There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

வேற கலர் இருக்கா?

Aug 16, 2011

வணக்கம்!       இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு...
Read More...

என்றும்

Aug 9, 2011

என்றைக்கும் அல்லாத ஞாயிறு ஒன்றில் வந்து விழுந்ததொரு ‘மிஸ்ட் கால்’. மிஸ்ட்கால் செய்தவர் முகம் அறியாதவராயினும் ‘மிஸ்’ பண்ண விரும்பாத மாடர்ன் மங்கை.. மெசேஜிற்குத் தாவி அழைத்து உரையாடி இணையம் வழியே இதயங்களை இணைத்து கவிதைகள் இயக்கி கருத்துகள் பேசிக் கவலைகள் பகிர்ந்து கனவுகளில் பறந்து மற்றும் ஒரு ஞாயிறு ஒன்றில் சந்திப்பும் நடந்தேறி அண்ணலும் நோக்கி அவளும் நோக்க செம்புலப் பெயல்நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்தன.. காதல் பிறந்தது! நாட்கள் ஓடின.. சுபயோக சுபதினம் ஒன்றில்.. இருவருக்கும் திருமணம் தனித்தனியாக! எக்காலம் ஆயினும் காதலுக்குக் கண் தானில்லை சாதி இருக்கிறது.. சாதியைக் கட்டிக்கொண்டு புரளும்...
Read More...

என்னமோ ஏதோ..

Aug 1, 2011

      அலுவலகத்தில் ஆணி.. சாரி.. (எல்லாரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே வருது) வேலை அதிகமாக இருப்பதால் ப்ளாக்ஸ்பாட் பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை! அதிக வேலை செய்ய வேண்டியிருக்கையில் “சரி பரவால்ல. இதெல்லாம் முடிச்சிட்டு இன்னைக்குப் போய் ஜாலியா ஒரு ப்ளாக் போஸ்ட் போட்றலாம்”னு சமாதானம் சொல்லிக்கிட்டே எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிடுறேன் :-) ப்ளாக் வச்சிருந்தா இது ஒரு அட்வான்டேஜ் போல!        சாயந்தரம் 5.00 மணிக்கு மேலே வாடிக்கையாளர்களின் வருகை ஓரளவிற்குக் குறைந்த பின்னர் அலைபேசியில் இயர்போனைச் சொருகி நான் பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டே கணினியில் வேலையைச் செய்துகொண்டு இருப்பேன்.        ...
Read More...