முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமி - சில தகவல்கள்

நாம வாழுற இந்தப் பூமியைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் நிறைய விஷயங்கள் படிக்கும் போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது.. அதை உங்களுக்கும் சொல்லலாமேனு இந்தப் பதிவு :)

*       பால்வீதியில் (the Milky Way Galaxy) நம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் ஏறத்தாழ 100,000 மில்லியன் இருக்கின்றன.

*       நம் சூரியக் குடும்பத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி நம்மை வந்தடையும் நேரம் – 4 வருடங்கள்.

*       சூரியனில் இருந்து பூமிக்கு அதன் ஒளி வந்தடையும் நேரம் – 8 நிமிடங்கள்.

*       நிலவில் இருந்து அதன் ஒளி நம் பூமிக்கு வந்தடையும் நேரம் எவ்வளவு தெரியுமா? ஒரே ஒரு வினாடி.

*       சூரியனின் வெளிப்புற வெப்பநிலை - 6000° C. அதன் உட்புறத்தின் வெப்பநிலை – 20 மில்லியன்° C.

*       சூரியன் பூமியை விட 300,000 மடங்கு பெரியது.

*       பூமியிலிருந்து 2,38,900 மைல்கள் தொலைவில் இருக்கும் நிலா, பூமியை முழுதாக ஒரு சுற்று சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் – 27 நாட்கள்.

*       யுரேனஸ் கிரகத்தைத் தவிர பூமி உட்பட மற்ற 8 கிரகங்களும் சூரியனை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன.

*       பூமிக்கு மத்தியில் இருக்கும் பூமத்திய ரேகையில் அளந்தால் அதன் சுற்றளவு ஏறத்தாழ 45,000 மைல்கள். துருவங்களில் சுற்றழவு 83 மைல்கள். (துருவங்கள் sharp ஆக முடிவதில்லை. ஆரஞ்சு பழத்தைப் போலத் தட்டையாக முடிகின்றன)

*       அதே போல் பூமத்திய ரேகையில் சூரியனின் விட்டம் (diameter) ஏறத்தாழ 8,000 மைல்கள். துருவங்களில் 26 மைல்கள்.

*       உலகைச் சுற்றி வந்த முதல் கடல் பயணத்தை மேற்கொண்டவர் Ferdinand Magellan (1519 முதல் 1522 வரை, தம் குழுவுடன்).

*       சூரியனைச் சுற்றி பூமி சுழலும் வேகம் என்ன தெரியுமா? வினாடிக்கு 18.5 மைல்கள்.

*       ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு டிசம்பர் 22 ஆம் தேதியும் முழு நாளும் இரவாக இருக்கும். சூரியன் தெரியாது.

*       அதே ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு வருடம் ஜூன் 21 ஆம் தேதியிலும் முழு நாளும் பகலாக இருக்கும். சூரியன் மறையாது (north of Arctic - Land of the Midnight Sun).

*  பூமிக்குக் குறுக்காக வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (latitudes) 1° இடைவேளைகளைக் கொண்டிருக்கின்றன.

*       பூமிக்கு நீள்வாக்கில் வரையப் பட்டிருக்கும் ரேகைகள் (longitudes) அனைத்தும் ஒரே நீளத்தில் இருப்பதால் லண்டனுக்கு அருகே இருக்கும் கிரீன்விச் நகரத்தில் Royal Astronomical Observatory-யை வெட்டிச் செல்லும் ரேகையை முதல் மெரீடியனாகக் கணக்கிடுகிறோம் (0° Prime Meridian).

*       கிழக்கு நோக்கி (பின்னர் மேற்கு நோக்கி) எண்ணிக் கொண்டே போனால் கடைசியாக 180° Meridian, Bering Strait, Fiji, Tonga வில் வரும். அதைத் தான் International Date Line ஆகக் கொள்கிறோம். அதற்கு அடுத்து முதல் ரேகையான 0° Prime Meridian வந்துவிடும்.

*       இதில் விசேஷம் என்னவென்றால் கிரீன்விச்சை மையமாகக் கொண்டு நேரத்தைக் கணக்கிடும் (Greenwich Mean Time, ie. GMT)  நாம் 180° Meridian-இக்கு முன்னால் இருக்கும் ஒரு ஊரிலிருந்து 180° Meridian-இக்கு அப்புறம் (அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி) இருக்கும் ஒரு ஊரைக் கடந்து போனால் நம் கடிகாரத்தை மிகச்சரியாக 24 மணி நேரங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரே நாளைத் திரும்ப கழிக்க வேண்டும் :)

*       அதே நேரம் கிழக்கிலிருந்து மேற்காக 180° மெரீடியனைக் கடந்து போனால் என்ன ஆகும் தெரியுமா? நீங்கள் கிளம்பியதில் இருந்து இடையில் ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு நாளை வாழாமலே கழிக்க வேண்டியிருக்கும்!

*       இந்திய அரசு 82.5° கிழக்கை தனது நிலையான மெரீடியனாகத் தேர்ந்தெடுத்துள்ளது (GMT + 5.30 hrs).

*       இந்தியாவிற்கு ஒரே ஒரு Time Zone தான். ஆனால் பரப்பளவில் பெரியதாக இருக்கும் USSR-இல் உள்ள நாடுகள் மட்டுமே மொத்தம் 11 Time Zones-ஐப் பின்பற்றுகின்றன. USA-விலும் கனடாவிலும் தலா 5 Time Zones இருக்கின்றன!

தகவல்கள் எப்படி? மீண்டும் சந்திப்போம்..

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி....
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
தகவல்கள் எப்படி...?யா? சூப்பருங்கோ!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர் மேடம்!!!
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...