முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Wishes :)



நூறாவது பதிவைக் காணும் என் அன்புத் தோழி “பொன்மலர்”க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்....!! கணினி மென்பொருள்கள், தொழில்நுட்பம் பற்றிப் பல தரமான பதிவுகளை வாசகர்களுக்குத் தரும் அவளுடைய முயற்சிக்கு என் வணக்கங்கள்!! வாழ்த்துகள்!!!



கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
தன் வினை தன்னையே சுட்டு விட்டது போலும்..
நன்றாக இருக்கிறது கவிதை..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//இக்கவிதையை ”பாரதி விரும்பி” படிக்க வேண்டாம்!//


பாரத் பாரதி படிக்கலாம் அல்லவா?
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தான்
ஆம்
அறிவுரைகள் தந்தேன்
ஆகட்டும் என்றான்//

very good இப்படித்தான் இருக்கணும்’

ஹிஹிஹி

உங்கள் தோழி பொன்மலருக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்..........
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
மரபுவழி தோற்றம்!
அன்பரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்பனுக்குப் பிள்ளை
தப்பாமல் பிறந்தான்//

:)
வினோ இவ்வாறு கூறியுள்ளார்…
சகோ இந்த மாதிரி ஒரு அனுபவத்திற்கு நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.. சின்ன வித்தியாசம்.. பால் மட்டுமே மாற்றம்...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பாரத்... பாரதி
மிக்க நன்றி! தாங்கள் தாராளமாகப் படிக்கலாம். பாரதி விரும்பி என்ற பெயர் கொள்ளாத பட்சத்தில் :-)

@ மாணவன்
நல்ல கருத்து :-) வாழ்த்துகளுக்கு நன்றி!

@ எஸ்.கே.
ஆமாண்ணா :-) அப்புறம்..சில விஷயங்கள் நமக்கென்று நேரும் போதுதான் புரியும் போல, இல்லையா?

@ அன்பரசன்
ஸ்மைலி போடாதீங்கப் பா....ப்ளீஸ்! என் போஸ்ட்டுக்கு நான் மட்டும் தான் போடுவேன் :)))

@ வினோ
வாழ்த்துக்கள் சகோ :-) All the best..
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
thanks di and your poem is also nice di
ராம்குமார் - அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை நல்லாருக்கு....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பொன்மலர்
Welcome Dear :-)

@ராம்குமார் - அமுதன்
நன்றி! உங்க ப்ரொபைல் பார்த்தேன் :-)
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதை நல்லாருக்கு....
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் தோழி பொன்மலருக்கு வாழ்த்துக்கள்.


கவிதை அருமை. ரொம்ப நல்லாயிருக்கு.
dheva இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் பாரதி விரும்பிதான்..

கவிதை படிக்கலாம்னு வந்தேன்.........படிக்காமலேயே கிளம்புறேன்...........

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பிரஷா
நன்றி பிரஷா!

@ சே.குமார்
மிக்க நன்றி!!

@ dheva
என் கவிதையையெல்லாம் நீங்க படிக்காம இருக்குறதே நல்லது தேவா ;-) நன்றி!

“பாரதி விரும்பி” என்பவர் ஊர் பெயரில்லாமல் என் ப்ளாகிற்கு வந்து என் கவிதைகளுக்குக் கருத்து சொல்பவர்.
பாரதி விரும்பி இவ்வாறு கூறியுள்ளார்…
நான் உங்கள் கவிதையை மட்டுமே விமர்சித்தேன்.

அதற்குப் பதிலாக நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது சரியா ?

முதலில் என் கருத்தை “கவிதை” என்று சொல்லி அவமதித்தீர்கள்.
இப்போ ஊர் பேர் இல்லாதவன் என்கிறீர்கள் ?

(என்னுடைய ஊர்: அம்பை)

கருத்தே எழுதத் தெரியாதவன் அல்லது அருமையான கவிதை என்று டெம்ப்ளேட் பின்னூஸ் இடத் தெரியாதவன் என்று சொன்னால் அது என் கருத்தின் மீதான விமர்சனம்.

நானும் ”வேலிகாத்த வீரப்பன்” என்ற பெயரில் ஒரு ப்ளாக்கர் புரபைல் வைத்துக் கொண்டு கருத்து சொன்னால் ஊர் பேரோடு கருத்து சொல்வதாக ஆகிவிடுமா ?

என்னைப் படிக்க வேண்டாம் என்று சொன்னீர்கள் மீறிப் படித்தேனா இல்லை கருத்து ஏதும் சொன்னேனா ?


பின்னூட்ட பாக்ஸ்-க்கு மேலே பதில் ப்ளீஸ் என்றில்லாமல் பாராட்டுக்கள் ப்ளீஸ் என்று போட்டிருந்தால் நான் என் கருத்தை சொல்லியிருக்க மாட்டேன்.


”சுனாமி” கவிதை (?!!!)-க்கு பல விமர்சனங்கள் இருந்தும், விமர்சனங்களை நேர் கோட்டில் நீங்கள் பார்க்கமாட்டீர்கள் என்பதால் தவிர்த்து விட்டேன்.

எனது கருத்துக்கள் உங்களை இவ்வளவு பாதிக்கும் எனத் தெரியாது, மன்னிக்கவும்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பாரதி விரும்பி
மிக்க நன்றி.
cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் சுபத்ரா

தலைப்புக்கேற்ற கவிதை. இயல்பான சிந்தனை.

அறிவுரைகளைக் கேட்டு ஆகட்டும் என்றேன்

அறிவுரைகளைக் கேட்டு ஆகட்டும் என்கிறான்

அழகுக் கவிதை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@cheena (சீனா)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா ஐயா !!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...