முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Exam Jokes




ஒரு சின்ன conversation.. யார் யாருக்குனு கேட்கக் கூடாது ;-)

அக்கா..”

என்ன சொல்லு

நேத்து டெஸ்ட்க்கு நான் படிக்காம பொயிட்டேன்

நாய் மனுஷன கடிச்சா நியூஸ் இல்ல. மனுஷன் நாயைக் கடிச்சா தான் நியூஸ்

என்ன சொல்லுத?”

நீ படிக்காம போனா ஆச்சர்யமில்ல. படிச்சிட்டுப் போனா தான் அது உலக அதிசயம்.. மேல சொல்லு

மொத்தம் 5 questions. 50 marks”

.. சரி.. உனக்கு எத்தனை தெரிஞ்சிச்சி?”

எனக்கு ஒன்னுமே தெரியல

பெறகு என்ன பண்ணுன?”

ஒவ்வொரு question க்கும் ரெண்டு ரெண்டு பக்கம் என்னத்தையோ answer எழுதி வெச்சேனா..”

.. அப்பம் பாஸ் ஆயிருவியா?”

இரு என்ன முழுசா சொல்லவுடு

சொல்லு

வீட்டுக்கு வந்து assignment எழுதனும்னு புஸ்தகத்தை எடுத்து answer பார்த்தா..”

பார்த்தா?”

அவ கேட்டிருந்த 5 கொஸ்டீனும் 2 மார்க் கொஸ்டீன்ஸ்! ஒவ்வொரு ஆன்ஸர்லயும் ரெண்டே ரெண்டு வரி தான் இருக்கு. அதுக்கு நான் ரெண்டு ரெண்டு பக்கம் எழுதி வெச்சிருக்கேன்.. கதையடிச்சிருக்கேன்னு கண்டு பிடிச்சிருவாளே!”

“ :D :D :D :D ”


இன்னொரு SMS:

Hosanna Song – After receiving Question Paper in an Exam Hall :-

அந்த நேரம் காலை நேரம்
கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சே..

Question Paper வந்தாச்சு
படிச்ச Question எல்லாமே
காற்றோடு போயே போச்சு..

Hosanna..
என் பெஞ்ச்சை தாண்டிப் போனாளே..
Hosanna..
Answer ஒன்றும் சொல்லாமலே..

நான் mental ஆகிறேன்
சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு எந்தன் bit- தேடிப் போகிறேன்..

H E L L O......!”

படம்: Degree-யை தாண்டி வருவாயா :-)

கருத்துகள்

கவியாழி இவ்வாறு கூறியுள்ளார்…
பிட்டுக்கு அவசியம் இல்லையா?
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
முதல் ஜோக் ஏற்கனவே கேட்டதுதான் சுபத்ரா! ஆனால் நீங்கள் எழுதிய நடையில் அது மீண்டும் ரசித்துச் சிரிக்க வைத்து விட்டது. டிகிரி தாண்டி வருவாயா..? சூப்பர்! இன்னும் ரசித்து சிரித்துக் கொண்டுதானிருக்கிறேன்!
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அது சரி...!!!!!!
கோவை நேரம் இவ்வாறு கூறியுள்ளார்…
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
Easy (EZ) Editorial Calendar இவ்வாறு கூறியுள்ளார்…
Hosanna மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Jayadev Das இவ்வாறு கூறியுள்ளார்…
Good stories.......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...