முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன்நிலா அம்சம் நீயோ!

2013ம் வருடம் இதே நாளில் என் நெருங்கிய தோழியைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அப்போது ஜோஸ் குட்டி இன்னும் பிறந்திருக்கவில்லை. இப்போது சித்ராவுக்கு ஒரு ஜியா குட்டியும் பிறந்தாகிவிட்டது. பெண் குழந்தை ஒன்று இருந்தால் விதவிதமாக உடைகள் உடுத்தி அலங்காரம் செய்து ரசிக்கலாமே என்னும் ஆசை அவளுக்கு நிறைவேறியதில் எனக்கும் ஏக மகிழ்ச்சி.

நானும் சித்ராவும் பத்து வருடங்களுக்கு முன்பு ஒன்றாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டன :) “சீக்கிரமா நீயும் இந்த ஜெயிலுக்குள்ள வாடீ. படிச்சதெல்லாம் போதும். நீ மட்டும் எப்படி எஞ்சாய் பண்ணலாம்? இரு இரு.. உங்க அம்மாகிட்ட பேசி ஒடனே உனக்கொரு மாப்பிள்ள பார்க்கச் சொல்லுதேன்என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை :) ஜோஸ் பிறந்திருந்த போது Lilliput-ல் அவனுக்கு இரண்டு ஆடைகள் எடுத்து வைத்திருந்தேன். நான் கொடுப்பதற்குள் அவன் வளர்ந்தேவிட்டான். “ரெண்டாவது பாப்பாவுக்காவது அந்த டிரெஸ்ஸ எடுத்துட்டு வாடீ..என்று பாவமாகக் கேட்டுவிட்டுத்தான் போனைக் கட் செய்தாள் போன முறை.

25 வருடங்களாக ஒரு குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தவள் ஐந்தே வருடங்களில் ஓர் அன்பான மனைவியாக, அக்கறையுள்ள தாயாக, பொறுப்பான அதிகாரியாக மாறியிருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. நான் சித்ராவுக்கும் ஒரு ப்லாகர் அக்கவுண்ட் தொடங்கிக் கொடுத்திருந்தேன். அதில் இரண்டு கவிதைகளையும் எழுதியிருக்கிறாள். ஆனால் ஏனோ அதைத் தொடரவில்லை. “எதாவது எழுதலாம்லா டீ?என்று கேட்டால் போதும். “ஒரு டைரி ஃபுல்லா கவிதை எழுதி வெச்சிருந்தேன். படிச்சிட்டுத் தாரென்னு சொல்லி வாங்கிட்டுப் போய் எங்கடீ தொலைச்ச? அது இருந்தா அந்தக் கவிதையவாது நான் எழுதுவேன்என்று புலம்பத் தொடங்கிவிடுவாள் என்பதால் அதன்பிறகு கேட்பதில்லை :) சாரி சித்ரா.. அந்த டைரி எங்கருக்குனே தெரியலைடீ. ஆனா அதைப் போய் எவன் எடுத்தான்னுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அனேகமா அதுல நிறைய பேர் சுண்டல் வாங்கித் தின்னிருப்பாங்க. நல்ல வேளை. நான் டைரியில எல்லாம் கவிதை எழுதல :) ஐயாம் ஒன்லீ ப்லாக் :)

நான் சென்னையில் வசிக்க, அவள் மட்டும் திருநெல்வேலியிலேயே இருப்பதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் அவளாவது ஊரில் இருக்கிறாளே, எப்போது போனாலும் சந்திக்கலாம் என்று நினைக்கையில் ஒரு ஆறுதல். இருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு திசைகளில் பயணிப்பதைப் போல் தெரிந்தாலும் எங்கள் நட்பு பிரிந்துவிடுமா, விரிசல் வருமா என்னும் சந்தேகங்கள் எல்லாம் பறந்துவிட்டன. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவளிடமிருந்து நானோ என்னிடமிருந்து அவளோ தப்பிப்பது கடினம் தான் :) பிகாஸ், டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யா!

என் சந்தோஷங்களைக் கடைசியாகப் பகிர்ந்து கொள்பவள் அவள் என்றாலும் என் துக்கங்களுக்கு அவளே முதலில் தோள் கொடுப்பவள். We have laughed many of our sorrows off together. அவள் இல்லாமல் சில துயர்களை நான் கடந்திருக்க முடியாது. என் வலிகளை வலிந்து வாங்கிக் கொள்பவள்; என் பசியைப் பொறுக்க மாட்டாதவள்; என் புன்னகையில் சிரிப்பவள்; என் தனிமையில் தொல்லை செய்பவள்; எப்போதும் எனக்காகக் காத்திருப்பவள்; எத்தனைக் காலம் கழித்துப் பேசினாலும் அதே சிரிப்புடன் நலம் விசாரிக்க அவளால் மட்டுமே முடிந்திருக்கிறது; அவளிடம் பேசும் எவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்; அழகானவள்; அவளைச் சார்ந்த எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன. அவள் வாழ்வும் அழகாகவே செல்ல வேண்டும் என்று இந்நொடியில் பிரார்த்திக்கிறேன். ஆம்.. இன்று சித்ரா பௌர்ணமி. சித்ரா பிறந்தநாள்.


பின்குறிப்பு: “சுபா.. உன் கல்யாணத்துக்குக் கையில ஒன்னு இடுப்புல ஒன்னாத் தான் வரணும்என்ற உனது வேண்டுதல் விரைவில் பலிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் :) He hee.. I miss u.. :(

கருத்துகள்

வருண் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க ரெண்டு பேருடைய பெயரும் "த்ரா"தான் முடியுது. :)

உங்க தோழிக்கு ஒரு "ஹாய்" சொல்லச் சொன்னதா சொல்லுங்க.

மற்றபடி தோழிகளுக்கு இடையே எனக்கென்ன வேலை? இப்போதைக்கு இடத்தைக் காலி பண்ணிடுறேன். :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
hi..
How are you?
-Viveka
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வருண்

Hi Varun,

Actually என் பெயர் சுபத்ரா தேவி, அவள் பெயர் சித்ரா தேவி :) அவள் இந்தப் பதிவைப் படிப்பாள்.. Thanks
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Viveka Ram

hi Viveka, I am good, how r u?
கவிஞர்.த.ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்
எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் அவன் செயல்.. வாழ்க வளமுடன்...
நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ரூபன்

Thanks :)
எனக்கும் தமிழ் எழுத வருமா ??? இவ்வாறு கூறியுள்ளார்…
அவளிடம் பேசும் எவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்; அழகானவள்; அவளைச் சார்ந்த எல்லாமே அழகாகத் தான் இருக்கின்றன. அவள் வாழ்வும் அழகாகவே செல்ல வேண்டும் என்று இந்நொடியில் பிரார்த்திக்கிறேன்......மிகுந்த கனமான வரிகள் ...உங்கள் தோழமை மேலும் வளர வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Mugilan இவ்வாறு கூறியுள்ளார்…
Hi Subathra.. Good to see that you are still blogging... I'm giving you same comments as your friend gave..Get Married soon...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Mugilan

Thanks. How r u?
Mugilan இவ்வாறு கூறியுள்ளார்…
I'm doing great Subathra!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Mugilan

:)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...