முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பதிவுலகத் தோழர்களே..

என்னவோ நான்  “ இது கதையல்ல நிஜம் ”னு ஒரு பதிவு போட்டதைப் பத்தி.. ”இதெல்லாம் பொய், நம்பாதே.. ரொம்ப அப்பாவியா இருக்க.. அவங்கள பிச்சையெடுக்குறதுக்கு ஊக்குவிக்காத..” அப்படின்னும் ”சே.. என்ன ஒரு தாராள குணம்.. பத்து ரூபா கொடுத்திருக்கியே..” அப்படினு எல்லாம் நிறைய டையலாக் பேசினீங்களே.. மகா ஜனங்களே.. இங்க வாங்க. இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க. http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html 2002-ம் ஆண்டில் உயர்தர நட்சத்திர உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கான (Chef) சிறந்த விருதைப் பெற்று சுவிட்சர்லாந்து சென்று வேலை பார்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றார் நம் கதையின் ஹீரோ.  சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார். ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்...

இது கதையல்ல நிஜம்

பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன் . " நான் கிளம்பவா ?" என்ற தம்பியைத் திரும்பிப் பார்த்தேன் . " ம்ம் சரி . பார்த்துப் போ " " சரிக்கா . போய்ச் சேர்ந்த உடனே போன் பண்ணு " என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டுக் கிளம்பினான் .

வெட்கம் பிடிக்கவில்லை

வெட்கம் உனக்குப் பிடிக்காது என்கிறாய்   விலக்க முயன்று தோற்றுத் தோற்று அதற்கொரு வெட்கம் புதிதாய்  முளைக்க வெட்கமே உனக்குப் பிடிக்காது என்கிறாய்..  * *

பறக்கும் தட்டு

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :-) நானும் ப்ளாக்-அ ஆரம்பிச்சு இவ்வளோ நாளாச்சு. எதாவது ஒரு நல்ல போஸ்ட் போடலாம்னா எதுவுமே தோனமாட்டேன்னது. சரி.. 'பேசுகிறேன்'-னு தலைப்ப வச்சுக்கிட்டு பேசாமலே இருந்தா நம்ம followers-குக் கோபம் வருமேனு (என்ன.. பேசினாத் தான் வருமா?) சட்டு புட்டுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டேன். ஐன்ஸ்டீன் சொல்லிருக்கார்.. "There are two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle". இதை நிறைய தடவ நான் யோசிச்சுப் பார்க்கிறதுண்டு. சின்ன வயசுல பார்த்தீங்கனா பாரா பட்சம் இல்லாம எல்லா விஷயமுமே நமக்கு அதிசயமாத் தான் தெரியும். அதிலும் அதிகம் பேசாத (என்னை மாதிரி) குழந்தைகள், தான் நினைக்கிறத எல்லாம் யார்கிட்டயும் கேட்கவும் செய்யாது. மனசுக்குள்ளயே போட்டு future reference-காக பூட்டி வச்சிரும். இப்படி நடந்த ஒரு விஷயம்.. அப்ப எனக்கு வயசு 4 இருக்கும். (ஐயோ.. ஓடிப் போயிராதீங்க. முழுசாக் கேளுங்க). இராத்திரி எத்தன மணி இருக்கும்னு தெரியாது. நடு தூக்கத்துல எழுந்த...

