முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மௌனக் கவி!!

என் ப்ரிய தோழி ’ சித்ரா ’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-) இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-) ம யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்! மா ங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்! மி தந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்! மீ ட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்! மு க்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்! மூ தாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்! மெ ன்மை என்பதை மலர்களிற் கண்டேன்! மே கநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்! மை நிற விழிகளில் மானினம் கண்டேன்! மொ ட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்! மோ கனம் என்பதை நற்காதலிற் கண்டேன்! மௌ னமாய் என்மனம் கவியாகக் கண்டேன்! நன்றி சுஜா ஆன்டி! * * 

டேபிள் ரோஸ்

டிஸ்கி: பிசியா இருக்குறவங்க, மொக்கைப் பதிவு படிக்காதவங்க....சாரி பிடிக்காதவங்க யாரும் இதப் படிக்கவும் வேண்டாம். படிச்சதுக்கு அப்புறம் என்னைத் திட்டவும் வேண்டாம். அப்படியே போயிருங்க :-) Others may go ahead :-) இதுவும் டார்ட்டாய்ஸ் தான். பொதுவாவே ‘பூ’ன்னாலே பெண்களுக்குப் ரொம்பப் பிடிக்கும். அதுவும் சின்ன பெண்களுக்கு? கேட்கவே வேண்டாம். பாய்கட் பண்ணியிருந்தாலோ பாப்கட் பண்ணியிருந்தாலோ கூட வச்சுவிட சொல்லி அடம்பிடிக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன் :-) இப்பவும் அப்படித்தான் இருக்கேன் :-)  மல்லிகை, பிச்சி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ, செவ்வந்தி(மஞ்சள், வெள்ளை) தலையில் வைத்துக்கொள்ளப்படும் பொதுவான பூக்கள் இவை. மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் மூன்றும் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை(அந்த வயதில்). சனிக்கிழமை கலர்டிரஸ்-னாலே அம்மா வச்சு விடுவாங்க. என் தோழிகள் எல்லாருமே அப்படித்தான். சில பேர் கலர் கலரா டிரஸ்-கு மேட்சிங்கா டிசம்பர் பூ வச்சிட்டு வருவாங்க. அப்போ எங்க வீட்டுல ரோஜாச்செடி கிடையாது. ஆனா என் தோழிகள் வச்சிட்டு வர்ற ரோஜாப் பூக்களைப் பார்த்து ரொம்ப ஆசையா இரு...

இட்லிவடை

என் அபிமான வலைதளமான “இட்லிவடை” யில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-) படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். http://idlyvadai.blogspot.com/2010/11/blog-post_06.html அன்புடன் சுபத்ரா :-) * *

வாழ்த்துகள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் . HAPPY DIWALI அன்புடன் சுபத்ரா :-) * *