முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பர ரகசியம்



அபியிடம் இருந்து கால் வந்தது.

ஃப்ரீயா இருக்கியா?”

ஃப்ரீ தான் சொல்லு

நேத்து உனக்கு டேடா கார்ட் ரீசார்ஜ் பண்ணிட்டு வாறேன்.. நம்ம கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ரோடு இருக்குல்லா?”

ஆமா

அதுல நடுரோட்டுல ஒராளு ஃபிட்ஸ் வந்து இழுத்துட்டு கெடக்காரு

ஐயோ.. அப்புறம்?”

அப்படியே மண்ணுல பிரண்டுட்டுக் கெடக்காரு

அப்றம் என்னாச்சு?”

அப்றம் அவர தூக்கி கையில ரெண்டு கம்பியைக் கொடுத்து உக்கார வெச்சோம். ஃபிட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா நின்னுச்சு

நீ ஹெல்ப் பண்ணியா இல்லையா?”

ஆமா.. கேளு

சொல்லு

எண்ணே.. வீடு எங்கருக்குனு கேக்கேன், சிதம்பரம்னு சொல்லுதாரு!

ஐயையோ.. திருநெல்வேலிக்கு எதுக்கு வந்தாராம்?”

செண்ட்ரிங் வேலைனு சொல்லி நெறைய பேரைக் கூட்டிட்டு வந்திருக்காங்க, இவருக்கு ஃபிட்ஸ் இருந்ததால வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். ‘ரெண்டு நாளா ஹைகிரவுண்டுல இருந்து சமாளிச்சேன். அங்கயும் போகச் சொல்லிட்டாங்கனு சொல்லுதாரு


கையில ஒரு பை வெச்சிருக்காருடே. உள்ள ஒரு சட்டை, ஒரு பேண்ட். வேற ஒன்னுமில்ல. ஊருக்குப் போறதுக்குக் கூட கையில காசு இல்ல

காசு குடுத்தீங்களா?”

குடுத்தோம்.. கேளு. உடம்பு ஃபுல்லா மண்ணு. கையிலயும் மண்ணு. அத அந்தப் பழைய சட்டைய வெச்சி தொடைக்காரு. ஒரு துண்டு கூட இல்ல

“...”

ஊருக்குப் போக எவ்வளவு ஆகும்னு கேட்டோம். 250 ரூபா இருந்தா போதும்னு சொன்னாரு. ஒரு 400 ரூபா கொடுத்தோம். அப்றம் நான் தான் பஸ் ஏத்திவிட்டேன். புது பஸ் ஸ்டாண்ட் போகலாம்னு சொன்னேன். ‘இல்ல தம்பி, சமாதானபுரத்துல எறக்கி விட்டுரு. போயிருவேன்னு சொல்லிட்டாரு

ம்ம்

பஸ் ஏறுறதுக்கு முன்னாடி ஒரு 300 ரூபா குடுத்தேன். பட்டுனு என் கால்ல உழுந்துட்டாரு?”

“...”

காசு வேணும்னு கேக்க மாட்டேங்குறாருடே. ‘கையில காசில்லாம எப்படிப் போவீங்கனு கேக்கேன்.. ‘மொத்தமா அவங்களே காசு போட்டு எல்லாரையும் கூட்டிட்டு வந்தாங்க. போறதுக்குக் காசு தரல. எப்படிப் போறதுன்னு தெரியலனு சொல்லி ஒரு மாதிரி சங்கடப்படுதாரு. அப்றம் தான் காசு கொடுத்தோம்

ம்ம்

சரி.. உங்க வீட்டுல யாரு இருக்கா? போன் நம்பர் இருக்கா? ஒரு செல்லாவது வெச்சிருக்கக் கூடாதா? 500 ரூபா ஆகுமா?”னு கேட்டேன்

ம்ம்

“‘கஞ்சிக்குக் கூட வழியில்ல. இதுல எங்க செல் வாங்க? பொண்டாட்டியும் ஒரு பிள்ளையும் இருக்கு. பையன் வேலைக்குப் போறான், அவனையும் நாம தொல்ல பண்ணக் கூடாதுனு தான் வேலைக்கு வந்தேன்’னு சொல்லுதாரு

அவருக்கு எத்தன வயசிருக்கும்?”

நம்ம அப்பா வயசு


அந்தக் கம்பியைக் கையிலயே வெச்சிக்கோங்கனு சொல்லிக் குடுத்தோம். நான் தான் பைக்ல ஏறச்சொல்லி சமாதானபுரத்துல பஸ் ஏத்திவிட்டேன்

ம். அம்மாட்ட சொன்னியா இந்த விசயத்த?”

சொன்னேன். கோர்ட்டுக்கு எதிர்த்தாப்ல ஒரு ஆளு ஃபிட்ஸ் வந்து கெடந்தாருனு சொன்னேன்

என்ன சொல்லுச்சு?”

“‘ஆமா. எவனாது குடிச்சிட்டு ரோட்டுல உழுந்து கெடப்பான்.. கிட்ட போயிறாதனு சொல்லுச்சு. அதோட நிறுத்திக்கிட்டேன்

ம்ம்

சரி வச்சிருதேன். அப்புறம் பேசுறேன்

கருத்துகள்

ezhil இவ்வாறு கூறியுள்ளார்…
மனிதர்களின் பல கோணத்தை அலசிய அனுபவம்தான்...
வருண் இவ்வாறு கூறியுள்ளார்…
அந்தாளு ஒரு வேளை ஏமாத்துறாரோனு நெனச்சு உதவி செய்யாமல் போய்விட்டால்.. ஒரு வேளை அவர் உண்மையிலேயே ஃபிட்ஸ் வந்து கஷ்டப்பட்டுயிருப்பாரோ? னு மனசாட்சி கொல்லும்.

உதவி செய்யப்போயி ஏமாந்தும் இருக்கலாம்தான். என்னைக்கேட்டால் இதுபோல் ஏமாறுவது ஒன்னும் பெரிய தப்பில்லை.

எப்படிப் பார்த்தாலும் உதவி செஞ்சது தப்பில்லை if it is not such a big sum of money and one can afford that sum without hurting him/herself.

One can complicate this also..Sometimes I feel that helping someone is also somewhat selfish attitude of mine only. I think I help because it makes me feel good about myself. :-) BTW, I am only talking about myself. Take it easy.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ezhil

ம்ம்..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வருண்

Don't worry Varun, I largely agree with u nowadays ;)
கானகம் இவ்வாறு கூறியுள்ளார்…
விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் இதேபோல மகளுக்கு கல்யாணம்னு உதவி கேட்கும் ஒருவருக்கும், உதவி கேட்கப்படுபவருக்குமாக நடக்கும் உரையாடல்களும் மனதுக்குள் எழும் சந்தேகங்களையும் வைத்து அழகாக ஒரு கதை சொல்லி இருப்பார்.

நாம் குறைந்து போய்விடாத அளவுக்கு உதவியெனில் கேட்பவன் பொய்யனாக இருந்தாலும் செய்யலாம் என்பதே என் கட்சி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...