முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைகள்

கட்டிய புடவையோடு வாழ்க்கைப்பட கைகொடுத்தது வறுமையின் நிறம்  *** "பட்டினி" கவிதைக்கு கிடைத்த பரிசு காலித் தட்டு *** பஞ்சு மெத்தை தோற்றுப் போனது பழைய சேலையிடம் *** மழையில் வெளுக்காத வண்ணத்துப்பூச்சி வெளுத்தது மனதை. *** யாரென்று தெரியவில்லை அசைத்த கையோடு ரயிலுக்குள் நான் *** முதுகில் குத்தியவனை முதுகால் தாங்கியது வண்டியில் மாடு *** வியர்வையைத் துடைத்த அழுக்குச்சட்டையால் மணத்தது வெள்ளைச்சட்டை *** உறங்கிய தாயின் உறங்காச் சேயை தாலாட்டிச் சிரித்தது காற்றாடிச் சத்தம் *** கடலில் கலவரம் விஷமச் சிரிப்புடன் வெள்ளை நிலா. *** கதிரவனுக்கும் கடலுக்கும் கலவரமில்லாக் கலப்புத் திருமணம் இடம்: தொடுவானம் * *

கலங்கப்போவது யாரு?

”கலங்கப்போவது யாரு” வணக்கம்.. வந்தனம்.. வெல்கம் டு "கலங்கப்போவது யாரு!" நான் உங்க அபிமானத்துக்குரிய தேஜா. அண்ட் இந்த நிகழ்ச்சிய பற்றிச் சொல்லணும்னா...ம்ம் பேரக் கேட்டவுடனே தெரிஞ்சிருக்கும் இது ஒரு ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சினு! சரி, நம்ம நிகழ்ச்சியில இது வரைக்கும் 999 எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்னைக்கு 1000 -வது எபிசோடுக்கு அடி வைத்திருக்கிறோம்....சாரி அடியெடுத்து வைத்திருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பல ஜோடிகள் மிக அறுவையாக.....மன்னிக்கவும் மிக அருமையாக விளையாடித் தோற்றுப்போனாலும் துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கடைசிச் சுற்றுவரை  இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். ஏன் துரதிர்ஷ்டம்னு சொல்றேன்னா இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு பரிசுகளாய் ஒரு டேபிள்டாப் கிரைண்டர்,  ஒரு வேக்கும் கிளீனர், ஒரு வாஷிங் மெஷின், மேலும் குட்டிக் குட்டிப் பரிசுகள் பல காத்திருப்பதால் இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்குச் சற்றே ஆபத்து அல்லது அபாயகரமான சூழல் காத்திருக்கின்றது என்றே கருதப்படுகிறது. இதுவரை வேலைக்கு ஆள் வைத்து செய்துகொண்டிருந்த வீடுகளில் தற்பொழுது வழக்கம்ப...

பேருந்தில் நீ எனக்கு..

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம் தந்தது. சிலர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரவர் பேருந்திற்காகக் காத்திருந்தபடி பாதி நனைந்திருந்தோம். "மழை என்னமா பெய்யுது.. நனையறது நல்லாத் தான் இருக்கு.  ஒடம்புக்கு ஏதும் ஆகலைனா பரவால்ல.." எண்ணியவாறே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த அனைவரும் ஆண்கள். கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் நிற்பது. ஒரு பக்கம் இந்த பயம். இன்னொரு பக்கம் பேருந்து வரவேண்டும் என்ற அவசரம். நொடிகள் யுகங்களாகத் தெரிந்தன.  கடைசியாகப் பேருந்து வந்தது. "ஐயோ.. இவ்வளோ கூட்டமா?" என்று எண...

வலையுலகிற்கு ஒரு வணக்கம்

சமர்த்துக்குட்டியா இருப்பேன் :) ரொம்ப நாளாக ஆசைபட்டு இறுதியில் எனக்கென ஒரு வலைதளத்தை உருவாக்கிவிட்டேன்.. எழுத வேண்டும் எங்கிற ஆசை உள்ள எல்லாருக்கும் Blogging ஒரு வரப்பிரசாதம்! இந்தப் பதிவின் மூலம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம்...... “என்னையும் உங்க கூட சேர்த்துக்கோங்க” என்பது தான். எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!