முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை மாலை



கயிறறுத்து ஓடிய
கன்றுகுட்டியின் கண்ணீரில்
நனைந்தது மழை.

மழைச்சுமை தாளாமல்
பழைய
இலைக்கம்மல் வடிவில்
உதிர்ந்து கிடந்தது
மரத்தின் இலை.

அரித்த தெருமணலில்
வரிகளாய் ஓடியிருந்தன
அயிரை மீன்கள்.

மீன் முள்க்கூடாக
வெந்து கொண்டிருந்தது
சதையற்ற ட்ரான்ஸ்பார்மர்.

மழை புள்ளிக்கோலமிட்ட
நீர்த் தொட்டியில்
நிரம்பி வழிந்தது பாசம்.

இம்மழைக் காட்சிகளை
மிடறுகளாய்
விழுங்கியிருந்தது
காலிக் காப்பிக் கோப்பை.

கருத்துகள்

பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மீன்முள் கூடாக வெந்து கொண்டிருந்த சதையற்ற டிரான்ஸ்பார்மர்! க்ளாஸிக்! உங்களின் அழகான கவிதையை மிகமிக ரசித்தேன் சுபத்ரா. (அஃப்கோர்ஸ், நமக்கு கவிதை எழுத வரலையேங்கற பெருமூச்சோடவும்)
pichaikaaran இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பாக எழுதியுள்ளீர்கள் . மழைதான் அனைத்தையும் நனைக்கும் . கண்ணீரில் நனைந்தது மழை என்பதை வெகு நேரம் ரசித்தேன் . கடைசி வரியும் வெகுவாக ரசித்தேன் . மழை எனும் இனிய அனுபவத்தை இப்படி சொற்களில் வெளிப்படுத்த உங்களை போன்ற கவிஞர்களால் மட்டுமே முடியும் . ஹேட்ஸ் ஆஃப். இதற்கு முன்னும் நல்ல கவிதைகள் எழுதியுள்ளீர்கள் . ஆனால் ஒரே கவிதையை மீண்டும் மீண்டும் எழுவதாக தோன்றும் . எனவே பின்னூட்டம் இட்டதில்லை . this one diffent .
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை... ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதைச்சாரல் அழகு ...!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை நல்ல புதுக்கவிதைக்கு உரிய நயத்துடன் கருத்து வளத்தையும் இயற்கையின் வளங்களும் சேர்ந்துள்ளதால் மேலும் மெருகு ஊட்டுகிறது. சிந்திக்க வைக்கின்ற சிந்தனைச் சிற்பி என்றே பாராட்டலாம்

ஆ.மாரிமுத்து
மதுரை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...