுத்துமுறைகளைப் பற்றியும் தொல்பொருள்கள் குறிப்புகள் பற்றியும் தனியாகப் பார்க்கலாம் :)
மிக்க நன்றி!
வெல்கம் :) நன்றி..
நன்றி ஷமீர் :)
Its true that “Script” and “Language” are entirely different things. Here I am just wondering at the “connection” between the origin of Tamil and origin of Sanskrit as two individual languages..
கருத்துக்கு நன்றி. சரியாகச் சொன்னீர்கள். தாங்கள் கீழ்க்காணும் இந்தப் பதிவையும் படிக்க வேண்டுகிறேன். நன்றி!
http://subadhraspeaks.blogspot.in/2013/06/is-tamil-100000-years-old.html
By
Arjun Sridhar UR
http://arjunsridharur.blogspot.com
From Pirakirutham the people who migrated from Central Asia and Southern Part of today's Russia formed a new language by mixing Pirakirutuham and Persian. In rig veda you can see a lot of Tamil words. The grammar of Sanskrit is the grammar of Russian. He one of the highly idiotic to get a job extension or to please amma, he has wrote this with the help of "The Hindu" news paper group.
நனி மகிழ்ச்சி 😊
மற்ற மொழிகளைப் பற்றித் தெரியாவிட்டால் மௌனமாக இருங்கள். பிதற்றாதீர்கள்.
நாக சாமி அல்ல...