முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து..



“நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு.. நான்...”

“ஏய்.. நிறுத்து. என்ன இப்போ? நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரம் லேட் ஆயிடுச்சுனா போதும். போற வர்ற பொண்ணுங்களைப் பார்த்து லுக் உட்டுட்டுப் பாட்டு பாட வேண்டியது. இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னப் போட்டுச் சாத்திருக்காங்கன்னு தெரியலயே.. கையில இது வேற. ச்ச.. நான் வந்த வழியா போறேன். பை.. நீ வேற எவளையாவது பார்த்துக்கோ. இதெல்லாம் சரிபட்டு வராது”

“தேவி... ப்ளீஸ்.. என்ன விட்டுப் போயிறாத.. தேவீ..”

“பை பை..”

“தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா.. பாவி, அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....!”

“போ.. என் பின்னாடியே வராத. நான் உன் மேல ரொம்ம்ம்ப கோவமா இருக்கேன்.”

“என் கண்மணியே கண்மணியே.. சொல்லுவதைக் கேளு.. என் கண்மணிக்குக் கோபம் வந்தால் மின்னும் பனிப் பூவு..”

“ஷட் அப்.. எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா.. அவகிட்ட போய் சொல்லு”

“சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு”

“அடடா.. என் கவியரசர் கம்பா!”

“கொஞ்சம் பாடுனா போதுமே.. எதிர்பாட்டு பாடிருவியே”

“...................”

“பேசு தேவி.. பேசு.. உன் குரலைக் கேட்க ஓடோடிவந்த என்னை ஏமாற்றி விடாதே”

“அய்யோ....”

“கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்... கோபுரமே உன்மேல் சாய்ந்து கொண்டு.. உந்தன் விரலுக்குச் சொடுக்கெடுப்பேன்”

“அடச்சீ.. தள்ளு. அது யாரு அந்த கோகிலம்.. புது ஆளா? சந்தோஷம்.. நான் எஸ்கேப்பு”

“என் கண்மணி என் காதலி.. இளமாங்கணி.. ஓராயிரம் கதை சொல்கிறாள்.. கதை சொல்கிறாள்.... நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ.....”

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. ஏன் இப்படி என் பின்னால சுத்துற?”

“சின்ன முள்ளு காதலியல்லோ.. பெரிய முள்ளு காதலனல்லோ.. ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ.. சின்ன முள்ளு அழுத்தமானது. மெதுவாய்ப் போகும்.. பெரிய முள்ளு துரத்திப் பிடிக்குமே அது தான் வேகம்”

“இந்த டான்ஸ அப்படியே அந்தத் தெருவோரமா ஆடிக்காட்டுனேனா கொஞ்சம் வருமானம் கிடைக்கும். நான் போறேன். பை.. உன்ன எனக்குப் பிடிக்கல.

“இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்.. இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும். என்ன சொல்லப் போகிறாய்??”

“அய்யோ.. நான் சொல்லியாச்சு. ஐ டோண்ட் லைக் யூ அட் ஆல்...”

“ஒரு பொய்யாவது சொல் கண்ணே.. உன் காதலன் நான் தான் என்று.. அந்த சொல்ல்ல்ல்லில்..”.

“யாராவது பார்க்கப் போறாங்க. போய்த் தொலை”

“நறுமுகையே.. நறுமுகையே.. நீ ஒரு நாழிகை நில்லாய்.. செங்கனி ஊறிய வாய் திறந்து.. நீ ஒரு திருமொழி சொல்லாய்.. அற்றைத் திங்கள் அந்நிலவில்.. நெற்றித் தரல நீர் வடிய.. கொற்றைப் பொய்கையாடியவள் நீயா...”

“நான் அவள் இல்லை”

“அய்யோ... ஒத்த சொல்லால.. என் உசுரெடுத்து வெச்சிக்கிட்டா.. ரெட்ட கண்ணால.. என்னத் தின்னாடா..”

“உனக்கும் எனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. கெட் லாஸ்ட்..”

“உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது. அட ஓடத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது.. ஆத்தங்கர மரமே.. அரசமர இலையே.. ஆலமரக் கிளையே.. அதிலுறங்கும் கிளியே.. ஓடக்கர ஒளவுக் காட்டுல ஒருத்தி.. யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி.. தாவிவந்து சண்டையிடும் அந்தமுகமா.. தாவணிக்கு வந்தவொரு நந்தவனமா….”

“இது சுடிதாரு...”

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. உன்மீது காதல் வந்தது. எப்போது எங்கு என்று நீ சொல்வாயா?”

“போடா.. பொல்லாத பொய்யா..”

“காற்றின் அலைவரிசை கேட்கின்றதா.. கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா.. நெஞ்சு நனைகின்றதா.. இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா.. காற்றில் கண்ணீரையேற்றி... கவிதைச் செந்தேனை ஊற்றி.. கண்ணே உன் வாசல் சேர்த்தேன்.. ஓயும் ஜீவன்... ஓயுமுன்னே... ஓடோடி.....”

“இந்த எமோஷனல் ப்ளாக் மெயிலிங் எல்லாம் என்கிட்ட வேண்டாம்..”

“முகம்கண்டு முகம்கண்டா நேசம் கொண்டேன்.. அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.. வெண்ணிலாவின் தேரிலேறிக் காதல் தெய்வம் நேரில் வந்தாளே.. மானமுள்ள ஊமை போல தானம் கேட்கக் கூசி நின்றேனே.....!!”

“வந்தேன் வந்தேன்.. மீண்டும் நானே வந்தேன்… எனது கனவு.. கனவை எடுத்துச்செல்ல வந்தேன்..”

“இது யார்டா.. ஆகா.. இவதான் அந்தக் கோகிலமா.. அடிச்சதுடா யோகம். சரிடி.. புது ஆப்பற்சூனிட்டி வந்திருக்கு. நான் போறேன்...”

“ஏ ஏ ஏ ஏ.. யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப் போடி.. ராமனின் மைதிலி நான் தான்டி.. பொம்பள போக்கிரி ஓடிப் போடி.. உன் ஆசைக்கு ஆதிசேசன் தேடுதோடி..? பந்தியில.. பங்கு கேட்டா.....”

“போதும் போதும். தேவையா இது? கூப்பிடும்போது திருப்பிக்கிட்ட. இப்ப இன்னொருத்தி வந்தவொடனே துப்பட்டாவ தலையில கட்டிட்டுக் கிளம்பிட்ட? அய்யய்யோ.. அழுறியா? என் கண்ணுல..”

“எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா.”.

“அழாதமா...”

“அப்போ பாட்டு பாடு”

“கொல்லையில தென்னை வைத்துக் குறுத்தோலப் பெட்டி செஞ்சு.. சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ.. மரக்கிளையில் தொட்டில் கட்ட.. மாமனவன் மெட்டு கட்ட.. அரண்மனையை விட்டுவந்த அல்லிராணி கண்ணுறங்கு.....ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..”

“ஹ்ம்ம்ம்ம்.......”
..

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ரைட்டு!! ஒரு எப்.எம் கேட்ட மாதிரி இருந்துச்சு சுபா.. சில பாட்டு தெரியல..

//Labels: நகைச்சுவை //

ஐ லைக் தட்! ;)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு இவ்ளோ பாட்டு தெரியுமா? நிச்சயமா நீங்க ஒரு புலவர்
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
சினிமா பாட்டின் வரிகளை வைத்து ஒரு காமெடி பதிவை தேத்துவது எப்படி? அனுகவும் - சுபத்ரா,துபாய் பஸ் ஸ்டேண்ட், துபாய் குறுக்குத்தெரு,துபாய்
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி ஹி இது வேறயா?
சாந்தி மாரியப்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாட்டுக்கு எசப்பாட்டு நல்லாவே இருக்குது :-)))))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Balaji saravana

எல்லாமே பிரபல பாட்டுகள் தானே பாலா? அது இருக்கட்டும். நகைச்சுவைன்னு லேபிள் வச்சத அப்ரிசியேட் பண்ணதுக்கு ரொம்ப சந்தோஷம் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@jaisankar jaganathan

