என் ப்ரிய தோழி ’ சித்ரா ’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-) இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-) ம யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்! மா ங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்! மி தந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்! மீ ட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்! மு க்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்! மூ தாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்! மெ ன்மை என்பதை மலர்களிற் கண்டேன்! மே கநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்! மை நிற விழிகளில் மானினம் கண்டேன்! மொ ட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்! மோ கனம் என்பதை நற்காதலிற் கண்டேன்! மௌ னமாய் என்மனம் கவியாகக் கண்டேன்! நன்றி சுஜா ஆன்டி! * *
Hi from a Hikikomori 🐌