காவியம் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது . ரஸவாதம் இதயத்தில் உன் மறுப்பின் வேல் புதைந்து வாய் பிளந்து பசி என்ற குரல் எடுத்தது வடு குரல் மேட்டு தாய் மன நிலவு முலை சுரந்தாள் சொரிந்ததுவோ துக்கத்தின் விஷ நீலம் ஆனால் பருகிய வடுவின் இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறந்தது வேதனை அமிர்தம். சைத்ரீகன் வெண்சுவர்த் திரையிலென் தூரிகை புரண்டது. சுவரே மறைந்தது. மீந்தது காட்சி. ஓஹோ , உயிர்த்தெழும் ஒளிக்கு இருள் ஒரு திரையா ? பாழாம் வெளியும் படைப்பினை வரையவோர் சுவரா ? வண்ணத்துப் பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்ட மலர்க ளி லே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து நாள i ரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்ந்தது முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது. ஒளிக்கு ஒரு இரவு கா...
Hi from a Hikikomori 🐌