முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா, மழை மற்றும் மரியான்



Blog பண்ணி பல நாள் ஆச்சு. Time இருந்தா mood இல்ல. Mood இருந்தா விஷயம் இல்ல. விஷயம் இருக்கும் போது time இல்ல. படிக்கதுக்கு வேற எக்கச்சக்கம் இருக்கு. டிசம்பர் 1ம் தேதி ஒரு dragon மாரி என்ன பாத்து சீறிகிட்டு இருக்கு (அன்னைக்கு தான் Mains exam). படிக்கனும் படிக்கனும் ஒன்னு விடாம படிக்கனும் (அதுக்கு index தான் படிக்கனும்னு நீங்க சொல்றது எனக்கு கேக்கல) :))

கடின உழைப்பு, கடவுள் அருள், நண்பர்களின் உதவிகள் இது போக முதல்நிலை த் தேர்வுல நான் பாஸ் பண்ணதுக்கு முக்கிய காரணம் என் அம்மா :) தினமும் என்ன encourage பண்ணியே பேசிட்டு இருப்பாங்க. Hard work பண்ணு.. பலனை எதிர்பாருனு சொல்லுவாங்க. Result வர்றதுக்கு முந்தின நாள், ‘திக் திக்னு இருக்குமானு நான் சொன்னதுக்கு எந்த அம்மாவா இருந்தாலும் சொல்லியிருக்கக் கூடிய பதில் கவலப்படாத. நீ பாஸ் பண்ணிருவ’. ஆனா எங்க மம்மி என்ன சொன்னாங்க தெரியுமா? ‘நீ ஹார்ட் வொர்க் பண்ணிருந்தா கண்டிப்பா பாஸ் பண்ணுவ. கவலப்படாத’ (துலாம் ராசி) தைக் கேட்டதுக்கு அப்புறம் என் இதயம் நிமிஷத்துக்கு 144 தடவ துடிக்க ஆரம்பிச்சது :))

இப்ப மெயின்ஸ் பரீட்சைக்கு நான் படிக்கனும்னு அவங்க சொன்ன டயலாக் முயற்சி திருவினையாக்கும் - முயற்சி பண்ணுனா வெற்றி கிடைக்கும்’. நம்ம தான் தமிழ் இலக்கியச் செம்மண் ஆச்சே. உடனே சொன்னேன். அது திருக்குறள்ம்மா.. முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்னு.திரும்பச் சொல்லுனு சொன்னாங்க. சொன்னேன். அவங்களுக்கு புரியல.. அப்படின்னா என்னபிள?’னு கேட்டாங்க. நமக்குத் தான் அது போதுமே! :))

அம்மா அம்மா.. முயற்சி பண்றவங்களுக்கு வெற்றி கிடைக்கும். முயற்சி இல்லாம இருந்தா துன்பம் தான் கிடைக்கும்னு அர்த்தம்மா. ரெண்டாவது பகுதிய நீங்க விட்டுட்டீங்கனு சொன்னேன். அதுக்கு உடனே எங்கம்மா சீரியஸா சொன்ன பதில் நல்ல விசயத்தை மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். கெட்ட விசயத்தையெல்லாம் யாரும் எனக்கு சொல்லித் தரல’. தொப்பி தொப்பினு எனக்குள்ள இருந்த அந்த சின்ன சுபத்ரா என்ன அசிங்கப்படுத்திச் சிரிச்சா. வேற என்ன? :(

அப்புறம், மூனு நாளைக்கு முன்னாடி ஒரு ராத்திரி சென்னைல பயங்கர மழை. உங்க ஊர் மழை எங்க ஊர் மழை இல்ல.. அதகளம். நான் தங்கியிருக்கிறது மாடியோட சேர்ந்த ஒரு ரூம். அப்ப தான் ஒரு ஐடியா தோனுச்சு. எத்தன நாள் தான் ஜன்னல் கம்பிக்கு பின்னாடி நின்னு க்ரீன் டீ குடிச்சிக்கிட்டே மழையை ரசிக்க? முழுசா நனைஞ்சுத்தான் பாப்பமேனு. அதுக்கப்புறம் நடந்தத கேட்கவா வேணும். மாடில லைட் எல்லாம் அணைச்சிட்டு நனைஞ்சுகிட்டே இருட்டா இருந்த வானத்தை நிமிர்ந்து பார்க்குறப்போ முகத்துல சொட்டுச் சொட்டா விழுந்த மழையை நிறைவா ரசிச்சது அன்னைக்குத் தான். மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்து மொத்தமா மழையில நனைஞ்சாச்சு. நல்ல வேளை காலையில உடம்புக்கு ஒன்னும் ஆகல. மழை நல்லது :)

