2014ம் கடந்து விட்டது. 2013 முடிந்த போது தொடங்கவிருந்த புதிய ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் சில இருந்தன. வழக்கம் போல Expectations = Disappointments. அதனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி 2015ஐ எதிர்கொள்ளலாம் என்றிருக்கிறேன். இது இப்போதைய தற்காலிக மனநிலையா, மனமுதிர்ச்சியா இல்லை மனப்பிறழ்வா(?) தெரியவில்லை. பொதுவாக நடந்து முடிந்தவையைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்னும் எண்ணமே மேலோங்கியிருக்கும். இருந்தாலும் வருட முடிவில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று மகிழ்ந்த தருணங்களும் மிகக் குறைவே. Don’t know
what HE has in reserve for me..