முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒரு வருடம் ஓடிப்போச்சு

முதலில் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் !             போன வருடம் விநாயக சதுர்த்தி அன்று இந்த வலைப்பூவைத் தொடங்கினேன் . இன்றோடு ஒரு வருடம் ஓடியே விட்டது ! இந்நன்னாளில் என் வலைப்பதிவுகளுக்கு இதுவரை நேரடியாகவும் கருத்துகள் மூலமாகவும் ஆதரவும் உற்சாகமும் அளித்து, குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி வழிநடத்தவும் செய்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!  *

வேற கலர் இருக்கா?

வணக்கம்!       இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)       அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையை ப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் ...

என்றும்

என்றைக்கும் அல்லாத ஞாயிறு ஒன்றில் வந்து விழுந்ததொரு ‘மிஸ்ட் கால்’. மிஸ்ட்கால் செய்தவர் முகம் அறியாதவராயினும் ‘மிஸ்’ பண்ண விரும்பாத மாடர்ன் மங்கை.. மெசேஜிற்குத் தாவி அழைத்து உரையாடி இணையம் வழியே இதயங்களை இணைத்து கவிதைகள் இயக்கி கருத்துகள் பேசிக் கவலைகள் பகிர்ந்து கனவுகளில் பறந்து மற்றும் ஒரு ஞாயிறு ஒன்றில் சந்திப்பும் நடந்தேறி அண்ணலும் நோக்கி அவளும் நோக்க செம்புலப் பெயல்நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்தன.. காதல் பிறந்தது! நாட்கள் ஓடின.. சுபயோக சுபதினம் ஒன்றில்.. இருவருக்கும் திருமணம் தனித்தனியாக! எக்காலம் ஆயினும் காதலுக்குக் கண் தானில்லை சாதி இருக்கிறது.. சாதியைக் கட்டிக்கொண்டு புரளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்! மறக்கத் துடிக்கும் இரு மனங்களையும் சிதைந்து கிடக்கும் இரு ‘சிம்’களையும் தவிர சாட்சிகள் ஏது.. சாகடிக்கப்பட்ட நவயுகக் காதலுக்கு?!

என்னமோ ஏதோ..

      அலுவலகத்தில் ஆணி.. சாரி.. (எல்லாரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே வருது) வேலை அதிகமாக இருப்பதால் ப்ளாக்ஸ்பாட் பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை! அதிக வேலை செய்ய வேண்டியிருக்கையில் “சரி பரவால்ல. இதெல்லாம் முடிச்சிட்டு இன்னைக்குப் போய் ஜாலியா ஒரு ப்ளாக் போஸ்ட் போட்றலாம்”னு சமாதானம் சொல்லிக்கிட்டே எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிடுறேன் :-) ப்ளாக் வச்சிருந்தா இது ஒரு அட்வான்டேஜ் போல!        சாயந்தரம் 5.00 மணிக்கு மேலே வாடிக்கையாளர்களின் வருகை ஓரளவிற்குக் குறைந்த பின்னர் அலைபேசியில் இயர்போனைச் சொருகி நான் பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டே கணினியில் வேலையைச் செய்துகொண்டு இருப்பேன்.               “...நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்குக் காத்திருந்தேன் காணல.. அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடிப் போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோனல....”       “மேடம் எப்பவும் தனியாவே பாட்டு கேட்குறாங்...

என்பிலதனை வெயில் காயும்

முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடை யில் வெளிவந்துள்ளது. நன்றி: இட்லிவடை படித்துவிட்டு நிச்சயம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.. கட்டுரை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டே வாங்கினேன். படிக்கத் தொடங்கியதும் பாதியில் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஸ்ட்ரெட்சில் படித்து முடித்து புத்தகத்தை மூடிக் கீழே வைக்கையில் தான் மீண்டும் அந்தத் ‘தலைப்பு’ கண்ணில் பட்டது. புத்தக அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை வேகமாகப் புரட்டி அப்போதே எதையோ தேட ஆரம்பித்திருந்தேன்... ’விமர்சனம்’ என்று சொன்னால் அது மிகை. புத்தகம் படிக்கையில் எனக்குத் தோன்றிய உணர்வுகளைக் கருத்துகளாகப் பதிய விரும்பியே இந்தச் சிறு முயற்சி. நான் படித்த நாஞ்சில் நாடனின் முதல் புத்தகம் இது. புத்தகம் முழுக்க ‘நாகர்கோவில்-தமிழ்’. நான் மணிமுத்தாறில் தங...

SMS

ஊருக்கு வந்து, மறுபடியும் என் தம்பியின் மொபைலில் இருந்து ‘சுட்ட’ குறுந்தகவல்கள் உங்களுக்காக! பிடிச்சத ரசிங்க! பிடிக்கலைனா விடுங்க! என் கிட்ட சண்டைக்கு வராதீங்க.. இதில் உள்ள Contents-க்கு எல்லாம் கம்பனி பொறுப்பேற்காது! 12th பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்; 10th பெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்; அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்; நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமை தான்! சோ, சுமாரா படிங்க.. சூப்பர் ஃபிகரா புடிங்க :-) கல்யாண விருந்து தான், ஆனாலும் கை நனைக்க முடியவில்லை! கண்கள் நனைந்தன.. காரணம் “சோறு முடிஞ்சு போச்சு மச்சி” காதல் ஒரு வினோதமான எக்ஸாம்...! அதில் எப்போதும் பெண்களுக்கு “பாஸ் மார்க்” ஆண்களுக்கு “டாஸ்மாக்” சோ, பீ கேர்ஃபுல். வீட்டில் இருந்து வைன்ஷாப்பிற்குப் போக வைப்பது ‘காதல்’ வைன்ஷாப்பில் இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவது ‘நட்பு’. அப்பா: ரேன்க் கார்ட் எங்கடா? பையன்: இந்தாங்கப்பா.. அப்பா: அடப்பாவி! 5 பாடத்துலயும் பெயிலா? இனிமேல் என்னை ‘அப்பா’ன்னு கூப்பிடாத! ப...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் –பகுதி ஒன்று படிக்க கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை. காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்...