இதயத்தைத் துளை போடும்
ரணம் ஒன்று
வலியினை வார்த்தைகளாக்கி
எழுதிய
ஊனக் கவிதை ஒன்று
இப்போது தான்
குறைப் பிரசவமாகியுள்ளது
மிருகங்களால் மறுதலிக்கப்பட்ட
அந்த என் குழந்தையை
சிறகடைத்துக் கொள்கிறேன்
உமிழ்நீரின் அமிலங்களை
அதற்கேனும்
அறிமுகப்படுத்தப் போவதில்லை
பாவக் கறைபட்ட
என் வேதனைகளின் எச்சமாகிய
அவளை
எவனோ கற்பழிக்கும் முன்
நானே காப்பாற்றிவிடப் போகிறேன்
இதோ..
கொடூரமாய்க் கிழிந்து கிடக்கும் என்
காதல் கடிதத்தைப் போல
அவளைக் குரூரக் கொலை செய்யப் போகிறேன்.
கருத்துகள்
வாழ்த்துக்கள்...
//எவனோ கற்பழிக்கும் முன்
நானே காப்பாற்றிவிடப் போகிறேன்///
//எழுதிய ஊனக் கவிதை //
இந்த ஊன கவிதையை படிக்க வந்த எங்களை யார் காப்பாற்றுவது :)
சண்முகா எடரா வண்டிய...
Santha Kumar