முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

IAS தேர்வில் தமிழ் மாணவர்கள்




இந்த வருடத்திற்கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை UPSC நேற்று வெளியிட்டது. ஏறத்தாழ 1000 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வுக்குப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேறு சிறப்புத் தகுதிகள் எவையும் தேவையில்லை. தேர்வில் தோன்றுவதற்கான வயது வரம்பு, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வு மையங்கள் போன்ற தகவல்களை அறிவிப்பைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

IAS, IFS, IPS உள்ளிட்ட நாட்டின் மிகமுக்கிய Group ‘A’ மற்றும் சில Group ‘B’ குடிமைப் பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தேர்வு இவ்வருடம் மே மாதம் 26ம் தேதி நடத்தப்படவிருக்கிறது. இந்தியா முழுவதிலும் இருந்து அதிக அளவில் பட்டதாரிகள் இத்தேர்வில் கலந்து கொள்ளும் பலத்த போட்டி நிலவுவதாலும் தேர்வு முறையைப் பற்றிய சில வாதங்கள் அவ்வப்போது எழுந்து வருவதாலும் முக்கியத் தேர்வில் (Main Examination) சில மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக ஆணையம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து 2014 ஆம் வருடத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு குறிப்பிடப்பட்ட தினத்தில் வெளியாகாமல் காலம் தாழ்ந்து வரவிருந்ததால் 2013 ஆம் வருடமே மாற்றங்கள் வரும் எனத் தெரிந்துவிட்டது.

இச்சூழ்நிலையில் தான் நேற்று (05.03.2013) அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதநிலைத் தேர்வு (Preliminary Examination), முக்கியத் தேர்வு (Main Examination), நேர்முகத் தேர்வு (Personality Test or Interview) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் அவ்வப்போது மாற்றங்களைச் சந்தித்துவரும் இத்தேர்வில் முதநிலைத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டன. அதே வரிசையில் இப்போது முக்கியத் தேர்வின் பாடத் திட்டங்களும் சிறிது மாற்றங்களுடன் வெளிவந்துள்ளன.

பழைய முறை:
ஆங்கிலம், தமிழ், கட்டுரை, General Studies மற்றும் இரண்டு விருப்பப் பாடங்கள் ஆகியவை முக்கியத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து வந்தன. இவற்றுள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி (நமக்குத் தமிழ்) இரண்டும் Qualifying Papers. இவை இரண்டிலும் போதிய மதிப்பெண்கள் எடுத்திருந்தால் தான் விண்ணப்பதாரரின் மற்ற தாள்கள் திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். மீதம் இருக்கும் கட்டுரைத் தாள் + GS இன் இரண்டு தாள்கள் + இரண்டு விருப்பப் பாடங்களுக்குமான தலா இரண்டு தாள்கள் என மொத்தம் நான்கு தாள்கள் ஆகியவற்றின் மதிப்பெண்கள் மட்டுமே போட்டிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேலும் ஆங்கிலப் புலமை போதிய அளவில் இல்லாதவர்களும் பள்ளிகள்/கல்லூரிகளில் பிராந்திய மொழி மூலம் கல்வி கற்றவர்களையும் இத்தேர்வில் உற்சாகப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளுள் ஏதாவது ஒன்றை Medium ஆகத் தெரிவு செய்து தேர்வெழுதலாம் எனவும் இருந்தது. பொதுவாகக் கேள்வித்தாளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தி மற்றும் பொது மொழியான ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே கேள்விகள் அமையப் பெற்றிருக்கும். ஆனால் உதாரணத்திற்கு, தமிழ் மீடியத்தைத் தேர்வு செய்திருந்தால் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க, விடைகளை நாம் தமிழிலேயே எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

மூன்றாவதாக விருப்பப்பாடத் தேர்வு. 25 பாடங்கள் + 23 மொழி இலக்கியங்கள் ஆகியவற்றுள் இருந்து நமக்குப் பிடித்த ஏதேனும் 2 விருப்பப்பாடங்களைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

புதிய முறை:
            இவ்வருடத்துக்கான முக்கியத் தேர்வில் Regional Language மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு Qualifying Papers மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. பிராந்திய மொழியை (Tamil as a Qualifying Paper) நீக்கிவிட்டனர். ஆங்கிலத்தில் Comprehension மற்றும் Precis Writing ஆகியவை கொடுக்கப்பட்டு ஆங்கிலத் தாளும் போட்டிக்கான மதிப்பெண்ணில் சேர்த்துக் கொள்ளப்படும். General Studies இரண்டு தாள்களாக இருந்த நிலை மாறித் தற்பொழுது நான்கு தாள்களாக அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தரப்பட்டுள்ளது. முக்கியத் தேர்வுக்கான General Studies தாளிலும் Ethics மற்றும் Aptitude சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

            இரண்டாவது, Medium of Examination. எந்த மொழியிலும் தேர்வெழுதலாம் என இருந்தது அல்லவா? இவ்வருடத்தில் இருந்து இதில் சிறிது மாற்றம். அது என்னவென்றால், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, கல்லூரியில் பட்டப்படிப்பை எந்த மீடியத்தில் படித்தோமோ அந்த மீடியத்தில் தான் தேர்வெழுத வேண்டுமாம்! உதாரணத்திற்கு, நான் பள்ளிப்படிப்பு முழுவதும் தமிழ் மீடியத்தில் படித்திருந்தாலும் பட்டப்படிப்பை ஆங்கில மீடியத்தில் படித்துத் தேர்வு பெற்றிருந்தால் என்னால் இந்த IAS தேர்வைத் தமிழில் எழுத முடியாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியுமாம்.

