காதல்..
ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.
வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
கைகொடுத்துத் தூக்கிவிட
எத்தனிக்கும் போதெல்லாம்
காற்றுக்கேது கால்களென
கடத்திக்கொண்டு போகும்..
எட்டும் தொலைவினில்
எழிலாய்ச் சிரிக்கும்
பற்ற எண்ணினால்
பட்டாம்பூச்சி ஆகும்..
உதடுகளின் உச்சரிப்பை
உதாசீனப் படுத்திவிட்டுக்
கண்களுக்குள்ளே சென்று
களவாடிப் போகும்..
ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.
இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும்
இமைகள் சொருகி
இமயத்தைக் காணும்
அதட்டும் வேளையில்
அடங்கிப் போகும்
அப்புறமாய் வந்து
அழுகையை வார்க்கும்
கிடைப்பதை எல்லாம்
ஏற்க மறுக்கும்
கொடுக்க வேண்டியே
குறைபட்டுக் கொள்ளும்
விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும் – பின்
கட்டி அணைக்கும்.
வளர்பிறை நிலவாய்
வளர்ந்துவரும் காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!
Happy Valentine's Day :-)
***
கருத்துகள்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும் – பின்
கட்டி அணைக்கும்.
//
Superb lines..
கவிதை நல்லாவே இருக்கு!
HAPPY VALENTINE'S DAY!
Home Based new online jobs 2011
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
New google adsense , google adsense tricks , approval adsense accounts,
latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,
Quick adsense accounts ...
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))
நல்ல இருக்குங்க
இதயத்தை உறிஞ்சும் //
very nice suba!
happy valentines day! :)
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!
அழகு வரிகள்
மிக்க நன்றி.
@ வெறும்பய
நன்றி அண்ணா..
@ எஸ்.கே.
நன்றி அண்ணா..
என்னடி.. கவிதைக்கு ஒரு கவிதை மாதிரி கமெண்ட் போட்டிருக்க? :-)
@ தமிழ்க்காதலன்
மிக்க நன்றி.
@ மாணவன்
மிக்க நன்றி..
மிக்க நன்றி..
@ சிவா
தேங்க்ஸ் சிவா..
@ பாலா
நன்றி பாலா..
மிக்க நன்றி..
@ சே.குமார்
மிக்க நன்றி..
@ தினேஷ்குமார்
மிக்க நன்றி சகோ.
//
காற்றுக்கேது கால்களெனகடத்திக்கொண்டு போகும்..//
//அதட்டும் வேளையில்அடங்கிப் போகும்அப்புறமாய் வந்துஅழுகையை வார்க்கும்//
ரசித்த வரிகள்..
பராட்டுக்கள்.
//
Was reminded of another poem by my sister.
Please see here
:-)
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.//
மிகவும் ரசித்த வரிகள் .. நன்று. வாழ்த்துகள். நேரம் இருந்தால் என் பதிவையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்
www.sunshinesignatures.blogspot.com
மிக்க நன்றி.. நிச்சயம் பார்க்கிறேன்.