தற்கொலை

Apr 18, 2013




இதயத்தைத் துளை போடும்
ரணம் ஒன்று
வேரறுத்துக் கொண்டிருக்கிறது

வலியினை வார்த்தைகளாக்கி
எழுதிய
ஊனக் கவிதை ஒன்று
இப்போது தான்
குறைப் பிரசவமாகியுள்ளது

மிருகங்களால் மறுதலிக்கப்பட்ட
அந்த என் குழந்தையை
சிறகடைத்துக் கொள்கிறேன்

உமிழ்நீரின் அமிலங்களை
அதற்கேனும்
அறிமுகப்படுத்தப் போவதில்லை

பாவக் கறைபட்ட
என் வேதனைகளின் எச்சமாகிய
அவளை
எவனோ கற்பழிக்கும் முன்
நானே காப்பாற்றிவிடப் போகிறேன்

இதோ..
கொடூரமாய்க் கிழிந்து கிடக்கும் என்
காதல் கடிதத்தைப் போல
அவளைக் குரூரக் கொலை செய்யப் போகிறேன்.

7 comments:

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வலி நிறைந்த கவிதை...
வாழ்த்துக்கள்...

கவியாழி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வலியான கவிதை அருமை

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வேதனை அலைகளை எழுப்பி மனசைப் பிசைகிறது கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்தக் கொடுமை மாற வேண்டும்...

Siva Yogi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates



//எவனோ கற்பழிக்கும் முன்
நானே காப்பாற்றிவிடப் போகிறேன்///

//எழுதிய ஊனக் கவிதை //

இந்த ஊன கவிதையை படிக்க வந்த எங்களை யார் காப்பாற்றுவது :)

சண்முகா எடரா வண்டிய...

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

kavithai super!!!

Santha Kumar

Deepak said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது வாழ்த்துக்கள்