            ஹிந்தியை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் மற்ற மாநிலத்தவர்க்கு இதனால் சொல்லிக் கொள்ளும்படியான பாதிப்பு ஏதும் இல்லை. நம் தமிழ் மொழியில் Technical Words முழுதாகக் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பெரும்பான்மையான கல்லூரிகள் ஆங்கில மீடியத்திலேயே பட்டப்படிப்பை வழங்குகின்றன. பள்ளி முழுவதிலும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் கூட ஆங்கிலம் (தமிழ் தவிர தாம் அறியும் இரண்டாவது மொழி) கற்றுக் கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பமாக எண்ணிக் கல்லூரிகளில் ஆங்கில மீடியத்தையே தேர்வு செய்யும் நிலையில் அவர்களுக்கு அந்த 3 () 4 வருடங்களில் ஆங்கிலத்தில் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான போதிய தொழில்நுட்ப அறிவு கிட்டுவதில்லை. மேலும் மிகச் சொற்ப அளவிலேயே தமிழ் வழிப் பாடத்திட்டங்களைக் கொண்ட கல்லூரிகள் நம் மாநிலத்தில் உள்ளன.

            இந்த நிலையில் இருக்கும் ஒரு மாணவனை, “கல்லூரியில் நீ ஆங்கில வழிக் கல்வி பயின்று தேரியதால் IAS தேர்விலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் தேர்வெழுத வேண்டும். தமிழில் எழுதக் கூடாதுஎன்று சொன்னால் ஹிந்தி என்றால் என்னவென்றே தெரியாத அவனது நிலை என்னவாகும்? இன்னொரு விஷயம் என்னவென்றால், முக்கியத் தேர்வில் எம்மொழியில் தேர்வெழுதியிருக்கிறோமோ அதே மொழியில் தான் நேர்முகத் தேர்வும் அமையும். தமிழ் மீடியத்தில் முக்கியத் தேர்வு எழுதினால் மட்டுமே நேர்முகத் தேர்வில் தமிழில் கேள்விகள் கேட்கப்பட்டுத் தமிழில் பதிலளிக்க அனுமதிக்கப்படும். இல்லையென்றால் ஆங்கிலம் () ஹிந்தியில் தான் நேர்முகத் தேர்வு அமைந்திருக்கும். எனவே மேலும் சிக்கல் தான்..

            மூன்றாவதாக, விருப்பப்பாடத் தேர்வு. முன்னாளில் முதனிலைத் தேர்வுக்கும் ஏதாவது ஒரு விருப்பப் பாடத்தைத் தெரிவு செய்து படிக்கும் கட்டாயம் இருந்த போது விருப்பப்பாடப் பட்டியலில் இலக்கியப் பாடங்கள் கொடுக்கப்படவில்லை. இந்த வருடம் முக்கியத் தேர்விலும் ஒரே ஒரு விருப்பப் பாடமே எடுக்க வேண்டும் என்னும் நிலை வரும் பட்சத்தில் அவ்வாறே இலக்கியப் பாடங்கள் இருக்குமா இருக்காதா என யோசித்துக் கொண்டிருந்தோம். பட்டப்படிப்பில் அந்த மொழி இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்திருந்தால் மட்டுமே அம்மொழி இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம். இல்லையென்றால் இலக்கியப் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாது என்னும் புதிய முறையும் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கியப் பாடங்கள் அதிக மதிப்பெண்களைத் தருவதால் தேர்வாணையம் இம்முடிவை எடுத்திருக்கலாம்.

            General Studies பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததோ, இலக்கியப் பாடங்களைத் தேர்வு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்ததோ கூட பரவாயில்லை. Medium of Examination இல் செய்துள்ள மாற்றத்தால் ஹிந்தி தெரியாத நம் தமிழ் மாணவர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள் என்னும் உண்மை Union Public Service Commission க்குத் தெரியுமா? தெரிந்து தான் இவ்வாறு செய்துள்ளார்களா? இதனை நம் மாநில அரசு கண்டுகொள்ளுமா? என்னும் கேள்விகள் நம்மைக் கலக்கம் கொள்ளச் செய்கின்றன.

 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Indha padhivai neenga oru IAS adhigaariya porupetru arasaangamun padhivu seiyungal.. Apodhu dhan oru vidivu pirakum endru naan nambugiren...
Erode Nagaraj... இவ்வாறு கூறியுள்ளார்…
is a translation available? to send to a friend of mine
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

What till then?
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Erode Nagaraj...

She might have seen the notification by now :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Vetri.. Vetri.. Subadhra IAS Vetri..
"http://timesofindia.indiatimes.com/india/Stung-by-row-UPSC-allows-regional-language-in-Main-exam/articleshow/19118009.cms"

Ennavo sonninga... Ipo happy ah ??
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

Yes :) :)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஐஏஎஸ் பாடத்திட்டம் பதிவிறக்கம் தருக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...