முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டைட்டில் வேற வைக்கனுமா?


வள் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் அவள் எப்பவுமே செகண்ட். இன்னொரு பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட். இருவரும் அருகருகே தான் உட்கார்ந்திருப்பார்கள். அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள். ஒரு நாள் கணக்கு நோட்டை ஆசிரியரிடம் காண்பித்துடிக்வாங்கிவிட்டு இருக்கைக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. தன்னுடைய புத்தம்புது ஜாமெட்ரி பாக்ஸில் யாரோ கிறுக்கியிருந்தார்கள். அவளுக்குப் புரிந்துவிட்டது..


இது இவன் வேலையாத் தான் இருக்கும். எப்பம் பாத்தாலும் இவன் தான் காம்பஸ் வெச்சு பாக்ஸ்ல கிறுக்கிக்கிட்டே இருப்பான்! இரு குடுக்கேன் ஒரு கொடை

எல.. இந்த ஜாமெட்ரி பாக்ஸ் ஏன்கொள்ளது தான? இதுல ஏன் காம்பஸ் வச்சி கிறுக்கி வெச்ச?” என அவள் சண்டைக்குப் போக அவனோ நிதானமாகப் பேசினான்.

அட கிறுக்கி.. அது கிறுக்கல் இல்ல. அதுல என்ன எழுதிருக்கு?”

“1 4 3”

அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டான். இவளும் பேந்த பேந்த முழித்துவிட்டு என்னவெல்லாமோ கெஸ் பண்ணிப் பார்த்துவிட்டு இறுதியில் ஈகோவை விட்டுட்டு அவனிடமே கேட்டாள்..

 என்னல அர்த்தம்?”

“1 = I, 4 = LOVE, 3 = YOU; “I LOVE YOU” னு அர்த்தம்

சரி அப்பம் “I HATE YOU” க்கும் அதே தானல வரும்? எதுக்கு முழுசாச் சொல்லாம நம்பர்ல சொல்லுதாங்க?” என்னும் அறிவுப் பூர்வமான கேள்வி ஒன்றைக் கேட்டு அவனை மடக்கினாள். “இது சரிபட்டு வராதுஎன அவன் விட்டுச்சென்ற பின்பு தான் அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

இவன் ஏன் நம்ம பாக்ஸ்ல இப்படி எழுத வெச்சான்? அப்படின்னா...!!!”

அதன்பிறகு வந்த சில தினங்களில் அவன் பார்க்காவிட்டாலும் அவள் அவனது முகத்தைப் பார்க்கவே அவ்வளவு வெட்கப்பட்டாள். என்னவென்றே தெரியாத உணர்வு..

இது தான் காதலா?”

வள் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில். டியூஷன் முடித்து வீட்டுக்குத் திரும்பும் பாதையில் ஸ்கூட்டி நின்று விட்டது. மழை வேறு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. அந்தப் பாதையில் பேருந்துக்கும் வழியில்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போதே தூரத்தில் தன்னோடு டியூஷன் படிக்கும் யாரோ ஒருவன் வருவது தெரிந்தது. தனியாகத் தவிக்கும் இவளைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்.

நீ கோயில்மணி சார் டியூஷன் தான? என்னாச்சு?”

தண்ணிக்குள்ள விட்டுட்டேன். ஸ்டார்ட் ஆக மாட்டேங்கு

ரோடு இந்தப் பக்கம்லா இருக்கு? நீ எதுக்கு அங்கன போய் வண்டிய உட்ட?!”

மானத்தை வாங்குறானே.. சரியா வண்டி ஓட்ட தெரியாதுனா சொல்ல?!”

வண்டி ஓட்டத் தெரியாதா?”

“...”

அவனும் சேர்ந்து எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் உருட்டிச் சென்று பக்கத்துக் கடையில் நிறுத்தி லாக் செய்துவிட்டு அவனது பைக்கிலேயே வீட்டுக்குச் சென்றாள். அம்மாவுக்குத் தான் சிறிது பதற்றம்..

