ஏப்ரல் 20
Apr 20, 2015
காவியம்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு
ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
ரஸவாதம்
இதயத்தில்
உன் மறுப்பின்
வேல்
புதைந்து
வாய்
பிளந்து
பசி
என்ற குரல் எடுத்தது
வடு
குரல்
மேட்டு
தாய்
மன நிலவு
முலை
சுரந்தாள்
சொரிந்ததுவோ
துக்கத்தின்
விஷ
நீலம்
ஆனால்
பருகிய
வடுவின்
இதய
வயிற்றுள்
துக்கம்
செரித்துப்
பிறந்தது
வேதனை
அமிர்தம்.
சைத்ரீகன்
வெண்சுவர்த்
திரையிலென்
தூரிகை
புரண்டது.
சுவரே
மறைந்தது.
மீந்தது
காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும்
ஒளிக்கு
இருள்
ஒரு திரையா?
பாழாம்
வெளியும்
படைப்பினை
வரையவோர்
சுவரா?
வண்ணத்துப் பூச்சியும் கடலும்
சமுத்திரக்
கரையின்
பூந்தோட்ட
மலர்களிலே
தேன்குடிக்க
அலைந்தது...
Labels:
d
Posted by
சுபத்ரா
at
7:55 PM
1 comments
Subscribe to:
Posts (Atom)