முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொர்க்கமே என்றாலும்

வலைப்பூ பக்கம் வந்தே பல நாட்கள் ஆகின்றன . அவ்வப்போது எழுதுவதற்கு அருமையான விஷயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் எழுதவேண்டும் என்று அமரும்போது மனது tabula rasa ஆகிவிடுகிறது :-)   ஊருக்கு வந்து இரண்டு வாரம் ஆச்சு . வந்ததுல இருந்து பயங்கர சந்தோஷம் ! பல பழைய நண்பர்களையும் , சில புது நண்பர்களையும் , சில பழைய முகங்களைப் புதிதாகவும் பார்த்த மகிழ்ச்சி ! நண்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது போய்க் கொண்டே இருக்கும் . ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகம் ... இல்ல இல்ல ஒரு நூலகம் மாதிரி . வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வதற்கு ஏராளாமான செய்திகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றனர் . என்னோட நெருங்கிய நண்பன் ஒருவன் , “books and friends should be few and good” என்று சொல்லிக் கொண்டேயிருப்பான் . ஆனால் கடந்து வரும் இடங்களும் சூழ்நிலைகளும் பலவிதமான நல்ல நண்பர்களை அள்ளித்தருகின்றன ! தவிர்க்க முடியவில்லை . நம்மை மதித்து வந்து சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களிடம் செயற்கையாகச் சிரித்து வைக்கவோ , முகத்தைத் திருப்பிக்கொண்டு போகவோ ...

ஊருக்கு வெளியே

ஒரு மந்தமான மதிய வேளை . உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர் . அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது . ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது . அடுத்தவருடம் நான்காம் வகுப்பு ! உமா டீச்சரின் வகுப்புக்குப் போக வேண்டும் .