அவள் அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் அவள் எப்பவுமே செகண்ட். இன்னொரு பையன் எப்பவுமே ஃபர்ஸ்ட். இருவரும் அருகருகே தான் உட்கார்ந்திருப்பார்கள். அடிக்கடி சேர்ந்து படிப்பார்கள். ஒரு நாள் கணக்கு நோட்டை ஆசிரியரிடம் காண்பித்து ‘டிக்’ வாங்கிவிட்டு இருக்கைக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. தன்னுடைய புத்தம்புது ஜாமெட்ரி பாக்ஸில் யாரோ கிறுக்கியிருந்தார்கள். அவளுக்குப் புரிந்துவிட்டது..