கவிதைகள்

கட்டிய புடவையோடு வாழ்க்கைப்பட கைகொடுத்தது வறுமையின் நிறம்  *** "பட்டினி" கவிதைக்கு கிடைத்த பரிசு காலித் தட்டு *** பஞ்சு மெத்தை தோற்றுப் போனது பழைய சேலையிடம் *** மழையில் வெளுக்காத வண்ணத்துப்பூச்சி வெளுத்தது மனதை. *** யாரென்று தெரியவில்லை அசைத்த கையோடு ரயிலுக்குள் நான் *** முதுகில் குத்தியவனை முதுகால் தாங்கியது வண்டியில் மாடு *** வியர்வையைத் துடைத்த அழுக்குச்சட்டையால் மணத்தது வெள்ளைச்சட்டை *** உறங்கிய தாயின் உறங்காச் சேயை தாலாட்டிச் சிரித்தது காற்றாடிச் சத்தம் *** கடலில் கலவரம் விஷமச் சிரிப்புடன் வெள்ளை நிலா. *** கதிரவனுக்கும் கடலுக்கும் கலவரமில்லாக் கலப்புத் திருமணம் இடம்: தொடுவானம் * *

கலங்கப்போவது யாரு?

”கலங்கப்போவது யாரு” வணக்கம்.. வந்தனம்.. வெல்கம் டு "கலங்கப்போவது யாரு!" நான் உங்க அபிமானத்துக்குரிய தேஜா. அண்ட் இந்த நிகழ்ச்சிய பற்றிச் சொல்லணும்னா...ம்ம் பேரக் கேட்டவுடனே தெரிஞ்சிருக்கும் இது ஒரு ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சினு! சரி, நம்ம நிகழ்ச்சியில இது வரைக்கும் 999 எபிசோடுகளை வெற்றிகரமாகக் கடந்து இன்னைக்கு 1000 -வது எபிசோடுக்கு அடி வைத்திருக்கிறோம்....சாரி அடியெடுத்து வைத்திருக்கிறோம்.  இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட பல ஜோடிகள் மிக அறுவையாக.....மன்னிக்கவும் மிக அருமையாக விளையாடித் தோற்றுப்போனாலும் துரதிர்ஷ்ட வசமாக இந்தக் கடைசிச் சுற்றுவரை  இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். ஏன் துரதிர்ஷ்டம்னு சொல்றேன்னா இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு பரிசுகளாய் ஒரு டேபிள்டாப் கிரைண்டர்,  ஒரு வேக்கும் கிளீனர், ஒரு வாஷிங் மெஷின், மேலும் குட்டிக் குட்டிப் பரிசுகள் பல காத்திருப்பதால் இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்குச் சற்றே ஆபத்து அல்லது அபாயகரமான சூழல் காத்திருக்கின்றது என்றே கருதப்படுகிறது. இதுவரை வேலைக்கு ஆள் வைத்து செய்துகொண்டிருந்த வீடுகளில் தற்பொழுது வழக்கம்ப...

பேருந்தில் நீ எனக்கு..

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன. சாலையில் சென்ற பெண்களின் உடைகளை எல்லாம் காற்று களவாடப் பார்த்தது. சிக்கென்று பிடித்துக் கொண்டு சென்றனர் அனைவரும். மறு கையில் குடை வேறு எதிர் திசையில் மடங்கிக் கொண்டது. குழந்தையோடு வரும் பெண்மணி அதன் கண்களை கை வைத்துப் பொத்திக் கொள்கிறாள். வெகு நாட்களாகத் திறக்கபடாமல் பூட்டி இருந்த டீக்கடை ஒன்று அனைவருக்கும் ஒதுங்க இடம் தந்தது. சிலர் எதிரில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அவரவர் பேருந்திற்காகக் காத்திருந்தபடி பாதி நனைந்திருந்தோம். "மழை என்னமா பெய்யுது.. நனையறது நல்லாத் தான் இருக்கு.  ஒடம்புக்கு ஏதும் ஆகலைனா பரவால்ல.." எண்ணியவாறே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த அனைவரும் ஆண்கள். கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் நிற்பது. ஒரு பக்கம் இந்த பயம். இன்னொரு பக்கம் பேருந்து வரவேண்டும் என்ற அவசரம். நொடிகள் யுகங்களாகத் தெரிந்தன.  கடைசியாகப் பேருந்து வந்தது. "ஐயோ.. இவ்வளோ கூட்டமா?" என்று எண...