அப்புறம் Green Tea ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நிறைய antioxidants இருக்கு. Caffine content ரொம்ப கம்மி. உடம்புல Metabolic rate அதிகமாக்குதாம். அதனால ஏகப்பட்ட நன்மைகள் கண்கூடாவே பாக்குறேன். நீங்களும் try பண்ணிப் பாருங்க. நான் TajMahal – Honey Lemon flavour வாங்குனேன். அப்புறம் இப்போ ஊட்டில வாங்குன ஒரு Leafy (இலையிலையா இருக்கும்) Green Tea யூஸ் பண்றேன். ஒரே ஒரு விஷயம்.. Anaemic-கா இருக்குறவங்க, sugar, pressure எல்லாம் ரொம்ப low-வா border-ல இருக்குறவங்க வெறும் வயித்துல க்ரீன் டீ குடிக்காதீங்க. அது சட்டுனு pressure இன்னும் லோவாக்கிருமாம். :(


Then, மரியான் படம் பார்த்தேன். எனக்கென்னவோ படத்துல ஒரு பிடிப்பே வரல. பனிமலர் பார்வதிக்காகவும் தனுசுக்காகவும் ஒருதடவ பார்க்கலாம். அதுக்கப்புறம் பார்த்தா சரியான தொம்ச.. sorry இம்சையா தான் இருக்கும் போல. Dialogues-ல தூத்துக்குடி slang சரியா set ஆகல. ரொம்ப artificial-லா தெரிஞ்சிச்சு. பனிமலரோட Eye make-up, duplicate மூக்குத்தி (sometimes on left side of the nose & sometimes right), கடல் சம்பந்தபட்ட காட்சிகள், A.R. Rahman’s background music, songs எல்லாம் செம :) அப்பப்ப light-டா அழவைக்கிற சீன்ஸ் வேற. ஆனா கண்ணுல lens & kajal போட்ருந்ததால நான் அழல ;)

சரி அடுத்த பதிவில் சந்திக்கலாம். யாரங்கே! சூடா ஒரு க்ரீன் டீ ப்ளீஸ்ஸ்!! :-* (யாரையும் காணோம் நானே போறேன் tata bye see u) :) :) :)

கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
கடினபட்டு படிக்கும் உங்களுக்கு நான் க்ரின் டீ போட்டு எடுத்து வரலாமுன்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க tata tea buy பண்ண போறீங்கன்னு அதை தப்பு தப்பா இப்படி டைப் பண்ணிட்டு போயிட்டீங்க tata bye see u

ஒகேங்க படிச்சதுல மண்டை குழம்பி போயிருக்கும்.. இனிமமேலும் குழம்பாமல் நன்றாக் படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Avargal Unmaigal

Post எழுதுன எனக்கே அந்த நிலைமைனா அதைப் படிச்ச உங்க நிலைமை..பாவம் தான் :))
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மழையில் நனைந்தது...

கிரீன் டீ...

அம்மாவின் அரவணைப்பு...

மரியான்...

படிப்பு...

அனுபவங்கள் அருமை....
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
மிக இயல்பான நடையில்
சொல்லிச் சென்றவிதம் இதம்
தொடர வாழ்த்துக்கள்
கார்த்திக் சரவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
அனுபவங்களை பளிச்னு சொல்லியிருக்கீங்க சகோதரி... ரசித்துப் படித்தேன்... நன்றி..
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
குற்றலாம்ள செம மழ நல்லா நனைந்தேன்... குடை நல்லது :-)

//மழை நல்லது :)// ஒருவேள ஏதாவது ஆகியிருந்தா என்ன மாதிரி குடை நல்லதுன்னு சொல்லிருபீங்களோ

ப்ர்லிம்ஸ் பாஸ் பண்ணினதுக்கு நீங்க மட்டும் ஸ்வீட் எடுத்து கொண்டாடக் கூடாது.. எங்களுக்கு எப்போ ட்ரீட்

மரியான் சொன்னாலும் சொல்லாட்டாலும் சரியான தொம்ச தான்... ரஹ்மான் வேற அப்பபோ நெஞ்சுக்குள்ள நியாபகபடுத்தி ஒரே கடல் எபெக்ட் தான்...

அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
எழுதப்போகும் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
mohan baroda இவ்வாறு கூறியுள்ளார்…
Congratulations for passing the prelims. Best of luck for mains.
Your way of writing is quite simple and very interesting.
சிவ ஆனந்த கிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
"இது போக முதன்மைத் தேர்வுல நான் பாஸ் பண்ணதுக்கு "

அது முதல்நிலை தேர்வு .. மெயின் தேர்வு என்பதே முதன்மை தேர்வு
சிவ ஆனந்த கிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறிய திருத்தும்

முதல்நிலை தேர்வுக்கு(Prelims) முதன்மை தேர்வு(mains) என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..

சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@sivaananth

நன்றி சிவா. திருத்தியாச்சு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...