முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

6174 - நாவல்

            க . சுதாகர் என்பவரால் எழுதப்பட்டு வம்சி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் ‘6174’ நாவலைப் படிக்க நேர்ந்தது . தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் லெமூரியா என்ற வார்த்தையைத் தவிர அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வேறு மூலங்களே இல்லாத நிலையிலும் குவாண்டம் பிசிக்ஸின் தத்துவங்களுக்கு வாயைப்பிளக்கும் ஒரு கணிதப் பட்டதாரியான எனக்கு லெமூரியா + கணிதம் + இயற்பியல் + பண்பாட்டய்வு எனக் கலந்துகட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை . போதாததற்கு தம்பியின் கல்லூரி இறுதியாண்டு project வேறு Fibre Optic Crystals பற்றியது . கேட்கவா வேண்டும் ?

பூனை

நான் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம் நாங்கள் வசித்தது ஒரு கிராமம் . அப்போது எனக்கு ஆறுமுகவடிவு என்று ஒரு தோழி இருந்தாள் . ஊரில் ஐந்தாறு ஆறுமுகவடிவுகள் இருந்ததாலும் அவளுக்கு ப்ரவுன் நிறக் கண்கள் இருந்த காரணத்தாலும் ஊருக்குள் எல்லோரும் அவளைப் பூனை என்றே அழைத்தனர் . என்னைவிட ஓரிரு வருடங்கள் மூத்தவள் .

பழக்கங்கள்

ஒரு கோப்பை நிறைய உரிமைகளை ஊற்றிப் பருகத் தந்தீர்கள் எனக்குப் பழக்கமில்லை என்றேன் காபி குடித்தால் நாளை வரப்போகும் தலைவலி தீரும் என்றீர்கள் கட்டாயப்படுத்தினீர்கள் ருசித்துப் பார்த்தபோது கசப்பாக இருந்தது கொஞ்சம் இனிப்பாகவும். இனிக்கிறதா? எனக் கேட்டீர்கள் ஆமோதித்தவாறே இல்லாத தலைவலியை நான் விரட்டத் தொடங்கியிருந்தேன்

முகமூடி

  சில பல காரணங்களால் ப்ளாக் பக்கமே எட்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை . Now I am back :) வெட்டி ப்ளாக்கர்ஸ் போட்டிக்காக நான் அனுப்பிய சிறுகதை . ( இரண்டாவது சுற்றுக்குக் கூடப் போகவில்லை ) :) படித்துவிட்டுப் பின்னூட்டமிடுங்களேன் ? நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன் . அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச் சற்று இறக்கிவைக்கப் போகிறேன் . உங்களுக்குப் புரியப்போவதில்லை என்று இப்போது நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம் . புரிந்துகொண்டால் மட்டும் எனக்காக நீங்கள் என்ன கிழித்துவிட முடியும் என்ற மனச்சலிப்பே நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் . நீங்கள் சற்றே எரிச்சலுற்றாலும் தொடர்ந்து படிக்கிறீர்களென்பதே எனக்கு ஆறுதலாக இருக்கிறது . இதற்குமேல் உங்களது கவனம் நீங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகளிலேயே மையம் கொண்டிராமல் அவற்றின் சாரத்தில் இருக்கட்டும் . ஏனென்றால் , முள்கிரீடம் அணிந்து பாவிகளுக்காகச் சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவைப் போல இவ்வார்த்தைக...