முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைக்கூ முயற்சி


அடியை வாங்கியதும்
அடம்பிடித்த குழந்தை
அணைத்துக் கொண்டது

**



திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்
மரண பயமோ?

**


 ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்
பசித்தே இருக்கிறது
பசுவின் கன்று.

**

 

உறங்கி விழித்ததும்
குழம்பிப் போகிறேன்
எது வாழ்வு? எது கனவு?

**

 

மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு

**

கருத்துகள்

மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்துமே சூப்பர்ங்க...
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்..

தொடருங்கள்.......
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
//உறங்கி விழித்தேன்குழம்பிப் போனேன்எது வாழ்வு? எது கனவு?** //

அல்டிமேட் கலக்கல்...
சென்னை பித்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
//மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு.//
சுத்தமான ஹைக்கூ !
நன்று
ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமா அதென்ன முயற்சி.... எல்லா ஹைக்கூவும் நல்லாத்தான் இருக்கு...
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா ஹைக்கூவும் நன்றாக இருந்த போதும்

// திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்
மரண பயமோ?

உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?

மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //

மூன்றும் ரொம்ப பிடித்திருந்தது!
தமிழ் உதயம் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒன்றும், நான்கும் ரெம்ப பிடித்துள்ளது.
அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
சூப்பர் சுபத்ரா..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஐந்தாவதுதான் ஹைக்கூக்கு நெருங்கி வருகிறது.சூப்பர்.இது மாதிரி காட்சிப்படுத்துங்கள்

’திடுக்கிடச் செய்யும்’ ”மரண பயமோ?” என்று ஹைக்கூவுக்குள் நீங்கள் வந்து கோனார் நோட்ஸ் போடக்கூடாது சுபத்ரா.”பசித்தே இருக்கிறது” சமுதாயச் சாடல் வேண்டாம். விலகி நின்று காட்சிப்படுத்துங்கள்.

வாழ்த்துக்கள் சுபத்ரா
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாணவன்
மிக்க நன்றி!

@ சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@ வெறும்பய
நன்றி அண்ணா, ஹைக்கூவுக்கு எனச் சில விதிமுறைகள் இருக்குல. அதான் அப்படி :-)

@ எஸ்.கே.
மிக்க நன்றி அண்ணா!

@ தமிழ் உதயம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

@ அமுதா கிருஷ்ணா
மிக்க நன்றி! :-)

@ கே.ரவிஷங்கர்
மிக்க நன்றி!! அடுத்த முயற்சியில் முன்னேறுகிறதா பார்க்கலாம் :-)
ஜோதிஜி இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசி மட்டும் தான் சரியாக வந்துள்ளது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் உங்களால் முடியும்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ஜோதிஜி
மிக்க நன்றி!!
Prathap Kumar S. இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசி கவிதை ஹைக்கூ கவிதைக்குண்டான இலக்கணத்தோடு ஒத்துப்போகிறது.

மற்றவை நல்லமுயற்சி
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹைக்கூ அற்புதம்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Terror
இது ஹைக்கூ இல்லனு எல்லாரும் ஏகோபித்த கருத்தைச் சொல்லிட்டாங்க...அதனால திரும்பவும் முயற்சிக்க போறேனே :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ நாஞ்சில் பிரதாப்
மிக்க நன்றி!

@ சித்ரா அக்கா
Thank You :-)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
மழைக்காலம் முழுவதும் மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு.//

எவ்ளோ செலவளிக்கிரீங்க. எந்திரன் படம் பார்த்த காசுக்கு வீட்டை சரி பண்ணிருக்கலாமே?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
அடியை வாங்கியதும்
அணைத்துக் கொண்டது
அடம்பிடித்த குழந்தை.//

அந்த சூடு சுரணை இல்லாத குழந்தை நீங்களா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும சைரன் சத்தம்///

அவ்வளவு சத்தமாவா கேக்குது? இதுக்குமா பயப்படுவீங்க?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்பசித்தே இருக்கிறதுபசுவின் கன்று.//

அப்படியா சரவணா பவன்ல சாப்பாடு வாங்கி கொடுங்க a
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?//

கிள்ளி பாருங்க
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
/சுபத்ரா said...

@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///

கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ரமேஷ்
இல்ல.. களைச்சுப் போயிருப்பீங்களேனு சொல்ல வந்தேன்!
மதுரை சரவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
ஏனுங்க ஒவ்வொரு கவிதையிலேயும் பாதிய காணொம்? ஓ அப்படி எழுதுனாத்தான் ஹைக்கூவா......?
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
/////அடியை வாங்கியதும்அணைத்துக் கொண்டதுஅடம்பிடித்த குழந்தை/////

அப்போ அழுகலியா?
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
////]மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும்சைரன் சத்தம்////

போலீஸ்... ஆம்புலன்ஸ்... ஃபையர் சர்வீஸ்? இதுல எதுக்கு பயம்? ஓ சிரிப்பு போலீசுக்கா? இப்போ அவரும் தலைல சைரன் மாட்டிக்கிட்டாரா? என்ன கொடும சார் இது?
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
////ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்பசித்தே இருக்கிறதுபசுவின் கன்று./////

இதென்னடா கொடுமையா இருக்கு, எந்தக்கன்னுக்குட்டியா இருந்தா என்னங்க, பசிக்காதா? இது ஒரு குத்தமா?
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
////உறங்கி விழித்தேன்குழம்பிப் போனேன்எது வாழ்வு? எது கனவு?//////

வழக்கமா நம்ம பசங்க நைட்டு ராவா அடிச்சுட்டு காலைல சொல்றது இது.... நீங்களும் சொல்லியிருக்கீங்க....ம்ம்ம்....!
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
/////மழைக்காலம் முழுவதும்மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு. //////

கவித கவித..... அங்கங்க மானே தேனே மட்டும் போட்டுக்குங்க.... அப்புறம் நீங்க எங்கேயே போயிடுவீங்க....
பன்னிக்குட்டி ராம்சாமி இவ்வாறு கூறியுள்ளார்…
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/சுபத்ரா said...

