முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைகள்

நான் ரசித்த பிரமிள் , ஆத்மாநாம் , கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக ...

பழந்தமிழர்களின் வாணிகம்

தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாமல் வெளி நாட்டாரின் பழங்காலக் குறிப்புகளின் சான்றுகளும் உள்ளன . கி . மு . பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ்நாட்டுக் கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருள்களும் கொண்டு சென்றன . பழைய ஈப்ரூ (Hebrew) மொழியில் உள்ள துகி ( மயில் இறகு ) என்னும் சொல் “ தோகை ” என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு . “ அஹலத் ” ( வாசனைப் பொருள் ) அகில் என்னும் தமிழ்ச்சொல் திரிந்து அமைந்தது . ஆங்கிலத்தில் உள்ள சாண்டல் (Sandalwood), ரைஸ் (Rice) என்னும் சொற்கள் கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களாகிய சந்தனம் ( சாந்து ). அரிசி என்பவற்றின் திரிபுகளே . கி . மு . ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழியாகச் சென்றன . 

மருதாணி

மருதாணி.. இந்த வார்த்தையைக் கேட்டாலே அவ்ளோ சந்தோசமா இருக்கும் சின்ன வயசுல. அப்பமெல்லாம் இலையை அரைச்சு வைக்கிற மருதாணி தான். எல்லார் வீட்டுலயும் மருதாணி மரம் இருக்காது. எங்கயாவது தான் இருக்கும். யாரு வீட்டுத் தோட்டத்துக்குப் போனாலும் அங்க மருதாணி மரம் நிக்கானு தான் கண்ணு அலைபாயும்.

தமிழும் மலையாளமும்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் – இந்த நான்கு திராவிட மொழிகளுக்குள் இன்றும் ஏறத்தாழ ஐந்தாயிரம் சொற்கள் பொதுவாக உள்ளன! இலக்கணக் கூறுகள் பல பொதுவாக உள்ளன. சமஸ்கிருத மொழியின் கலப்பால் ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பே கன்னடமும் தெலுங்கும் தமிழ் மொழியிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டன. ஆனால் மலையாளமும் தமிழும் அவ்வளவு மிகுதியாக வேறுபடவில்லை. கேரளத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் அதிகமாயிற்று. அதற்குமுன் தமிழ் அங்கே ஆட்சி மொழியாகவும் கலைமொழியாகவும் இருந்து வந்தது. கேரள நண்பர்கள் மலையாளம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? கூர்ந்து கவனித்தால் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து பேசுவது தான் மலையாளம் எனத் தோன்றும் :-) பதினைந்து நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்டுவந்த சேர மன்னர்கள் ‘தமிழ்’ அரசர்கள். அதற்குப் பிறகு பாண்டிய அரச மரபைச் சார்ந்த தமிழ் அரசர்களே ‘பெருமான்கள்’, ’பெருமக்கன்மார்’ என்ற பெயரோடு அங்கே பத்தாம் நூற்றாண்டுவரையில் ஆண்டுவந்தார்கள். தொல்காப்பியம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்டபோது தலைவராக இருந்த ‘ திருவிதாங்கூர்த் தமிழ்ப்புலவர்’...

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்

பழந்திராவிடம் (Proto-Dravidian)

டாக்டர் மு . வ . வை அனைவரும் அறிவோம் . மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் . தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதச்சொல்லி சாகித்ய அகாதமி இவரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருமையான ஒரு படைப்பை உலகிற்கு வழங்கியுள்ளார் . அவரது உரைவழி தமிழ்மொழியின் வரலாற்றை நாம் பார்க்கலாம் .  தேடுக: Khyber Pass & Bolan Pass

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

அந்தா இந்தானு சொல்லி கடைசில தீபாவளி நாளைக்கே வரப்போவுது. மூனு வருஷம் குஜராத்ல தீபாவளி கொண்டாடிட்டு இப்பம் தான் திருநெல்வேலில அம்மா அப்பா தம்பிகளோட இந்த வருஷத் தீபாவளியைக் கொண்டாடப் போறேன். அதனால பயங்கர சந்தோஷத்துல இருக்கேன். வீட்டுல நாளைக்கு என்ன ‘ஸ்பெஷல்’னு இன்னுந் தெரியல. நானே குலாப் ஜாமூன் மிக்ஸ் வச்சு முதன்முறையா ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான். பார்க்கலாம். முன்னாடியே போயிருந்தா பக்கத்து வீட்டுக் குட்டீஸ்க்கு மெஹந்தி வச்சு உட்ருக்கலாம். தப்பிச்சிட்டாங்க ;-)       அத சாப்டு இத சாப்டுனு சொல்ற அம்மா, டிவி ப்ரொகிராம் பார்த்து கமெண்ட்ஸ் சொல்லிட்டு இருக்குற அப்பா, கைய புடிச்சு இழுத்துட்டுப் போய் வெடி(பட்டாசு) போட வைக்கிற தம்பி, மஞ்சள் தடவுன புது டிரெஸ்ல ரவுண்ட்ஸ் வர்ற சின்ன பிள்ளைங்க, ஃப்ரெண்ட்ஸ்னு சந்தோஷமா இருக்கப் போகுது. அதே சந்தோஷத்தோட உங்களுக்கும் என் மனம் நிறைந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

தோழி கூற்று

ஐ . ஏ . எஸ் . தேர்வுக்கு இந்திய மொழிகள் சிலவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு முக்கியப்பாடமாக எடுத்துப் பரீட்சை எழுதலாம் . அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் பாடத்திட்டங்களைப் பரவலாகப் படித்துப் பார்த்தபோது , தமிழுக்கு இருக்கும் ஒரு சிறப்பு புலப்பட்டது . உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அது . என்னன்னா , தமிழில் மிக மிக த் தொன்மையான இலக்கியங்கள் இருப்பது தான் ! தொன்மையான இலக்கியங்கள்னு சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது “சங்க இலக்கியங்கள்” .