அய்யய்யய்யய்யோ.... இந்த வார்த்தைய விடமாட்டேங்குறாங்கடா சாமி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சி.பி.செந்தில்குமார்

ஹி ஹீ.. அதுசரி, நான் எப்போ துபாய் போனேன்? ;)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சி.பி.செந்தில்குமார்

அது வந்து.. நாம பிரபல பதிவர் ஆயிட்டோமா.. அனானிங்க தொல்ல தாங்க முடில. அதனால ;)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@அமைதிச்சாரல்

நன்றிங்க எசமான்/னி :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜெ.ஜெ

:) :) :)
அதிர்ஷ்டரத்தினங்கள் இவ்வாறு கூறியுள்ளார்…
100..!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@அதிர்ஷ்டரத்தினங்கள்

மிக்க நன்றி! வாழ்த்துகள் :-) நல்ல ராசியான பேரு ;)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா அந்த பால் நிலவ கேட்டு
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

பாடுங்க பார்ப்போம் :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தான ஒரு போஸ்ட் போட்ட சுபா
அதுக்குள்ள என்ன வெயில் அதிகமா இருக்கா..

பட் எதுவும் நல்லாத்தான் இருக்கு
இனி எப்படி எழுதினா அவ்ளோதான்...

bt sirikirapola eruntchu..nice one.
கனவின் பயணம் இவ்வாறு கூறியுள்ளார்…
Awesome!
ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
கொள்ளையில தென்னை வச்சு பாட்டு காதலன் பிட் சாங் எனக்கு பிடிக்குமே !!!

நல்ல சிந்தனை வாழ்க உம் தொண்டு வளர்க உம் புகழ் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@siva

நன்றி சிவா! வெயில் அதிகம் தான்.. சிங்கப்பூர்ல எல்லாம் எப்படி?
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@கனவின் பயணம்

:) மிக்க நன்றி !!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ப்ரியமுடன் வசந்த்

ஹி..ஹி... நன்றி வசந்து :-)
Radhamohan இவ்வாறு கூறியுள்ளார்…
:-)

//ராமனின் மைதிலி நான் தான்டி//
கேள்விபடாத பாட்டு... என்ன படம்?

என்னுடைய லிஸ்டில், சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த பாடல்.
"நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
...
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே..."

Glory to Kannamma ! :-)
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
:-))))
பதிவை படித்தவுடன் நினைவிற்கு வந்த பாடல்:
"லோ லீட்டா ஹலோ லீட்டா...உன் தூரம் கூட பக்கமாக மாறுதே"
என் சகோதரியின் இது போன்ற சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் வல்ல கண்ணபிரான் நிறைவேற்றி வைப்பாராக ! :-)))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Radha

"ராமனின் மைதிலி நான் தான்டி”
--- பஞ்சதந்திரம் படத்துல ரம்யா கிருஷ்ணனும் சிம்ரனும் சண்டை போட்டுப் பாடுற பாடல் :-)

Then, what a lovely song from Madarasapattinam !!

//என் சகோதரியின் இது போன்ற சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் வல்ல கண்ணபிரான் நிறைவேற்றி வைப்பாராக ! :-)))//

இன்ஷா அல்லாஹ் :-)
jayakumar இவ்வாறு கூறியுள்ளார்…
eppadi...ippadiyellam...hmmmm
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
super di
நிரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
திரைப் பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து வித்தியாசமான ஓர் உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
கொள்ளையில தென்னை வைத்துக் குறுத்தோலப் பெட்டி செஞ்சு//

அது கொள்ளையில இல்லை கொல்லையில
எங்க சொல்லுங்க
கொல்லையில
சாதாரணமானவள் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்கு. ஆனா ஏன் ரெண்டு டைம் copy paste ஆகி இருக்கு? சரி பண்ணிக்கோங்க.
Erode Nagaraj... இவ்வாறு கூறியுள்ளார்…
தலைலெழுத்து... இப்படி ஒரு பாட்டு (title) இருக்கா!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...