“நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு.. நான்...” “ஏய்.. நிறுத்து. என்ன இப்போ? நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரம் லேட் ஆயிடுச்சுனா போதும். போற வர்ற பொண்ணுங்களைப் பார்த்து லுக் உட்டுட்டுப் பாட்டு பாட வேண்டியது. இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னப் போட்டுச் சாத்திருக்காங்கன்னு தெரியலயே.. கையில இது வேற. ச்ச.. நான் வந்த வழியா போறேன். பை.. நீ வேற எவளையாவது பார்த்துக்கோ. இதெல்லாம் சரிபட்டு வராது” “தேவி... ப்ளீஸ்.. என்ன விட்டுப் போயிறாத.. தேவீ..” “பை பை..” “தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா.. பாவி, அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....!” “போ.. என் பின்னாடியே வராத. நான் உன் மேல ரொம்ம்ம்ப கோவமா இருக்கேன்.” “என் கண்மணியே கண்மணியே.. சொல்லுவதைக் கேளு.. என் கண்மணிக்குக் கோபம் வந்தால் மின்னும் பனிப் பூவு..” “ஷட் அப்.. எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா.. அவகிட்ட போய் சொல்லு” “சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு” “அடடா.. என் கவியரசர் கம்பா!” “கொஞ்சம் பாடுனா போதுமே.. எதிர்பாட்டு பாடிருவியே” “...................” “பே...
Hi from a Hikikomori 🐌