மரணபோதை

May 11, 2013



யாரோ ஒரு அழகு பாட்டி

பொதுவாக வீட்டின் தலைப்பிள்ளை பாட்டியிடம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தையாய்ப் பிறந்த நான் என் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை. நான் ஒற்றைத் துணியில் ஓடித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்தவள் அவள். எண்ணெய் விட்டுப் பிசைந்த வெறும் சோறாக இருந்தாலும் அவள் கையால் ஊட்டிவிடும் போது அமுதமாகிவிடும்.
Read More...

தேவதை வம்சம் நீயோ!

May 3, 2013




அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு. புதிதாக வீடு மாறிய சமயம். பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது. “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. எந்த பஸ்.. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம். இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க, “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல.. அவளும் கே.டி.சி.நகர் தான். அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன்.
Read More...