படிக்கும் வயதில் யாரேனும் பாடம் எடுத்திருக்கிறீர்களா ? எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களில் சொல்லியே தீரவேண்டியவை - லேபிளில் இதுவும் ஒன்று! கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் மிகவும் ஆசைபட்டு மாலை வகுப்புகள் எடுக்கப் போவதாகப் பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்திருந்தேன் . முதல் நாளே நான்கு மாணவர்கள் .. ஒரு மாதத்தில் ஏறத்தாழ வீட்டுக்கு அருகிலிருந்த எல்லாக் குட்டீஸ்களும் என் வீட்டில் ஆஜர் எனலாம் . கிட்டதட்ட பதினாறு பேர் .. 1. கல்யாணி – 1ம் வகுப்பு 2. ப்ரியா – 2ம் வகுப்பு 3. ராஜேஷ் – 1ம் வகுப்பு 4. செல்வா – யு.கே.ஜி. 5. பிரகாஷ் – 6ம் வகுப்பு 6. முத்துமாரி – 3ம் வகுப்பு எனப்போய்க் கொண்டேயிருக்கும். “என்னடா இது! ஏதோ ட்யூஷன் எடுக்கலாம். சின்ன க்ளாஸ் பாடங்கள் எல்லாம் திரும்பவும் படிச்சமாரி இருக்கும்னு பார்த்து நாம ஒன்னு யோசிச்சா இப்படி நண்டுகளையும் வண்டுகளையும் வெச்சு என்ன பண்ண..” என்று தோன்றியது. “சர...
Hi from a Hikikomori 🐌