முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரணபோதை

யாரோ ஒரு அழகு பாட்டி பொதுவாக வீட்டின் தலைப்பிள்ளை பாட்டியிடம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் . முதல் குழந்தையாய்ப் பிறந்த நான் என் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை . நான் ஒற்றைத் துணியில் ஓடித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்தவள் அவள் . எண்ணெய் விட்டுப் பிசைந்த வெறும் சோறாக இருந்தாலும் அவள் கையால் ஊட்டிவிடும் போது அமுதமாகிவிடும் .

தேவதை வம்சம் நீயோ!

அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு . புதிதாக வீடு மாறிய சமயம் . பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது . “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன் . மாலை ஆறு மணி ஆகியிருந்தது . எந்த பஸ் .. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம் . இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க , “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல .. அவளும் கே . டி . சி . நகர் தான் . அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன் .