There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

நானு ஏன் வேலையு

Oct 14, 2011


வணக்கம்! ப்ளாக் பார்க்கும் போதுலாம்ஏதாவது போஸ்ட் எழுதனுமேன்னு தெனமும் தோணும்.. அதுக்காகச் சும்மா கிடக்குதேனு எதையாவது கிறுக்கிகிட்டு இருக்க முடியுமா? எதாச்சும் சரக்கு இருந்தா தான எழுத முடியும்.. அப்படீனுதான் இந்தப் பதிவு எழுதி போஸ்ட் பண்ணுதவெரைக்கும் நெனச்சிட்டு இருந்தேன்.. :-) (சோ, போறவங்க இப்பவே போயிக்கோங்க, உள்ள ஒன்னுமில்ல)

ஆஃபீஸ்ல ஒரே வேல.. ஆமா ஒரே வேல தான். வாடிக்கையாளர்கள் மட்டும் வெதவெதமா.. அதெப்படி ஏன்கிட்ட வாற எல்லாக் கஸ்டமர்ஸுமே ஒன்னு... ரொம்ப தொலவுலருந்து வாறோம்பாங்க, அல்லது சாயங்காலம் ஃப்ளைட்.. அப்ராட் போனூம்பாங்க.. இன்னைக்கு லீவ் எடுத்துட்டு வந்திருக்கேன்.. முடிச்சிக் குடுத்துருங்கம்பாங்க. அம்மா அப்பா வயசானவங்க.. மூட்டுவலி இருக்கு. ரொம்ப நேரமா காத்துகிட்டு உக்கார்ந்திருக்க முடியாதும்பாங்க.. ஒன்னு.. கைக்கொழந்தைய கையிலயே வச்சிருப்பாங்க.. இல்லன்னா கொழந்தைய ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வரனும்.. சீக்கிரமா முடிச்சிக் கொடுங்கம்பாங்க.. எங்க லோன் சான்க்ஷன் ஆகி எவ்ளோ நாளாச்சு இன்னும் ஏன் பெண்டிங்லயே வெச்சிருக்கீங்கம்பாங்க. இன்னைக்கு 12 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிருக்கேன்.. மணி 11.55 ஆயிட்டு இன்னும் முடிக்கலையானு முந்திரிகொட்ட மாரி வந்து நிப்பாங்க.. இது இல்லன்னா, கூட வேல பாக்குற ஸ்டாஃப் யாராது வந்து இது ன் வொய்ஃபோட ஒன்னு விட்ட தங்கச்சியோட வீட்டுக்காரரோட அக்கா பையனோட எஜுகேஷன் லோன்... ஒரு பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்.. அதுக்குள்ள முடிச்சிருவீங்கள்லம்பார். இல்ல சார்.. ஒரு ஃபைல் முடிக்க கொறஞ்சது அரைமணி நேரமாவது ஆகும்பேன். சரி அப்போ பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்..அப்படிம்பார். அய்யோ... கடவுளேன்னு நொந்துபோய் டேபில்ல குனிஞ்சு தலையை முட்டிக்கிட்டு ஒன்னுமே ஆவாததுமாரி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சுசரி சார்னு தலைய ஆட்டிவப்பேன்.

இந்தமாரி வெதவெதமா கஸ்டமர்ஸ் வாறது ஒன்னும் கஷ்டம் இல்ல. ஆனா இவங்கெல்லாரும் ஒரே நேரத்துல வருவாங்க பாருங்க.. அவ்ளாதான்! நான் காலி.. சொல்லப்போனா அத நிர்வகிக்கிறதுல தான் திறமை.

