முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குஜராத்திலிருந்து

 இப்பொழுது தான் 12-01-2011 அன்று அபியின் 18-வது பிறந்தநாளுக்கு வாழ்த்தியது போல் இருக்கிறது. அதற்குள்ளே அவனுக்கு 19-வது பிறந்தநாளும் முடிந்துவிட்டது. பொங்கலும் வந்துவிட்டது! இந்த வருடம் பொங்கலுக்கு நான் ஊருக்குப் போகாதது வருத்தம் தான். யோசித்து பார்த்தால் நான் ஊரை மிஸ் பண்ணுவதை விட வீட்டில் அம்மாவும் அபியும் மிகவும் மிஸ் பண்ணுவார்கள் என நினைக்கிறேன். அப்படி என்ன தீபாவளிக்கு இல்லாதது பொங்கலுக்கு என்று கேட்கிறீர்களா? அது.. வருடத்துக்கு ஒரு முறை, பொங்கலுக்கு முதல்நாள் இராத்திரி தான் நான் கோலம் போடுவேன். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவதற்கு ஏதுவாக ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், ஸ்கார்ஃப் எடுத்துத் தலையில் கட்டிவிட்டு கோலப்பொடிகளைத் தயார்நிலையில் வைத்து, அபியிடம் சொல்லி FM ரேடியோவை வாசலுக்கு அருகே மிகவும் சத்தமாக ஆன் செய்து வைத்துவிட்டுக் கோலம் போடுவதற்கு அமர்ந்தால் மணி 11 ஆகியிருக்கும். அதற்கு முன்னரே நான் என் கோலம் நோட்டை எடுத்து என்ன கோலம் போடவேண்டும் என முடிவு செய்து ஓரிரு முறை காகிதத்தில் வரைந்தும் பார்த்துப் பழகியிருப்பேன். அப்படியே 11 மணி...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-3)

     படிக்கும் வயதில் யாரேனும் பாடம் எடுத்திருக்கிறீர்களா ? எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களில் சொல்லியே தீரவேண்டியவை - லேபிளில் இதுவும் ஒன்று! கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் மிகவும் ஆசைபட்டு மாலை வகுப்புகள் எடுக்கப் போவதாகப் பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்திருந்தேன் . முதல் நாளே நான்கு மாணவர்கள் .. ஒரு மாதத்தில் ஏறத்தாழ வீட்டுக்கு அருகிலிருந்த எல்லாக் குட்டீஸ்களும் என் வீட்டில் ஆஜர் எனலாம் . கிட்டதட்ட பதினாறு பேர் .. 1.     கல்யாணி – 1ம் வகுப்பு 2.     ப்ரியா – 2ம் வகுப்பு 3.     ராஜேஷ் – 1ம் வகுப்பு 4.     செல்வா – யு.கே.ஜி. 5.     பிரகாஷ் – 6ம் வகுப்பு 6.     முத்துமாரி – 3ம் வகுப்பு எனப்போய்க் கொண்டேயிருக்கும். “என்னடா இது! ஏதோ ட்யூஷன் எடுக்கலாம். சின்ன க்ளாஸ் பாடங்கள் எல்லாம் திரும்பவும் படிச்சமாரி இருக்கும்னு பார்த்து நாம ஒன்னு யோசிச்சா இப்படி நண்டுகளையும் வண்டுகளையும் வெச்சு என்ன பண்ண..” என்று தோன்றியது. “சர...

களவாடிய காலம்

முகத்தைச் சுழித்து அருகே அப்பாவின் அதட்டலுக்குப் பயந்தவாறே வாய் நிறைய நீரை நிரப்பி கண்களைச் சிக்கென மூடியபடி தலையை உயர்த்தி தொண்டைக்குள் சரியாகப் போட்டு விழுங்கியது போய்.. இயல்பாக வாயில் வைத்து தண்ணீர் விட்டு மாத்திரையை விழுங்கிவிடும் த ருணங்களில் உணர்கிறேன் நான் வளர்ந்து விட்டதை..

செங்க சூள காரா..

ஆகஸ்ட் மாசம் Friend ’ s Day வந்தாலும் வந்தது .. Airtel- ல எனக்கொரு Hello Tunes வசதி Rs.198/- க்கு கிடைச்சது ! அதன்படி , 1.     ஒரு வருடத்துக்கு Hello Tunes வாடகை – இலவசம் ! 2.     ஒரு வருடத்துக்கு Unlimited Song Change -  இலவசம் !! :-) கேட்கவா வேணும் .. ஏற்கனவே மாசம் ஒருமுறை பாட்டை மாத்திகிட்டே இருந்த எனக்கு இந்த ஸ்கீம் வந்தாலும் வந்தது .. தினம் தினம் புதுப் புது பாட்டு தான் !! இதுல என்னவிட சந்தோஷப் பட்டது என் தம்பி அபி தான் .. ஏன்னா ஃபோன் பண்ணிக் கேட்குறது அவன் தான ? அடிக்கடி எனக்குக் கால் பண்ணி , “எக்கா Airtel Super Singer- ல இந்தப் பாட்டு கேட்டேன் .. சூப்பரா இருந்தது” “புதுசா இந்தப் பாட்டு வந்திருக்கே .. கேட்டியா ? ” “ஒடனே ______ ங்கிற நம்பருக்கு மெசேஜ் அனுப்பி அதுல 2- ம் நம்பர் வர்ற பாட்டவைய்யி .. நான் கேட்கனும்” “எக்கா , இந்தப் பாட்டு என்ன படம் தெரியுமா .. ” இப்படில்லாம் பல கேள்விகள் .. எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணி அவன் நினைக்கிற பாட்டையெல்லாம் activat...