முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹாய் தோழி!

என்னடா இவளும் அழகுக் குறிப்புகள் எழுத ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறீங்களா? ஆமாங்க :-)
நிறைய பேர்இயற்கை அழகே அழகு; செயற்கையாக எதுக்கு நாம ஏதாவது செய்யனும்?’ என்றும்நானெல்லாம் பிறந்ததிலிருந்து லைஃப்பாய் சோப்பும் பான்ட்ஸ் பவுடரும் தவிர வேறு எதுவுமே என் முகத்திற்குப் போட்டது இல்லை; ஆனாலும் எனது தோல் இவ்வளவு தூய்மையாக இருக்கிறது’ (என் அம்மா தான்!) என்பது போன்ற வசனங்களும் பேசி நான் கேட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே எல்லாம் அமையப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் எல்லாமே பெர்ஃபெக்ட்டாக அமைந்திருப்பது சில பேருக்குத் தான். அப்படி அமையப் பெறாதவர்கள் சில சின்னச் சின்ன முயற்சிகள் பயிற்சிகள் செய்து நம்மை நாமே செம்மைபடுத்திக் கொள்வதில் தவறேயில்லை.
இந்தப் பகுதியில் கூந்தலைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கிறேன். முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தவறாமல் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்!
பொதுவாக அது இது என்று பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டு நமக்கு எதுவும் சரிபட்டு வரவில்லையே என்று வருத்தப்படும் தோழிகளை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் பல வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட ஒரே ஒரு வழிமுறையைக் கான்ஸ்டண்டாகத் தொடர்ந்து செய்துவர உங்களுக்கு அதற்கான பலன் கேரண்டீட்!
சிலருக்குக் காய்ச்சிய மூலிகை எண்ணெய் ஒத்துக் கொள்வதில்லை. அலெர்ஜியாகிப் பொடுகுத் தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட எண்ணெய்க் குளியலை எடுத்துக் கொண்டு, தினசரி உபயோகத்திற்குத் தூய்மையான தேங்காய் எண்ணேய் பயன்படுத்தினாலே போதுமானது!
  • எண்ணெய்க் குளியலுக்கு:
1. தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
2. நல்லெண்ணெய் (Gingelly Oil)
3. விளக்கெண்ணெய் (Castor Oil)
4. ஆலிவ் எண்ணெய் (Olive Oil)
5. பாதாம் எண்ணெய் (Almond Oil)
இவையனைத்தும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் (கூந்தல் அளவைப் பொறுத்து விகிதம் மாறாமல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்) எடுத்துக் கொண்டு, மிதமான வானலியில் லேசாகச் சூடுபடுத்திக் கைபொறுக்கும் சூட்டோடு தலையில் தடவ வேண்டும். மயிர்க்கால்களில் நன்றாகப் படுமாறு தேய்க்க வேண்டும். மேலும் அடியிலிருந்து நுனிமுடி வரை நன்றாக எண்ணெயில் ஊறும்படி அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் நம் கைகளால் ஸ்கால்ப்பில் வட்டவடிவில் (circular motions) மசாஜ் செய்துவிட்டு மேலும் ஒரு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.
சிலருக்குச் சீயக்காய் பிடிக்காது. சீயக்காய் தேய்த்துக் குளித்தால் கூந்தல் வறண்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது மைல்டான ஷாம்பூ (preferably Dove) எடுத்துக் கொண்டு அதில் நிறைய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொண்டு கூந்தலை அலசலாம். இப்படிச் செய்தால் கூந்தலுக்கும் நல்லது. Cost Effective – ஆகவும் இருக்கும். ஒரு சாஷேவே அதிகம் போலத் தோன்றும்!
மேலும் கவனிக்க வேண்டியது கூந்தலை அலசியவுடன் அப்ளை செய்யவேண்டிய கண்டிஷனர்! தலையில் ஷாம்பூ போட்டதால் ஏற்பட்ட பி.ஹெச். மாற்றத்தை இது சரிசெய்கிறது. கண்டிஷனர் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயம், அது முடியில் மட்டுமே படவேண்டும். மண்டையில் படக் கூடாது. பட்டால் பொடுகுத் தொல்லை ஏற்பட்டு முடி உதிர்தல் ஏற்படும். எனவே இதில் கவனமாக இருக்கவும்.
மேற்கண்ட இந்த எண்ணெய்க் குளியலுக்குப் பலன் நிச்சயம்!! வாரமொருமுறை தொடர்ந்து செய்து பயன்பெறுங்கள்.
இவை தவிரவும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய டிப்ஸ் உள்ளன.
2. முட்டையின் வெள்ளைக்கரு அல்லது கற்றாழை அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். இது நல்ல போஷாக்கு அளிக்கும்.
3. இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் அதை அரைத்துத் தலையில் அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். குளிர்ச்சியளிப்பதோடு பொடுகு தொல்லையும் குறையும்.
4. சீயக்காய் விரும்புபவர்கள் மருதாணி, கருவேப்பிலை, கரிசலாங்கன்னி, செம்பருத்தி, வேப்பயிலை, பூலாங்கிழங்கு, எலுமிச்சை/ஆரஞ்சுபழத் தோல்கள், ரோஜா இதழ்கள் மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை உலர்த்தி நிழலில் காயவைத்துப் பொடி செய்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
  மேலும் கவனிக்க வேண்டியவை:
  • ஈரத்தோடு கூந்தலில் சீப்பை உபயோகிக்க வேண்டாம்.
  • இரவில் படுக்கும் முன்பு சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து சீப்பால் நன்றாக வாரிவிட்டுக் கூந்தலைப் பின்னி ரிப்பன் வைத்து மடித்துக் கட்டிக் கொண்டு படுக்கலாம்.
  • மாதமொருமுறை ஒரு வளர்பிறை நாளில் கூந்தலை லேசாக ட்ரிம் செய்யலாம்.
  • தினமும் உணவில் புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கீரை, கருவேப்பிலை, பாதாம், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • மருத்துவரின் ஆலோசனையுடன் சிறிது காலம் அயர்ன் மாத்திரைகள்/டானிக் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு மிக நல்லது.
மேற்கண்ட டிப்ஸ் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பின்பற்றி வளமான தலைமுடியைப் பெறலாம். விடுபட்ட கருத்துகளைக் கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஃப்ரென்ட்ஸ்!!!
*

