நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து..

Apr 27, 2011



“நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு.. நான்...”

“ஏய்.. நிறுத்து. என்ன இப்போ? நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரம் லேட் ஆயிடுச்சுனா போதும். போற வர்ற பொண்ணுங்களைப் பார்த்து லுக் உட்டுட்டுப் பாட்டு பாட வேண்டியது. இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னப் போட்டுச் சாத்திருக்காங்கன்னு தெரியலயே.. கையில இது வேற. ச்ச.. நான் வந்த வழியா போறேன். பை.. நீ வேற எவளையாவது பார்த்துக்கோ. இதெல்லாம் சரிபட்டு வராது”

“தேவி... ப்ளீஸ்.. என்ன விட்டுப் போயிறாத.. தேவீ..”

“பை பை..”

“தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா.. பாவி, அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....!”

“போ.. என் பின்னாடியே வராத. நான் உன் மேல ரொம்ம்ம்ப கோவமா இருக்கேன்.”

“என் கண்மணியே கண்மணியே.. சொல்லுவதைக் கேளு.. என் கண்மணிக்குக் கோபம் வந்தால் மின்னும் பனிப் பூவு..”

“ஷட் அப்.. எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா.. அவகிட்ட போய் சொல்லு”

“சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு”

“அடடா.. என் கவியரசர் கம்பா!”

“கொஞ்சம் பாடுனா போதுமே.. எதிர்பாட்டு பாடிருவியே”

“...................”

“பேசு தேவி.. பேசு.. உன் குரலைக் கேட்க ஓடோடிவந்த என்னை ஏமாற்றி விடாதே”

“அய்யோ....”

“கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்... கோபுரமே உன்மேல் சாய்ந்து கொண்டு.. உந்தன் விரலுக்குச் சொடுக்கெடுப்பேன்”

“அடச்சீ.. தள்ளு. அது யாரு அந்த கோகிலம்.. புது ஆளா? சந்தோஷம்.. நான் எஸ்கேப்பு”

“என் கண்மணி என் காதலி.. இளமாங்கணி.. ஓராயிரம் கதை சொல்கிறாள்.. கதை சொல்கிறாள்.... நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ.....”

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி என் பின்னால சுத்துற?”

“சின்ன முள்ளு காதலியல்லோ.. பெரிய முள்ளு காதலனல்லோ.. ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ.. சின்ன முள்ளு அழுத்தமானது. மெதுவாய்ப் போகும்.. பெரிய முள்ளு துரத்திப் பிடிக்குமே அது தான் வேகம்”

“இந்த டான்ஸ அப்படியே அந்தத் தெருவோரமா ஆடிக்காட்டுனேனா கொஞ்சம் வருமானம் கிடைக்கும். நான் போறேன். பை.. உன்ன எனக்குப் பிடிக்கல.

“இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்.. இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும். என்ன சொல்லப் போகிறாய்??”

“அய்யோ.. நான் சொல்லியாச்சு. ஐ டோண்ட் லைக் யூ அட் ஆல்...”

“ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதலன் நான் தான் என்று.. அந்த சொல்ல்ல்ல்லில்..”.

“யாராவது பார்க்கப் போறாங்க. போய்த் தொலை”

“நறுமுகையே.. நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.. செங்கனி ஊறிய வாய் திறந்து.. நீ ஒரு திருமொழி சொல்லாய்.. அற்றைத் திங்கள் அந்நிலவில்.. நெற்றித் தரல நீர் வடிய.. கொற்றைப் பொய்கையாடியவள் நீயா...”

“நான் அவள் இல்லை”

“அய்யோ... ஒத்த சொல்லால.. என் உசுரெடுத்து வெச்சிக்கிட்டா.. ரெட்ட கண்ணால.. என்னத் தின்னாடா..”

“உனக்கும் எனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. கெட் லாஸ்ட்..”

“உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது. அட ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது.. ஆத்தங்கர மரமே.. அரசமர இலையே.. ஆலமரக் கிளையே.. அதிலுறங்கும் கிளியே.. ஓடக்கர ஒளவுக் காட்டுல ஒருத்தி.. யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி.. தாவிவந்து சண்டையிடும் அந்தமுகமா.. தாவணிக்கு வந்தவொரு நந்தவனமா….”

