“ எப்படி அக்கா இவளை வெச்சு சமாளிக்கிறீங்க ” என வெறுப்பின் உச்சத்தில் நான் வாய்விட்டுக் கேட்டுவிட்ட அந்தக் கேள்வியில் “ இவளா கேட்டாள் ” எனச் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனார்கள் பாப்பாத்தி அக்கா . “ என்ன பவித்ரா பண்றது ? நீயும் பார்க்கத் தான் செய்ற . இதுக்கு மேல எப்படி கண்டிக்கிறது ? நானும் அடிச்சுப் பார்த்துட்டேன் . எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன் . ஒன்னும் நடக்கமாட்டேங்குதே !” என வருத்தப்பட்டார்கள் அக்கா . “ இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க .. கண்டிக்கிறது தப்பில்லை . ஆனா , எந்த விஷயத்துக்காக , எந்த நேரத்துல , எப்படி கண்டிக்கிறீங்கங்குறது தான் முக்கியம் . அடிக்க வேண்டிய நேரத்துல அடிச்சா தான் அடுத்து அதைச் செய்யும்போது பயம் வரும் . சும்மா சும்மா அடிச்சிட்டே இருந்தா , அதோட சீரியஸ்னஸ் தெரியாம போயிரும் . அடிவாங்கி அடிவாங்கி மழுங்கிரும் . குட்டிப் பையன் கூட பரவாயில்ல . இவ இருக்காளே .. வாயாடி . காயத்ரி தான் பெரிய சேட்டை ! சரி விடுங்க . வளர வளர சேட்டை குறைஞ்சிடும் ” என்று நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்...
Hi from a Hikikomori 🐌