இப்படித்தான் ஒரு தடவை எங்க அம்மா வயசுல ஒருத்தங்க ஏன்கிட்ட வந்து ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி அவங்களோட லோன் ஃபைல் ஒன்ன ஓபன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க. நான் சாப்டக்கூட போவாம மத்யானம் சாப்பாட்ட மிஸ் பண்ணிட்டுப் பசியில உட்கார்ந்து எல்லாம் செஞ்சு முடிச்சு ஃபைலைச் சேர வேண்டிய எடத்துக்குப் பத்தரமா அனுப்பி வெச்சதுக்கப்புறம் பதிலுக்கு ஒரு நன்றி கூடாம சொல்லாம அவங்க போனம்போது தான் நெனைச்சேன்.. “அரசியல்ல இதெல்லாம் சக...ஜமப்பா

என்ன.. ஒரு கஷ்டம். எனக்கு ஹிந்தியில யாரையும் ஏச தெரியமாட்டேங்கு. அதனாலயே எனக்கு வாற கோவத்த எல்லாம் உள்ளயே அடக்கி அடக்கி வெச்சு பொறுமையின் சிகரமாயிட்டே வாறேன். பாப்போம்.. இதெல்லாம் எங்க போயி முடிய போவுதுன்னு.

பிறவு,ராதையின் நெஞ்சமே ப்ளாக் லின்க்க மாத்திட்டேன்.. செலபேர் தேடிப்பாத்துட்டு இல்லன்னு போயிருப்பீங்க.. அறிவுப்பு இல்லாம மாத்திட்டேன். சாரி.. இந்த ப்ளாக பத்திச் சொல்லும் போது தான் ஒன்னு நியாபகம் வருது. நான் எழுதுறது எல்லாம் ஏன் ஆசைக்காகவும் ஆறுதலுக்காகவுந்தான். நான் ஒன்னும் தபூசங்கரோட தங்கச்சினு சொல்லிக்கிடல. புடிக்கலனா படிக்காதீங்க.. அதவுட்டுட்டு மேகம் எப்படி நனைக்கும் கழுத எப்படி கனைக்கும்னு வெட்டியா வந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்குற செல அனானி அண்ணன்களோட தொல்ல தாங்க முடியல.. வேண்டா வேண்டாம்னு சொன்னாலும் பி.ஹெச்.டி. படிப்புக்கு ஆராய்ச்சி பண்ணுதத மாரி நான் எழுதியிருக்குறத எடுத்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு கூடகொஞ்சம் என்னிய பிரபலமாக்கிடுதாங்க.. போதும்ணே! உருப்படியா எதாச்சும் வேல இருந்தாப் போயிப் பாருங்க.. இதுக்குமேல ஏதாச்சும் சொன்னேங்கன்னா...................................

கடைசியா ஒன்னு.. சவால் சிறுகதை – 2011 ன்னு சிறுகதைப் போட்டி ஒன்னு அறிவிச்சிருக்காங்க. கலந்துகிடனும்னு நினச்சீங்கன்னா அந்த லின்க்க படிச்சித் தெரிஞ்சிக்கோங்க. கலந்துகிடுறவங்களுக்கு ஆல் பெஸ்ட்.

தபூசங்கர பத்திப் பேசிட்டு அவரோட கவிதைய ஷேர் பண்ணாம போவ முடியுமா.. இதோ..

உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததற்குக் காரணம்
கடைசிவரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான்!

சரி.. அப்பம் நானும் உங்ககிட்ட இருந்து விடைபெறாமல் போறேன்.. தொடர்ந்து வாங்க.. என் ப்ளாக் பக்கம் :-) HAPPY WEEKEND...

********

16 comments:

ப்ரியமுடன் வசந்த் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏனுங் அம்மிணி இது எந்தூரு பாஷைங்கம்மிணி?

Erode Nagaraj... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யாரேனும் இப்படி பதில் சொன்னால்?

கண்டதுண்டா,
கேள்விக்குறிகளோடு செல்பவர்களை?
விடை பெறும் சாக்கிலேனும்
வைத்திருந்திருப்பேன்
என்னுள் உன்னை.

தந்து விட்டுப் போயிருந்தால்
அறிந்திருப்பாய்
பகிர்தல் என்னும் நெகிழ்வை
தருதல் என்னும் மகிழ்வை.

வராது என்னைத் தவிக்கவிட்டு
வரிகள் என்ன வேண்டியிருக்கு...

