முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிதம்பர ரகசியம்

அபியிடம் இருந்து கால் வந்தது . “ ஃப்ரீயா இருக்கியா ?” “ ஃப்ரீ தான் சொல்லு ” “ நேத்து உனக்கு டேடா கார்ட் ரீசார்ஜ் பண்ணிட்டு வாறேன் .. நம்ம கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ரோடு இருக்குல்லா ?” “ ஆமா ” “ அதுல நடுரோட்டுல ஒராளு ஃபிட்ஸ் வந்து இழுத்துட்டு கெடக்காரு ” “ ஐயோ .. அப்புறம் ?” “ அப்படியே மண்ணுல பிரண்டுட்டுக் கெடக்காரு ” “ அப்றம் என்னாச்சு ?”

தேன்நிலா அம்சம் நீயோ!

2013 ம் வருடம் இதே நாளில் என் நெருங்கிய தோழியைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன் . அப்போது ஜோஸ் குட்டி இன்னும் பிறந்திருக்கவில்லை . இப்போது சித்ராவுக்கு ஒரு ஜியா குட்டியும் பிறந்தாகிவிட்டது . பெண் குழந்தை ஒன்று இருந்தால் விதவிதமாக உடைகள் உடுத்தி அலங்காரம் செய்து ரசிக்கலாமே என்னும் ஆசை அவளுக்கு நிறைவேறியதில் எனக்கும் ஏக மகிழ்ச்சி . நானும் சித்ராவும் பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம் . நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன :) “ சீக்கிரமா நீயும் இந்த ஜெயிலுக்குள்ள வாடீ . படிச்சதெல்லாம் போதும் . நீ மட்டும் எப்படி எஞ்சாய் பண்ணலாம் ? இரு இரு .. உங்க அம்மாகிட்ட பேசி ஒடனே உனக்கொரு மாப்பிள்ள பார்க்கச் சொல்லுதேன் ” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள் . ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை :) ஜோஸ் பிறந்திருந்த போது Lilliput- ல் அவனுக்கு இரண்டு ஆடைகள் எடுத்து வைத்திருந்தேன் . நான் கொடுப்பதற்குள் அவன் வளர்ந்...