முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆத்திசூடி

றம் செய விரும்பு.
றுவது சினம்.
யல்வது கரவேல்.
வது விலக்கேல்.
டையது விளம்பேல்.
க்கமது கைவிடேல்.
ண்ணெழுத்து இகழேல்.
ற்பது இகழ்ச்சி.
யமிட்டு உண்.
ப்புரவு ஒழுகு.
துவது ஒழியேல்.
வியம் பேசேல்.
கம் சுருக்கேல்.

ண்டொன்று சொல்லேல்
ப்போல் வளை.
னி நீராடு.
யம் பட உரை.
ம் பட வீடெடேல்.
க்கம் அறிந்து இணங்கு.
ந்தை தாய்ப் பேண்.
ன்றி மறவேல்.
ருவத்தே பயிர்செய்.
ண்பறித்து உண்ணேல்.
ல்பு அலாதன செயேல்.
மாட்டேல்.
வம் பஞ்சில் துயில்.
ஞ்சகம் பேசேல்.
கலாதன செயேல்.
மையில் கல்.
னை மறவேல்.
ந்தல் ஆடேல்.

டிவது மற.
காப்பது விரதம்.
கிழமைப்பட வாழ்.
கீழ்மை அகற்று.
குணமது கைவிடேல்.
கூடிப் பிரியேல்.
கெடுப்பது ஒழி.
கேள்வி முயல்.
கைவினை கரவேல்.
கொள்ளை விரும்பேல்.
கோதாட்டு ஒழி.
கௌவை அகற்று.

க்கர நெறி நில்.
சான்றோரினத்து இரு.
சித்திரம் பேசேல்.
சீர்மை மறவேல்.
சுளிக்கக் சொல்லேல்.
சூது விரும்பேல்.
செய்வனத் திருந்தச் செய்.
சேரிடம் அறிந்து சேர்.
சையெனத் திரியேல்.
சொற் சோர்வு படேல்.
சோம்பித் திரியேல்.

க்கோன் எனத்திரி.
தானமது விரும்பு.
திருமாலுக்கு அடிமைசெய்.
தீவினை அகற்று.
துன்பத்திற்கு இடங்கொடேல்.
தூக்கி வினைசெய்.
தெய்வம் இகழேல்.
தேசத்தோடு ஒத்துவாழ்.
தையல் சொல் கேளேல்.
தொன்மை மறவேல்.
தோற்பன தொடரேல்.

ன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
நிலையில் பிரியேல்.
நீர் விளையாடேல்.
நுண்மை நுகரேல்.
நூல்பல கல்.
நெற்பயிர் விளை.
நேர்பட ஒழுகு.
நைவினை நணுகேல்.
நொய்ய உரையேல்.
நோய்க்கு இடங்கொடேல்.

ழிப்பன பகரேல்.
பாம்பொடு பழகேல்.
பிழைபடச் சொல்லேல்.
பீடு பெற நில்.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
பூமி திருத்தியுண்.
பெரியோரைத் துணைகொள்.
பேதமை அகற்று.
பையலோடு இணங்கேல்.
பொருள்தனைப் போற்றி வாழ்.
போர்த்தொழில் புரியேல்.

னம் தடுமாறேல்.
மாற்றானுக்கு இடம்கொடேல்.
மிகைப்படச் சொல்லேல்.
மீதூண் விரும்பேல்.
முனை முகத்து நில்லேல்.
மூர்க்கரோடு இணங்கேல்.
மெல்லி நல்லாள்தோள் சேர்.
மேன்மக்கள் சொற்கேள்.
மைவிழியார் மனையகல்.
மொழிவது அறமொழி.
மோகத்தை முனி.

ல்லமை பேசேல்.
வாது முற்கூறேல்.
வித்தை விரும்பு.
வீடு பெற நில்.
வுத்தமானாய் இரு.
வூருடன் கூடி வாழ்.
வெட்டென பேசேல்.
வேண்டி வினை செயேல்.
வைகறைத் துயிலெழு.
வொன்னாரைத் தேறேல்.
வோரஞ்சொல்லேல்.

ஔவையார் (12ம் நூற்றாண்டு)

கருத்துகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
இதில் சிலதுக்குப் பொருள் அறிய ஆவல்
1-இயல்வது கரவேல்
2- சித்திரம் பேசேல்
3- சையெனத் திரியேல்
பாம்போடு பழகேல்- என பொதுவாகக் கூறுகிறார். எல்லாப்பாம்பும் கொடியன வல்ல. பாம்பைவிடக் கொடிய மனிதர் பலர்.
தையல் சொல் கேளேல்- இவர் பெண்ணாக இருந்து இப்படிக் கூறியுள்ளாரே!
இவர் சொல்வதைக் கேட்கக் கூடாதா?
அல்லது மனவி சொல்லா?
தோற்பன தொடரேல்- என்கிறாரே...
பலர் தொடர், தோல்வியிலேயே வெற்றி கண்டுள்ளார்கள்.
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
அவ்வையின் ஆத்திச் சூடியை
முழுமையாகப் படிக்க வெகு நாளாக ஆசைப்பட்டேன்
முழுமையாகப் பதிவிட்டமைக்கு நன்றி
இறுதியாக நூற்றாண்டை குறிப்பிட்டிருந்ததை
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி...
Easy (EZ) Editorial Calendar இவ்வாறு கூறியுள்ளார்…
மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ யோகன் பாரிஸ்

இயல்வது கரவேல்:
இயல்வது - இயன்றது
கரவேல் - மறைக்காதீர்கள்
தங்களால் இயன்றதை ஒளித்து வைக்காமல் பிறருக்குக் கொடுங்கள்.

சித்திரம் பேசேல்:
சித்திரம் - பொய்யை மெய் போல் சித்தரித்துக் கூறுவது.
பொய்யை உண்மையைப் போல் பேசாதீர்கள்.

சையெனத் திரியேல்:
பார்ப்பவர்கள் “சை”(சீ) என அருவருக்கும்படி திரியாதே.

பாம்போடு பழகேல்:
பாம்பு போல் கொடிய விஷம் கொண்டவர்களுடன் பழகாதே.

தையல் சொல் கேளேல்:
மனைவி மேல் மயக்கம் கொண்டு அவள் சொல்வதை எல்லாம் கேட்டு ஆராயாமல் நடவாதே.

தோற்பன தொடரேல்:
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் முடியும் எனத் தெரிந்தே அச்செயலைச் செய்வதைத் தொடராதே :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Ramani S.
மிக்க நன்றி :-)

@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி!

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் வாழ்க!!!!!!!
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுபதரா - அவ்வை அருளிச் செய்டஹ் ஆத்திச்சூடியினை பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...