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அட முதல் பாராவில் சொன்னத அழகா செஞ்சுட்டீங்களே...

மாய உலகம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்பம் நானும் உங்ககிட்ட இருந்து விடைபெறாமல் போறேன்.. தொடர்ந்து வாங்க.. என் ப்ளாக் பக்கம் //

தொடர்ந்து வருகிறோம்.. வாழ்த்துக்கள்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

செலபேர்????yaaru avangalam..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்பாட ஒரு கவிதையினி
இன்னும் இருக்காங்களா
ஓகே ஓகே
பொறுமையின் சிகரமே
வாழ்க வாழ்க உங்கள் தொண்டு
அந்த அம்மா சார்பா
உங்களுக்கு
நன்றி கூறிக்கொள்கிறோம்
இப்போ சந்தோசமா ..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேடம் உங்க ப்ளாக் கவிதை படித்து விட்டு
நான்கூட ஏதோ எழுத ஆரம்பித்து விட்டேனா பாத்துக்கோங்க
உங்க கிட்ட என்னமோ இருக்கு ..

My best wishes to YOur work..
suba.

அமுதா கிருஷ்ணா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

லோனு வேண்டும் எங்கின வந்து பார்க்கணும்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//லோனு வேண்டும் எங்கின வந்து பார்க்கணும்.
//
repeatu

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Rathnavel
நன்றிங்க :)

@ வசந்த்
இது ஊர் பாஷை இல்ல..ஏன் பாஷை :)

@ ஈரோடு நாகராஜ்
யாரும் சொல்லமாட்டாங்க. நீங்க தான் சொல்றீங்க..பதில் கவிதை பன்ச்!

@ கலாநேசன்
இல்லையே..அழகாச் செஞ்சத தான் முதல் பாராவில சொல்லியிருக்கேன் :)

@ மாய உலகம்
டேன்க்ஸ் :)

@ சிவா
ரொம்ப சந்தோசம்..எழுதுங்க பாக்கேன்.

@ அமுதா கிருஷ்ணா
நெசமாவே லோன் வேணும்னா என் ஈமெயில் ஐ.டி.க்கு உங்க தொலைபேசி எண்ணை அனுப்புங்க :)

@ ஜெய்சங்கர் ஜெகன்னாதன்
அய்யோ..கமெண்ட்டயாவது சொந்தமா எழுதாக்கூடாதா? திருவரங்கா...

Utopian said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Neenga innum Gujarat La ethanal than kuppa kotta poringa, neenga sonna athae poruma enakum vanthuduchu, solla ponna ippa lam kovamae varathu illa. Unga kavithai blog la oru puthu update illa :) vazthukal.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ அமுதா கிருஷ்ணா
நெசமாவே லோன் வேணும்னா என் ஈமெயில் ஐ.டி.க்கு உங்க தொலைபேசி எண்ணை அனுப்புங்க :)///NIJAMAVATHAN CHOLRENGAL...

ooruku varen oru kadai tirakanum..athuku loan venum..tharuveengala madam.

COOL said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தக்குடு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் கூட திருனவேலில வீடு கட்ட குஜராத்ல இருக்கும் உங்களோட பாங்குல உங்க கவுண்டர்ல லோனுக்கு விண்ணப்பிக்கலாம்னு இருக்கேன்! :))

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ Utopian
Think tank has changed its name and roaming here I think :-) Thanks for ur wishes sir.

@Siva
Yeah sure. அதுக்குத் தானே எங்க பேங்கு இயங்கிகிட்டு இருக்கு :-)

@ cool msg
மிக்க நன்றி! உங்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் (அடுத்த தீபாவளிக்கு) :-)

@ தக்குடு
‘தக்குடு’னு பேரு வெச்சிருக்கிறவங்களுக்கு எல்லாம் நாங்க பெட்ரோமாக்ஸ் லைட் தர்றதில்ல :-)

சாதாரணமானவள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதுதான் இயற்கையா இருக்கு சுபா... எங்களுக்கும் திர்நவேலி பாஷை பழக்கமாக ஒரு வாய்ப்பா இருக்கும்.. Keep it up