முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்கம் பிடிக்கவில்லை



வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்

 விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அதற்கொரு
வெட்கம் புதிதாய் 
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. 
*
*

கருத்துகள்

சுந்தரா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாருக்கு சுபத்ரா :)

ஆனா,அடக்கமுயன்று க்கு பதிலாக விலக்கமுயன்றுன்னு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்னு தோன்றுகிறது :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ VELU.G

நன்றி VELU.G :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சுந்தரா

நல்ல சஜ்ஜஷன் :-)

வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதியதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்..

:-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ நா.மணிவண்ணன்

என்னாச்சுங்க?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இதைத் தான் சொல்வாங்க.... ஒரு ஹல்வாவே ஹல்வா கொடுக்கிறதே... ஆச்சர்யகுறி.... ஹஹா... நல்ல கவிதை...வாழ்த்துகள்...
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
வெக்கத்துக்கு உங்களை பிடித்து விட்டது போல ...அதனால் தான் நீங்க விலக்கினாலும் போக மாட்டேன் என்கிறது போல :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பிற்கினிய சுபத்ரா..,

/ /....வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று.../ /

நல்ல கவிதை...

வெட்கம் உனக்கு
பிடிக்காதென்கிறாய்
அப்படியா?...
இப்போது பெண்களுக்கெல்லாம்
வெட்கம் பிடிப்பதாக
தெரியவில்லை - இல்லை இல்லை
வெட்கப்பட தெரியவில்லை...


நன்றி...,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ச.ரமேஷ்

அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-)
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
// அப்படியே பெண்கள் வெட்கப்பட்டாலும் ஆண்களுக்கு அதை Appreciate பண்ண தெரியவில்லை ;-) //

ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை என்று தனி காட்டு ராஜா நினைக்கிறார்..:)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தனி காட்டு ராஜா

நம்மள பேச விட மாட்டீங்களே..

//ஒரு வேளை Appreciate செய்தால் கூட இவன் வழிகிறான் என்று சொல்லுவீர்கள் என்பதால் ஆண்கள் குலம் Appreciate செய்வதில்லை//

நல்ல சமாளிஃபிக்கேஷன்.
அன்பரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர் கவிதைங்க.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ அன்பரசன்

டாங்ஸ்ங்க :)
R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
//வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்
விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அவமானத்தில்
அதற்கொரு
வெட்கம் புதிதாய்
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. //

******

விலக்க முயன்று தோற்று, தோற்று, அந்த அவமானத்தில்....

ஆஹா.... சூப்பர்... அதனால் ஒரு அவமானம் வந்ததாக வந்த அந்த கற்பனைக்கு ஒரு சல்யூட்...

எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்கப்பா?? சொல்லி தருவீங்களா? கேட்கும் ட்யூஷன் ஃபீஸ் தரப்படும்....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ R.Gopi

ஆகா... பேசாம அண்ணா யுனிவெர்சிட்டில ஒன் இயர் கோர்ஸ் இருந்தா ஜாயின் பண்ணுங்களேன்..?? :-)
"தாரிஸன் " இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படி இப்பெல்லாம் தோணுது......

நானும் கவிதை எழுதாலாம்னுந்தான் பாக்குறேன்...
கழுதை ஒன்னும் தோன மாட்டேங்குது....!!

செம.. செம... செம...!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தாரிஸன்
நன்றி தாரிஸன் :-)
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வெட்க கவிதை!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@எஸ்.கே

நன்றி அண்ணா..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...