முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Chillax Babies..

மஞ்சள் பூசிக் குளித்திராத தமிழ்ப் பெண்கள் இருக்கிறீர்களா? வாய்ப்பு குறைவு தான். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனைப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறீர்கள்? இதற்கும் வாய்ப்பு குறைவு தான்!
எனது பள்ளிக்கால நினைவுகளில் மறக்க முடியாத ஒன்றுவிடுமுறை நாட்களில் தோழிகளுடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று வெகுநேரம் நீந்தி விளையாடிக் குளித்து விட்டு வருவது. எப்போதாவது நிகழும் இந்நிகழ்ச்சியில் நீங்காமல் இடம் பெற்றிருப்பதுமஞ்சள்பூச்சு.
            ஆற்றுக்குக் கிளம்பும் முன்னரே யாரவது ஒரு அக்கா ஒரு சிறிய செய்தித்தாள் துண்டில் வேண்டிய அளவு கோபுரம் பூசுமஞ்சள் தூளை வைத்து மடித்து எடுத்துக் கொண்டு வருவார். சோப்பு தேய்த்துக் குளித்து முடித்தவுடன் இறுதியாகத் தோழிகள் அனைவரும் அக்கா கொண்டு வந்திருந்த அந்த மஞ்சள் பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்து முகத்திலும் கைகளிலும் (சிலர் குதிகால்களிலும்) தேய்த்துக் கொண்டு அனல் பரக்கும் அந்த உச்சி வெயிலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருப்போம். யாருக்கு முகத்தில் மஞ்சள்திக்காகப் பிடித்துள்ளது என ஒரு போட்டியே நடக்கும். உள்ளங்கைகளையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, பின்னர் சிறிது சோப்பைக் கைகளில் தேய்த்து அப்போது வரும் சிவப்பு நிற நுரையையும் ஆச்சர்யத்துடன் ரசித்து அதனை ஆற்று நீருக்குள் கழுவிவிட்டு ஒருமுங்குபோடுவதோடு முடியும் எங்கள் தாமிரபரணி ஆற்றுக் குளியல்!
             வீட்டிலும் குளிக்கும் போது அம்மா வைத்திருக்கும் மஞ்சள் பொடியை/உரசு மஞ்சளை வேண்டும் என அடம்பிடித்துத் தேய்த்துக் குளித்துவிட்டு, துவட்டும்தேங்காய்ப்பூத் துண்டுகளில் மஞ்சள் கறைகளைப் படிய விட்டு வாங்கிக் கட்டிய ஞாபகமும் உண்டு.
தொடர்ந்து, வெள்ளை சட்டையின் காலர் பகுதிகளை மஞ்சள் கலராக ஆக்கிக்கொண்டு பள்ளியிலிருந்து திரும்பிவரும் போதும் அர்ச்சனைகள் அரங்கேறும். கையெழுத்து நோட்டு, ஆங்கிலப் புத்தகத்தில் மெமொரைஸர் போயம் (memoriser poem) கொண்ட பக்கங்கள், ரெக்கார்டு நோட்டு எனப் பலவற்றிலும் மஞ்சளின் கைவண்ணம் இருக்கப் பெற்றிருக்கும்.
கஸ்தூரி மஞ்சளை உபயோகப்படுத்தினால்பிடிக்கவே பிடிக்காதுஎன்ற காரணத்தினால் பின்னர் கஸ்தூரி மஞ்சளும் அதனுடன் பயித்த மாவு அல்லது கடலை மாவு கலந்து தினமும் பூசிவந்த காலம் போய், அது எப்போதாவது என்றாகி இப்போது அந்தப் பழக்கம் இல்லாமலே போய்விட்டது!
            அதன் பாதிப்பு தானோ என்னவோ மஞ்சளின் குணமுள்ள விக்கோ (Vicco turmeric) டர்மரிக் ஆயுர்வேதிக் க்ரீம் மற்றும் மஞ்சள் குணம் நிறைந்த நேச்சர் பவர் டர்மரிக் சோப் போன்றவற்றில் வந்த ஆர்வமும் கூட எனத் தோன்றுகிறது. ஆனால் இன்றைய தேதியில் மஞ்சளை சாஸ்திரத்திற்காகச் சமையலில் சிறிது சேர்த்துக் கொள்வதோடு சரி. வேறு அப்ளிகேஷனே கிடையாது என்றே சொல்லலாம்.
            கஸ்தூரி மான் தனது வயிற்றுக்குள்ளேயே மணம் வீசும் அந்தக் கஸ்தூரியை வைத்துக்கொண்டு அப்பொருளைத் தேடிச் சுற்றிச் சுற்றி அலையுமாம். அதைப் போல் அற்புதமானமஞ்சள்எனும் இயற்கை மூலிகையைக் கையில் வைத்துக் கொண்டு பல காரணங்களுக்காகச் செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பெண்களாகிய நாம் தேடி அலைகிறோம் என்பது வேடிக்கையானது!
            தாய்மார்கள் கூட தங்கள் பெண் குழந்தைகள்மாடர்னா வளரவே விரும்புகின்றனர். பள்ளிக்கூடம் செல்லும் சின்னப் பெண்கள் கூட தங்கள் கைகளிலும் கால்களிலும் ரோமங்களை அகற்றுவதற்கு அழகு நிலையம் சென்றுவேக்ஸிங்’ (waxing) செய்துகொண்டு அந்த அழகைவெளிப்படுத்தும்குட்டைப் பாவாடைகளை அணிந்து பள்ளி செல்லும் காலக்கட்டம் இது..
இதுபோன்ற செயற்கை முறைகளால் பெறப்படும் அழகைவிட இயற்கை நமக்குப் பரிசளித்துள்ள பொருட்களைக் கொண்டு நம்மை நாமே அழகூட்டி அழகுக்கு அழகு சேர்த்திடுவோமே! ;-)
உங்களுக்குத் தெரியுமா? மஞ்சள் ஒரு
·         நேச்சுரல் ப்ளீச் (natural bleach)
·         நேச்சுரல் சன்ஸ்க்ரீன் (natural sunscreen)
·         நேச்சுரல் ஆன்ட்டிசெப்டிக் (natural antiseptic)
·         நேச்சுரல் க்ளென்சர் (natural cleanser)
·         நேச்சுரல் மாய்ஸ்ச்சரைஸர் (natural moisturiser)
இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். சருமத்தின் மாசு மருக்களை நீக்கவும், தழும்புகளைப் போக்கவும், தோல் சுருக்கங்களைப் போக்கவும், வரட்சியை நீக்கி ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், கைகால்களில் ரோமங்கள் வளராமல் இயற்கையான முறையில் தடுக்கவும், கிருமி நாசினியாகப் பயன்படுத்தவும் மஞ்சள் ஒரு அற்புதமான பொருள்!!!
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் வீட்டிற்கு வந்தபின் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மஞ்சள் தேய்த்து முகம், கை, கால் கழுவலாம். நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மஞ்சளைத் தேங்காய் எண்ணெய், பால், பாலாடை, கடலைமாவு, தக்காளிச் சாறு, வெள்ளரிச்சாறு, எலுமிச்சைச் சாறு, தேன், முல்தானிமிட்டிப் பொடி, முட்டையின் வெள்ளைப் பகுதி, ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு பொருளிலோ சில/பல பொருட்களைக் கலந்தோ முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டுக் காயவைத்துக் கழுவலாம்
 So my dear Chillax babies and their mummies,
தொடர்ந்து இவ்வாறு செய்து வந்து இயற்கையான அழகை மிகக் குறைந்த விலையில் பெற்றிடுங்களேன் !!!
மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் போன்ற பல சடங்குகளில் இன்றியமையாமல் இடம் பெற்றிருக்கும் இம்மஞ்சளை உணவில் சேர்த்து உட்கொண்டால் ஏற்படும் பயன்கள் கூட எண்ணிலடங்காதவை! அவற்றைப் பற்றியும் மஞ்சளுக்கு அயல்நாட்டவர் பேடண்ட் ரைட்(Patent right) வாங்கியதையும் அதைக் கான்சல் செய்த இந்திய அரசையும் பற்றிய கதைகளையும் பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமானால் இந்தப் பதிவு முடியாமல் தொடர்ந்து கொண்டே போகும் என்ற காரணத்தினால், கண்ட்ரோல் செய்து கொண்டு இஃதோடு தனது பேச்சைசுபம்போட்டு முடித்துக் கொள்கிறாள் சுபத்ரா!

