There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

Smileys

Apr 1, 2013




குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா.. குக்கூ.. குக்கூ..

இல்ல.. ஒரு கழுதை கத்துற சத்தம் தான் நாராசமா கேட்குது :) நீ பாடுன? :P

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா :(

.. பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும்.. ம்.. மொதல்ல கழுதை சொன்னேன்ல? இங்க குரங்குனு போட்டுக்க :D

ஆஆஆ... நான் அழுவேன் :(

அதெப்படி இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் நினைச்ச மாத்துரத்துல தரதரனு கண்ணீர் அருவியா கொட்டிருது?

அதென்ன காவிரி தண்ணியா, வராம இருக்குறதுக்கு? அதுசரி.. நான் வந்தது கூடத் தெரியாம என்ன பாடிட்டு இருந்தீங்க?

நினைத்தேன் வந்தாய்.. நூறு வயது.. கேட்டேன் தந்தாய்.. ஆசை மனது ;)

என்கிட்ட கேட்டு என்ன புண்ணியம்? சீக்கிரமா எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பாகிட்ட என்னைய பொண்ணு கேளுங்க :-/

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்; யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்; ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்; ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்; உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்...

பொண்ணு கேட்கச் சொன்னா, அது மட்டும் காதுல கேட்காத மாதிரி நடிக்கிறது.. மத்த எல்லாத்தையும் கேட்குறது.. எனக்கு உங்க மேல நம்பிக்கையே இல்ல :( நான் பேசாம எங்க வீட்டுல பார்க்குற பையனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. :(

பாடிப் பறந்த கிளி.. பாத மறந்ததடி பூமானே.. :(

என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா? இல்லை நானா? ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது நீயா? இல்லை நானா? X(

உன்னோடு லவ் என்று யார் சொன்னது? :P

அடப்பாவி !!!!!!! :(

நீ வேறு நான் வேறு யார் சொன்னது? ;)

என்கிட்ட பேசாதீங்க.. இனிமே நானும் உன்ககிட்ட ஒரு வார்த்தை கூட பேசுறதா இல்ல.

வார்த்தை தேவையில்லை.. வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே..
நேற்று தேவை இல்லை.. நாளை தேவையில்லை.. இன்று இந்த நொடி போதுமே! :)

போதாது..

வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒரு முறை சொன்னால் போதும்.. நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே!

மத்தியானம் ஒரு மணி வெயில் தீயாக் கொளுத்துது.. இப்போ நிலா வராதுங்கறதுக்காக இப்படி அளந்து விடுறீங்களா? எனக்கு அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை..

அப்படினா, ஒரு ஜிகர்தண்டா?

இது போதும் எனக்கு.. இது போதுமே.. வேறென்ன வேணும்.. இது போதுமே :)

சொல்லிட்டாளே அவ காதல.. சொல்லும் போதே சுகம் தாளல.. இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல.. :-*

அச்சச்சோ.. படத்துக்கு டைம் ஆச்சு!

அட ஆமா.. சீக்கிரம் வா வா கிளம்பலாம்..

அப்போ ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டாஆஆஆஆஆஆஆஆஆ? :(

வாங்கித் தர்றேன்.. குடிச்சிகிட்டே வா :)

ஐயோ.. இந்தப் பாதை.. இப்படிப் போங்க!

சாராயத்தில் ஏது போதை.. இந்தப் புள்ள பாத்தா.. சட்டுனு தான் மாறும் பாதை தானா தன்னனானா :D

:) :D ;) :( :P :| :-/ :-O :-* :X :> B-) :-@

14 comments:

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹா... ஹா... ஹா... பாட்ல்களை வைத்து நகைச்சுவை சரவெடி கொளுத்திப் போட்டு ரசிச்சுச் சிரிக்க வெச்சுட்டீங்க சுபத்ரா. அருமை! நன்றி!

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Onnum Puriyala
Solla Theriyala
Kannu Muzhiiyila
Kanda Azhagula
Aasai Kooduthae....:P

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@பால கணேஷ்

நன்றி :) சிரிப்பு வந்ததா என்ன? நான் சும்மா நிறைய பாட்டு எழுதனும்னு ஆசையில இந்தப் பதிவை எழுதினேன்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Anonymous

:) :)

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹா...ஹா... பாடல் வரிகளை வைத்து கலக்கிடீங்க...!!! தொடர வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக மிக அருமை
நிச்சயம் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது
தங்கள் பதிவின் ஞாபகம்தான் வரும்
வாழ்த்துக்கள்

ஜீவன் சுப்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அட அடடா ...!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி :) ஏற்கனவே இதே போன்று ஒரு பதிவை ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிருக்கேன்..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Ramani S

மிக்க மகிழ்ச்சி :)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

என்ன ரியாக்‌ஷன் இது? நல்லாயிருக்கா.. இல்ல கடுப்பா இருக்கா :)

ஜீவன் சுப்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அட என்னங்க நீங்க ... நல்லாருக்குங்க.

அட அடடடா ...! ன்னு ஒரு வரி, "நான் ஈ" படத்துல ஒரு பாட்டுல வருமே , அந்த வரிகளதான் சொல்லவந்தேன் .

அட அடடடா ஓரு ட வை விட்டதினால் ஐயோடா ஆயிடுத்து .

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

இப்போ கூட இன்னொரு ‘ட’ மிஸ்ஸிங்..

அட அட டட டா :)

நான் முதல்லயே பாடிப் பார்த்தேன். நிறைய ‘ட’ மிஸ் ஆனதால தான் கேட்டேன்..:)

ஜீவன் சுப்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அட அட டட டா :)...!
இப்ப ஓகேங்களா ...?

( பீ கேர்புல் ... நோ நோ ..இது எனக்கு நானே சொல்லிக்கிறேன். )

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ஜீவன்சுப்பு

:D