There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

கவிதைகள்

Sep 21, 2010

கட்டிய புடவையோடு வாழ்க்கைப்பட கைகொடுத்தது வறுமையின் நிறம்  *** "பட்டினி" கவிதைக்கு கிடைத்த பரிசு காலித் தட்டு *** பஞ்சு மெத்தை தோற்றுப் போனது பழைய சேலையிடம் *** மழையில் வெளுக்காத வண்ணத்துப்பூச்சி வெளுத்தது மனதை. *** யாரென்று தெரியவில்லை அசைத்த கையோடு ரயிலுக்குள் நான் *** முதுகில் குத்தியவனை முதுகால் தாங்கியது வண்டியில் மாடு *** வியர்வையைத் துடைத்த அழுக்குச்சட்டையால் மணத்தது வெள்ளைச்சட்டை *** உறங்கிய தாயின் உறங்காச் சேயை தாலாட்டிச் சிரித்தது காற்றாடிச் சத்தம் *** கடலில் கலவரம் விஷமச் சிரிப்புடன் வெள்ளை நிலா. *** கதிரவனுக்கும் கடலுக்கும் கலவரமில்லாக் கலப்புத் திருமணம் இடம்: தொடுவானம் ...
Read More...

கலங்கப்போவது யாரு?

Sep 20, 2010

”கலங்கப்போவது யாரு” வணக்கம்.. வந்தனம்.. வெல்கம் டு "கலங்கப்போவது யாரு!" நான் உங்க அபிமானத்துக்குரிய தேஜா. அண்ட் இந்த நிகழ்ச்சிய பற்றிச் சொல்லணும்னா...ம்ம் பேரக் கேட்டவுடனே தெரிஞ்சிருக்கும் இது ஒரு ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சினு! சரி, நம்ம நிகழ்ச்சியில இது வரைக்கும் 999 எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்னைக்கு 1000 -வது எபிசோடுக்கு அடி வைத்திருக்கிறோம்....சாரி அடியெடுத்து வைத்திருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பல ஜோடிகள் மிக அறுவையாக.....மன்னிக்கவும் மிக அருமையாக விளையாடித் தோற்றுப்போனாலும் துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கடைசிச் சுற்றுவரை  இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். ஏன் துரதிர்ஷ்டம்னு சொல்றேன்னா இந்தப் போட்டியில்...
Read More...

பேருந்தில் நீ எனக்கு..

Sep 14, 2010

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம் தந்தது. சிலர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரவர் பேருந்திற்காகக் காத்திருந்தபடி பாதி நனைந்திருந்தோம். "மழை என்னமா பெய்யுது.. நனையறது நல்லாத் தான் இருக்கு.  ஒடம்புக்கு ஏதும் ஆகலைனா...
Read More...

வலையுலகிற்கு ஒரு வணக்கம்

Sep 11, 2010

சமர்த்துக்குட்டியா இருப்பேன் :) ரொம்ப நாளாக ஆசைபட்டு இறுதியில் எனக்கென ஒரு வலைதளத்தை உருவாக்கிவிட்டேன்.. எழுத வேண்டும் எங்கிற ஆசை உள்ள எல்லாருக்கும் Blogging ஒரு வரப்பிரசாதம்! இந்தப் பதிவின் மூலம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம்...... “என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க” என்பது தான். எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்...
Read More...