கருத்துகள்

கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
Yakkaa soopparukkaa......
கேரளாக்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
I love the line"my dear chilax babies" good writing... And keep writing
Maaamallan இவ்வாறு கூறியுள்ளார்…
Good observation.. really women should concentrate on this hereafter.
Maaamallan இவ்வாறு கூறியுள்ளார்…
Really a good one.. Manjal poosi pengal vanthale athu thani alagu thaan.. athellam village la irunthu vantha than theriyum.. ippo athai ninaithalum marakka mudiyaatha gnabangalaga inikkum..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ கேரளாக்காரன் & மாமல்லன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
அசால்டு பதிவு.... தமிழ் தொட்ட பெண்..
சாமக்கோடங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
இனி கொஞ்ச காலங்களில் இந்தப் பதிப்பு ஒரு பொக்கிஷமாகப் போற்றப் படலாம்.. பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்...:)
அன்புடன் நான் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்றெல்லாம் எங்க ஊர் ஏரியில் உள்ள குளகரை துரைக்கல்லில் மஞ்சள் தேய்த்த சுவடு அப்படியே இருக்கும்.... இப்ப ஏரி மட்டும் தான் அப்படியே இருக்கு குளக்கரை துரைக்கல்லையும் காணும் .மஞ்சள் குளித்த சுவடையும் காணொம்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...