கருத்துகள்

sathishsangkavi.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்ல விஷயம்...

அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஷாம்பூ எவ்வளவு தான் மைல்ட் என்றாலும் சேதாரம் பண்ணாமல் விடாது. உடலில் அரித்தால் உப்புத் தாள் கொண்டு சொறிந்து கொள்கிறோமா ? இல்லையே !! முடிக்கு மட்டும் ஏன் இந்த அநீதி.

சீயக்காய் வறட்சியைத் தரும் என்றால், முட்டை வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தேய்த்து குளிக்கலாம். இயற்கை தந்த ஷாம்பூ அது.எந்த செயற்கை ஷாம்பூவும் இது போல் நுரைக்காது, கேசத்தை அல்ட்ரா ஸ்பாட் ஆக மாற்றாது.

மஞ்சள் கரு மிக்ஸ் ஆகாத வரை , நாறாது.அதுக்கு நான் காரண்டி.

சந்திரமெளலீஸ்வரன்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சங்கவி

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

நானும் முட்டையின் வெள்ளையைத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். இங்கு கூறியுள்ளவாறு எண்ணெய் தேய்த்து ஊறவைத்திருக்கும் போது முட்டையின் வெள்ளையை மட்டும் தேய்த்துக் குளித்தால் பயனளிக்குமா, குளித்த திருப்தி இருக்குமா என்பது தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல உபயோகமான குறிப்புகள். நன்றி.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@கீதா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்ல மேடம் பிரியாக இருக்கனால அடுத்து சமையல் குறிப்பும் போடுவாங்க.
அருமையான தகவல்கள் சுபத்ரா. கலக்குறே. நானும் தான் ஹமாம் சோப்பும் பாண்ட்ஸ் பவுடரும் தான். வேறெதும் போடறதில்ல.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பொன்மலர்

நீங்கெல்லாம் இயற்கையிலேயே பியூட்டீஸ் ம்மா :) இருந்தாலும் இந்த எண்ணெய்க்குளியலை ட்ரை பண்ணிப்பார்த்துட்டுச் சொல்லேன்.
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழனின் பாரம்பரியம் இந்த ஆயில் குளியல்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...