ரொம்ப தேங்க்ஸ் தம்பி..  உங்க வீடு எங்கயிருக்கு?

பக்கத்துல தாம்மா. பிள்ளையார் கோயில் தெரு

போகும் போது கண்ணாலே பேசி நன்றி கூறிய அவளைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்துச் சென்றான். அதற்கு அடுத்து வந்த நாட்கள் அவள் காதல் வாழ்க்கையின் பொன்னேடுகளில் முத்த எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை!

இது தான் காதலா...?!”

வள் அப்போது ஒரு கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

உனக்குலாம் மனசுனு ஒன்னு இருக்கா?”

“...”

காதல்னா என்னனு உனக்குத் தெரியுமா?”

“...”

காலேஜ்ல உன்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து மூனு வருஷமா உன் பின்னாடி சுத்துதேன். கொஞ்சங் கூட என்னை மதிக்க மாட்டேங்க?”

எனக்காக நீ என்ன செய்வ?”

என்ன செய்யனும்?”

என்ன பாத்துகிட்டே இருக்கது.. பின்னாடி சுத்துறது.. எல்லாத்தையும் நிறுத்தனும்..”

அதற்குப் பின் அவன் அவளைக் கண்டுகொள்வதே இல்லை. அவன் பார்க்கிறானா இல்லையா எனப் பார்த்துப் பார்த்தே இவளுக்கு அவன்மேல் ஒருஇதுஉருவாகிவிட்டது..

நில்லு.. என்னை ஏன் இப்பமெல்லாம் பாக்கவே மாட்டேங்க?”

என்ன பிள்ள.. வெளையாடுதியா? நீ தான பாக்காதனு சொன்ன?”

அதுக்குனு உட்ருவியா? இதுக்குப் பேரு தான் லவ்வா?”

அவனிடம் அவள் பேசியதை அவளாலே நம்ப முடியவில்லை.. “இது தான் காதலா?!!”

வள் இப்போது தன் மகளின் வருகைக்காகக் காத்திருந்தாள். பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம் முடிந்து பத்து வருடங்கள் பறந்தோடிவிட்டன. பள்ளிக்கூடம் சென்றவள் வீடு திரும்பும் நேரம் தான் இது.

அம்மா...!”

குரல் கேட்டுத் திரும்பினாள். மகள் வருவது தெரிந்தது..

என் ஜாமெட்ரி பாக்ஸ்ல அருண் கிறுக்கி வெச்சிட்டான் ம்மா.. இங்க பாரேன்!”

அவள் அதில் ஆர்வமுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Unmaiyaana karpanai:-)
vimal இவ்வாறு கூறியுள்ளார்…
பாவம் தான் அந்த காதல் காதலர்கள சேத்து வைப்பீங்கனு நெனெச்சேன் இப்படி கவுத்துடீங்க....சரி போனா போகுது பொண்ணோட காதலாவது கைகூடட்டும்
Easy (EZ) Editorial Calendar இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
kartiq roshan இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல்கள் அருமை தோழி எம் தளத்திற்க்கு தங்களை வரவேற்கிறேன்
அருணா செல்வம் இவ்வாறு கூறியுள்ளார்…
டைட்டிலே ரொம்ப நல்லா இருக்கு.

கதையும் அருமை.
வாழ்த்துக்கள்.
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
தலைப்பும் கதையும் அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

Its an oxymoron :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@vimal

அம்புட்டு நல்லவரா நீங்க :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Easy (EZ) Editorial Calendar

நன்றி. தப்பும் தவறுமாக இப்படி ஒரு விளம்பரத்தைப் போற இடத்துல எல்லாம் தெளிச்சிட்டுப் போகலைன்னா தான் என்ன?
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@kartiq roshan

நன்றி. நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@அருணா செல்வம்

மிக்க நன்றி :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சே. குமார்

கருத்துக்கு நன்றி.. ஆனால் நான் உங்களுக்கு அக்கா இல்லை. வேண்டுமானால் தங்கை என்று வைத்துக்கொள்ளலாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...