முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்றும்


என்றைக்கும் அல்லாத
ஞாயிறு ஒன்றில்
வந்து விழுந்ததொரு
‘மிஸ்ட் கால்’.

மிஸ்ட்கால் செய்தவர்
முகம் அறியாதவராயினும்
‘மிஸ்’ பண்ண விரும்பாத
மாடர்ன் மங்கை..

மெசேஜிற்குத் தாவி
அழைத்து உரையாடி
இணையம் வழியே
இதயங்களை இணைத்து

கவிதைகள் இயக்கி
கருத்துகள் பேசிக்
கவலைகள் பகிர்ந்து
கனவுகளில் பறந்து

மற்றும் ஒரு
ஞாயிறு ஒன்றில்
சந்திப்பும் நடந்தேறி
அண்ணலும் நோக்கி
அவளும் நோக்க

செம்புலப் பெயல்நீர்
கலந்தது போல
அன்புடை நெஞ்சம்
இரண்டும் கலந்தன..

காதல் பிறந்தது!

நாட்கள் ஓடின..

சுபயோக சுபதினம்
ஒன்றில்..
இருவருக்கும் திருமணம்
தனித்தனியாக!

எக்காலம் ஆயினும்
காதலுக்குக்
கண் தானில்லை
சாதி இருக்கிறது..
சாதியைக் கட்டிக்கொண்டு
புரளும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்!

மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!

கருத்துகள்

Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
இன்றைய சூழலை சரியாகச் சொன்ன
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
settaikkaran இவ்வாறு கூறியுள்ளார்…
//சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//

அடடா, எதுக்கு சிம்-மை சிதைச்சாங்க? :-)
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
good.
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
How are you? Its been a long time.
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
//மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//


சாட்டையடிக் கவிதை. வாழ்த்துக்கள்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சேட்டைக்காரன் கேள்விக்கு என்ன பதில்
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
நவநாகரிகமாயினும், சாதியைக் கட்டிக்கொண்டு அழும்வரை காதலாவது, ஒண்ணாவது? நல்லா எழுதியிருக்கீங்க.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
// Ramani said...
இன்றைய சூழலை சரியாகச் சொன்ன
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
//

repeatu
Erode Nagaraj... இவ்வாறு கூறியுள்ளார்…
மறந்து போன
மின்னஞ்சல்களின்
கடவுச் சொற்களே அறியும் அந்த
சிறு ஜன்னல்களில்
பகிரப்பட்ட
பகிரங்கப்படாத
கொடுக்கல்களையும்
வாங்கல்களையும்
ஆடைகளையும்
நிர்வாண மனங்களையும்.

(எத்தனை களையும்!)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Ramani

/*இன்றைய சூழலை சரியாகச் சொன்ன
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்*/

மிக்க நன்றி !!!!!!!!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
/*சேட்டைக்காரன் said...

//சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//

அடடா, எதுக்கு சிம்-மை சிதைச்சாங்க? :-)*/

அடியோடு மறக்கனும்ங்கிற லாஜிக் போல :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
/*Chitra said...

good.

How are you? Its been a long time.*/

நான் நலம் சித்ராக்கா. தாங்கள், குட்டீஸ் நலமா? வருகைக்கு நன்றி..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
/*'பரிவை' சே.குமார் said...

//மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//


சாட்டையடிக் கவிதை. வாழ்த்துக்கள்.*/

மிக்க நன்றி ‘பரிவை’ சே.குமார் :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
:)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சிவா
என்ன சிரிப்பு இது?
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ராதா
அனுபவம் எனதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லையே........
இராஜராஜேஸ்வரி இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதைக்குப் பாராட்டுக்கள்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...