“இது சுடிதாரு...”

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. உன்மீது காதல் வந்தது. எப்போது எங்கு என்று நீ சொல்வாயா?”

“போடா.. பொல்லாத பொய்யா..”

“காற்றின் அலைவரிசை கேட்கின்றதா.. கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா.. நெஞ்சு நனைகின்றதா.. இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா.. காற்றில் கண்ணீரையேற்றி... கவிதைச் செந்தேனை ஊற்றி.. கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.. ஓயும் ஜீவன்... ஓயுமுன்னே... ஓடோடி.....”

“இந்த எமோஷனல் ப்ளாக் மெயிலிங் எல்லாம் என்கிட்ட வேண்டாம்..”

“முகம்கண்டு முகம்கண்டா நேசம் கொண்டேன்.. அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.. வெண்ணிலாவின் தேரிலேறிக் காதல் தெய்வம் நேரில் வந்தாளே.. மானமுள்ள ஊமை போல தானம் கேட்கக் கூசி நின்றேனே.....!!”

“வந்தேன் வந்தேன்.. மீண்டும் நானே வந்தேன்… எனது கனவு.. கனவை எடுத்துச்செல்ல வந்தேன்..”

“இது யார்டா.. ஆகா.. இவதான் அந்தக் கோகிலமா.. அடிச்சதுடா யோகம். சரிடி.. புது ஆப்பற்சூனிட்டி வந்திருக்கு. நான் போறேன்...”

“ஏ ஏ ஏ ஏ.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப் போடி.. ராமனின் மைதிலி நான் தான்டி.. பொம்பள போக்கிரி ஓடிப் போடி.. உன் ஆசைக்கு ஆதிசேசன் தேடுதோடி..? பந்தியில.. பங்கு கேட்டா.....”

“போதும் போதும். தேவையா இது? கூப்பிடும்போது திருப்பிக்கிட்ட. இப்ப இன்னொருத்தி வந்தவொடனே துப்பட்டாவ தலையில கட்டிட்டுக் கிளம்பிட்ட? அய்யய்யோ.. அழுறியா? என் கண்ணுல..”

“எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா.”.

“அழாதமா...”

“அப்போ பாட்டு பாடு”

“கொல்லையில தென்னை வைத்துக் குறுத்தோலப் பெட்டி செஞ்சு.. சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ.. மரக்கிளையில் தொட்டில் கட்ட.. மாமனவன் மெட்டு கட்ட.. அரண்மனையை விட்டுவந்த அல்லிராணி கண்ணுறங்கு.....ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..”

“ஹ்ம்ம்ம்ம்.......”
..
Read More...

அமாவாசையும் பௌர்ணமியும்

Apr 24, 2011




கருவேப்பிலைக் கொழுந்தே
என்றே எப்போதும்
செல்லமாகக் கொஞ்சும்
அப்பா..

அப்படியென்ன தெரிகிறது
அந்தக் கண்ணாடியில்..
கருவாச்சி
எனக் கடிந்துகொள்ளும்
அம்மா..

அடிவாங்கி அழும்போதெல்லாம்
போடீகருப்பாயி
என ஆத்திரத்தைக் கொட்டும்
தம்பி..

உனக்குக் கல்யாணம் ஆகுறது
கஷ்டம்டீ
என வக்கணை காட்டும்
தோழி..

உன் நிறத்துக்கு
இதுதான் பொருந்தும்மா
எனப் பிடிக்காததைத் திணிக்கும்
துணிக்கடைக்காரன்..

மாதா மாதம்
மளிகைப் பொருட்களுடன்
மறவாமல் இடம்பிடிக்கும்
ஃபேர் அன்ட் லவ்லி

எல்லாம் மறந்து போனது
நீ என் கிளியோபட்ரா
எனப் பாடிப்
பரிசம்போட்டுப் போன
சீமைக்காரன் போன்ற
சிவப்பு மாப்பிள்ளையால் !
.
Read More...