முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)



கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை.


காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்தாது. சில சமயங்களில் டிவிக்கு மேலே எனது பேனா இருக்கும்.  ‘இது என்னதாச்சே!’ எனச் சந்தேகத்துடன் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே காயத்ரி வந்துவிடுவாள்.

“அத்தே.. தம்பிதான் பேனா எடுத்தான். நான் எடுக்கவேயில்ல”

“பொய் சொல்லாதடி.. அவனுக்கு பேக் எல்லாம் தொறக்கவே தெரியாது. நீ தான் எடுத்துக் கொடுத்திருப்ப”

‘கண்டுபிடித்துவிட்டாளே!’ என்னும் ரீதியில் திருதிருவென விழித்து ஒரு ரவுடிச் சிரிப்பு சிரிப்பாள். சிரிக்கையில் ஒருபக்கம் மட்டும் குழிவிழும் அந்த வலது கன்னத்தைப் பிடித்து நன்றாகக் கிள்ளிவிட்டுவிட்டுக் கோபமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வேன். அப்படியே எழுந்து எனது அறைக்குள் சென்று கணினியின் முன்பு அமர்ந்துவிட்டுப் பார்த்தால் காயத்ரி சத்தமின்றி எனக்கு முன்பாகவே வந்து பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டிருப்பாள். பின்னாலேயே அவனும் வந்து மேஜையின் இந்தப் பக்கமாக நின்று கொள்வான். ‘எப்படா கம்ப்யூட்டரை ஆன் செய்வாள்... சப்பி சீக்ஸ் (chubby cheeks) டான்ஸ் ஆடும் பொம்மையைக் காட்டுவாள்’ எனக் காத்துக் கொண்டிருந்தவள் போல ’அதை வைங்க இதை வைங்க’ என நொய் நொய்யென்று மொய்த்து விடுவாள். சரியென நானும் (வளர்ந்துவிட்டோம் என்னும்) “மெய்”மறந்து அந்தக் கார்ட்டூன் வீடியோவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்!

இப்படியே ஒருவாறு குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசிக்கத் தொடங்கியிருந்த வேளை அது. என்னைச் சோதிக்கவென்றே ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்து லேப்டாப்பைக் கட்டிலில் வைத்துக் கொண்டு இட்லிவடை ப்ளாக் படித்துக் கொண்டிருந்தேன். இடையில் அலைபேசியில் 'முக்கிய'மான அழைப்பு ஒன்று வரவே அறைக்குள் சரியாக சிக்னல் கிடக்காது என நினைத்து எல்லாவற்றையும் அப்படியே வைத்துவிட்டு அறைவிளக்கையும் அணைத்துவிட்டு இரண்டு குட்டீஸையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

சுவாரஸ்யமாகப் பேசி முடித்துவிட்டு அறைக்குள் வந்து பார்த்தால் லேப்டாப் மூடியிருந்தது. திறந்து பார்த்தவளுக்கு அப்படியே அலறவேண்டும் போல் இருந்தது! லேப்டாப்பின் எல்.சி.டி. ஸ்க்ரீன் கல்லெறிபட்டது போல் கருப்பாக உடைந்திருந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது!! கீபோர்டின் மேலே எனது அலைபேசியின் இயர்ஃபோன் இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு ‘ஐடில்’ மோடிற்குச் சென்றிருந்த லேப்டாப்பை ‘என்னடா படத்தைக் காணோம்’ என எண்ணி மூடிவைக்கிறேன் பேர்வழி என்று அப்படியே மூடியிருக்கிறாள். உள்ளே இயர்போன் இருந்ததால் அது சரியாக மூடாமல் போகவே வைத்து அமுக்கியிருக்கிறாள் இந்த அறிவுக் கொழுந்து காயத்ரி!

“அக்கா......!” என அமைதியாக அழைத்துவிட்டு அருகில் குறுகுறு பார்வையுடன் நின்றிருந்த காயத்ரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

(சேட்டை தொடரும்)

*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...