முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல்



காதல்..

ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.

வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
விழிபிதுங்கி நிற்கும்..

கைகொடுத்துத் தூக்கிவிட
எத்தனிக்கும் போதெல்லாம்
காற்றுக்கேது கால்களென
கடத்திக்கொண்டு போகும்..

எட்டும் தொலைவினில்
எழிலாய்ச் சிரிக்கும்
பற்ற எண்ணினால்
பட்டாம்பூச்சி ஆகும்..

உதடுகளின் உச்சரிப்பை
உதாசீனப் படுத்திவிட்டுக்
கண்களுக்குள்ளே சென்று
களவாடிப் போகும்..

ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.

இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும்
இமைகள் சொருகி
இமயத்தைக் காணும்

அதட்டும் வேளையில்
அடங்கிப் போகும்
அப்புறமாய் வந்து
அழுகையை வார்க்கும்

கிடைப்பதை எல்லாம்
ஏற்க மறுக்கும்
கொடுக்க வேண்டியே
குறைபட்டுக் கொள்ளும்

விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும்பின்
கட்டி அணைக்கும்.

வளர்பிறை நிலவாய்
வளர்ந்துவரும் காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!



Happy Valentine's Day :-)

***

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
நல்கவிதை. காதலர் தின நல்வாழ்த்துக்கள்
ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும் – பின்
கட்டி அணைக்கும்.

//

Superb lines..
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
எங்கே போனாலும் ஒரே கவிதை மயமா இருக்கே இன்னைக்கு!:-)

கவிதை நல்லாவே இருக்கு!

HAPPY VALENTINE'S DAY!
TamilTechToday இவ்வாறு கூறியுள்ளார்…
Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
காதலர் தினத்திற்கென காதலாய் எழுதிய கவிதை போல. இனிமையான வரிகள் சுபத்ரா
தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
காதலின் பரிமாணங்கள் பரிமாறிய விதம் அருமை. இன்னும் அதன் பரிணாமங்கள் நிறைய உண்டு. நீங்கள் பேசியிருக்கும் களங்கள் நன்று. காலத்தால் கலைக்க முடியாத விசயம்... வாழ்க்கையின் அடிநாதம்... மனிதனில் மலர்ந்த மலர் காதல். மனங்களை முடிச்சிட்டு தன்னை நிலைநிறுத்தும் கம்பீரம் காதல். வாழ்த்துகள்.
மாணவன் இவ்வாறு கூறியுள்ளார்…
காதலர் தின சிறப்பு கவிதை சூப்பர்...


காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
Happy Valentine's Day
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ம் ம்
நல்ல இருக்குங்க
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும் //
very nice suba!
happy valentines day! :)
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
>>>காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!

அழகு வரிகள்
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
Kavithai Super.
தினேஷ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒவ்வொரு வரிகளிலும் காதலின் உயிர்ப்பு அருமை சகோ ....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ கலாநேசன்
மிக்க நன்றி.

@ வெறும்பய
நன்றி அண்ணா..

@ எஸ்.கே.
நன்றி அண்ணா..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பொன்மலர்
என்னடி.. கவிதைக்கு ஒரு கவிதை மாதிரி கமெண்ட் போட்டிருக்க? :-)

@ தமிழ்க்காதலன்
மிக்க நன்றி.

@ மாணவன்
மிக்க நன்றி..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ரமேஷ்
மிக்க நன்றி..

@ சிவா
தேங்க்ஸ் சிவா..

@ பாலா
நன்றி பாலா..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சி.பி.செந்தில்குமார்
மிக்க நன்றி..

@ சே.குமார்
மிக்க நன்றி..

@ தினேஷ்குமார்
மிக்க நன்றி சகோ.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//ஒற்றைக்கால் மெழுகாய்உருகிக் கொண்டிருக்கும்.//

//
காற்றுக்கேது கால்களெனகடத்திக்கொண்டு போகும்..//

//அதட்டும் வேளையில்அடங்கிப் போகும்அப்புறமாய் வந்துஅழுகையை வார்க்கும்//

ரசித்த வரிகள்..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
காதலின் அனைத்து பரிமாணங்களையும் கவிதையாக்கி இருக்கிறீர்கள்.
அன்புடன் நான் இவ்வாறு கூறியுள்ளார்…
மொத்தத்துல காதல் கிறுக்குதனமா இருக்கும் என்கிறிங்க.... காதல் உணர்வை நல்லாதான் சொல்லியிருக்கிங்க....
பராட்டுக்கள்.
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
//விட்டுக் கொடுக்கும்தட்டிக் கேட்கும்எட்டி உதைக்கும் – பின்கட்டி அணைக்கும்.
//
Was reminded of another poem by my sister.
Please see here
:-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பாரத்... பாரதி...மிக்க நன்றி பாரத்..பாரதி..!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சி.கருணாகரசுஅட.. என்னங்க டக்குனு இப்படி சொல்லிப்புட்டீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.கருணாகரசு :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@RadhaRadha, went there. Kavinaya's that poem was so nice and rhythmic. Thank u for the link.. :-)
மதி இவ்வாறு கூறியுள்ளார்…
// ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.//

மிகவும் ரசித்த வரிகள் .. நன்று. வாழ்த்துகள். நேரம் இருந்தால் என் பதிவையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்
www.sunshinesignatures.blogspot.com
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@மதி

மிக்க நன்றி.. நிச்சயம் பார்க்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...