@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///

கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு....//////

ஆமா இவரு தண்ணியெல்லாம் சும்மா குடிக்க மாட்டாரு, யாராவது ஓசில வாங்கிக் கொடுத்தாதான் குடிப்பாரு....
ஜீவன்பென்னி இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாம் ஏற்கனவே படித்தது போன்ற உணர்வு............
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஹாய் சுபா! ஆசான்கள் திருத்தங்கள் சொல்லிட்டாங்க!
உன்னோட பார்வைக் கோணம் ரொம்ப அழகா இருக்கு! தொடர்ந்து எழுது! :)
அந்த கனவு பற்றிய ஹைக்கூ நிறைய யோசனை செய்ய வைக்குது சுபா! :)
அருண் பிரசாத் இவ்வாறு கூறியுள்ளார்…
முயற்சி திருவினை ஆக்கும்....

ஆனா...வீண் முயற்சி செய்யாதேமா....

அப்புறம் நானும் ஹைக்கூ மாதிரி லோக்கூ எழுதுவேன்

(Joke Apart)

எல்லாமே நல்லா இருந்தது
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?

மழைக்காலம் முழுவதும்மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு.//////

அருமை அருமை :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மதுரை சரவணன்
மிக்க நன்றி!

@ ப.ராமசாமி
அண்ணன், நீங்களும் திடீர்னு வந்து இப்படிக் கும்பலா கமெண்ட்டிட்டீங்களே!
//ஏனுங்க ஒவ்வொரு கவிதையிலேயும் பாதிய காணொம்? ஓ அப்படி எழுதுனாத்தான் ஹைக்கூவா......?//
ஹி..ஹி..ஹி :-)

@ சமீர்
அப்படியா? :-)

@ Balaji Saravana
நன்றி BS :-) என்னை இவ்வளோ என்கரேஜ் பண்றதுக்கு.. அடுத்த தடவை நல்ல வருதா பார்க்கலாம்.

@ அருண் பிரசாத்
மிக்க நன்றி ஜி :-)

@ ஜெ.ஜெ.
Thank u very much dear :-)
சௌந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்////

mmm இது ரொம்ப சூப்பர் எனக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதி இருக்கிங்க தொடர்ந்து எழுதுங்க
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) இவ்வாறு கூறியுள்ளார்…
ஹாய் ஹைக்கூ சூப்பர்... ஹைபர்... கலக்கல்
arasan இவ்வாறு கூறியுள்ளார்…
அற்புதம்
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
nice poems. keep it up and try to write more di
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சௌந்தர்
நன்றி சௌந்தர்!

@ சந்ரு
மிக்க நன்றி!

@ அப்பாவி தங்கமணி
மிக்க நன்றி! :-)

@ அரசன்
அப்படியா? மிக்க நன்றி!

@ பொன்மலர்
Thank You Dear.. Nice to see you here. Keep visiting my blog :-)
தங்கராசு நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்துமே சூப்பர்ங்க...
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்

வழிமொழிகிறேன். அதுவும் ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் பிரமாதம்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தங்கராசு நாகேந்திரன்
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாம் நன்றாக இருக்கிறது - முதலாவது மற்றும் கடைசி - இவை இரண்டுடனும் நன்றாகத் தொடர்பு படித்திக்கொள்ள முடிகிறது.
முதல் ஹைக்கூ,
"அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்து அழும் குழவி"
என்ற பாசுர வரிகளை நினைவூட்டுகிறது.
நிற்க, இந்த வலைப்பூவில் கொடுத்துள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியானதா?
~
கிரிதாரியின்,
ராதா
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Radha
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ராதா.
என் மின்னஞ்சல் முகவரி சரியானதே!

subadhra23@gmail.com
R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
//ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்
பசித்தே இருக்கிறது
பசுவின் கன்று//

//மழைக்காலம்
முழுவதும் மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //

********

இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகளும் படு சூப்பர் ரகம்...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@R.Gopi

நன்றி கோபி அண்ணா..
புவனை சையத் இவ்வாறு கூறியுள்ளார்…
L போர்டு என்று சொல்லிவிட்டு என்னமா எழுதுது இந்த பொன்னு. மிக்க அருமை. பாராட்டுக்கள். நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கலப்படம்

முல்லைப் பூ
கனகாம்பரம் கலந்து
கட்டிக் கொண்டே சொன்னார்
எங்கேயும் எதிலும்.........
******************************

பூம் பூம் மாடு

தலைப்பாகை
கொண்ட
டில்லி பொம்மை
------------------------------
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ புவனை சையத்
மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...