முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமாவாசையும் பௌர்ணமியும்




கருவேப்பிலைக் கொழுந்தே
என்றே எப்போதும்
செல்லமாகக் கொஞ்சும்
அப்பா..

அப்படியென்ன தெரிகிறது
அந்தக் கண்ணாடியில்..
கருவாச்சி
எனக் கடிந்துகொள்ளும்
அம்மா..

அடிவாங்கி அழும்போதெல்லாம்
போடீகருப்பாயி
என ஆத்திரத்தைக் கொட்டும்
தம்பி..

உனக்குக் கல்யாணம் ஆகுறது
கஷ்டம்டீ
என வக்கணை காட்டும்
தோழி..

உன் நிறத்துக்கு
இதுதான் பொருந்தும்மா
எனப் பிடிக்காததைத் திணிக்கும்
துணிக்கடைக்காரன்..

மாதா மாதம்
மளிகைப் பொருட்களுடன்
மறவாமல் இடம்பிடிக்கும்
ஃபேர் அன்ட் லவ்லி

எல்லாம் மறந்து போனது
நீ என் கிளியோபட்ரா
எனப் பாடிப்
பரிசம்போட்டுப் போன
சீமைக்காரன் போன்ற
சிவப்பு மாப்பிள்ளையால் !
.

கருத்துகள்

MANO நாஞ்சில் மனோ இவ்வாறு கூறியுள்ளார்…
அட்ரா சக்கை.....சூப்பர் கவிதை.....
MANO நாஞ்சில் மனோ இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்.....
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதையா இது
ஒரு கருவாச்சி காவியமா இருக்கு
நல்ல இருக்கு

எதார்த்தமான இலக்கிய வரிகள்
பிடித்தமான துணிகூட
போடமுடியாத
நிலையை கூட கவிதையாய்

மிக ரசித்தேன்...

ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டாலும் நச்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@MANO நாஞ்சில் மனோ

நன்றி நாஞ்சில் மனோ சார் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@siva

ரொம்ப பேசிட்ட.. இருந்தாலும் என்னுடைய heartfelt thanks :)
ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
கிளியோபாட்ரா

:))))))))))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ப்ரியமுடன் வசந்த்

கிளியோபட்ராக்கு என்ன?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நைஸ் சுபா! :)
FREIND-நண்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
nalla irukku கருவாச்சி காவியமா இருக்கு
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Balaji saravana

Thank You BS :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@FREIND-நண்பன்

நன்றி நண்பன் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜெ.ஜெ

Thank You Dear ;)
sivamahan இவ்வாறு கூறியுள்ளார்…
gr888888
Chandrasegar Gurusamy இவ்வாறு கூறியுள்ளார்…
I like your kavithai very much. pl continue . All the best.
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
பேசும் வார்த்தைகளில்தான் இருக்கிறது எல்லாமும்.. அருமை.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@sivamahan

Thank U :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Chandrasegar

Thank U very much. Keep visiting :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@"உழவன்" "Uzhavan"

மிக்க நன்றி !!
சாந்தி மாரியப்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லாருக்குங்க கவிதை..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@அமைதிச்சாரல்

மிக்க நன்றி !! :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Simply super
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
simply super
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சீமைக்காரன் போன்ற
சிவப்பு மாப்பிள்ளையால் !//
ஹா சூப்பர் கலக்கலான முடிவு
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Kumar

Thank U Kumar :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றிங்க சதீஷ் :)
Harini Resh இவ்வாறு கூறியுள்ளார்…
Really Supperb :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Harini
Thank u dear :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...